முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டெல்லி காவல்துறையின் புதிய காவல் ஆணையராக சஞ்சய் அரோரா நியமனம்

டெல்லி காவல்துறையின் புதிய காவல் ஆணையராக 1988 பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சய் அரோரா மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை நியமித்துள்ளது   

சஞ்சய் அரோராவுக்கு 2004 ஆம் ஆண்டு  காவல்துறைப் பதக்கம், 2014 ஆம் ஆண்டு சிறப்பான சேவைக்காக குடியரசுத் தலைவரின் காவல்துறை பதக்கம், காவல்துறை சிறப்புப் பணிக்கான பதக்கம், அன்ட்ரிக் சுரக்ஷா பதக் மற்றும் ஐநாவின் அமைதியை நிலைநாட்டும் பணிக்காக பதக்கம் உள்பட பல விருதுகள் பெற்றவர்.

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ITBP) தற்போதைய இயக்குநர் ஜெனரலான அரோரா, டெல்லி காவல் ஆணையராக ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதியான இன்று திங்கள்கிழமை பொறுப்பேற்க உள்ளார்.            சந்தனக் கடத்தல் காரணமாக அதிரடி படையினர் மூலம் கொல்லப்பட்ட வீரப்பனை பிடிக்க அமைத்த படையில் முக்கிய பங்காற்றியவர்.


இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் அரோரா, 1988-ஆம் ஆண்டில் ஐபிஎஸ் முடித்து தமிழ்நாடு பிரிவின் அதிகாரியாகப் பணியாற்றினார். எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பி.டெக் பட்டம் பெற்றவர். இந்தோ - திபெத் எல்லை படையின் (ஐடிபிபி) இயக்குநர் ஜெனரலாக பணியாற்றி வந்தார். தற்போது

டெல்லி பொறுப்பிலிருந்த ராகேஷ் அஸ்தானா ஐபிஎஸ் நேற்றுடன் பணி ஓய்வு பெறுவதை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் சஞ்சய் அரோராவை டெல்லி காவல்துறை ஆணையராக நியமித்துள்ளது. டெல்லியின் 25-வது காவல் துறை ஆணையராக சஞ்சய் அரோரா இன்று பதவியேற்கிறார்.     வரும் 2025-ஆம் ஆண்டு வரை இவர் இப்பதவியில் தொடர்வார்.           டெல்லி விதிகளின்படி வேற்று மாநிலப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு பணியாற்ற முடியாது.

இதனால், சஞ்சய் அரோரா ஏஜிஎம்யுடி (அருணாச்சல், கோவா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் யூனியன் பிரதேசம்) பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். டெல்லியில் நியமிக்கப்படுவதற்காக மாநிலப் பிரிவிலிருந்து மாற்றப்பட்ட மூன்றாவது வது அதிகாரி சஞ்சய் அரோரா. இவருக்கு முன் ராகேஷ் அஸ்தானா குஜராத் பிரிவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டார்.

அஸ்தானாவை போலவே மிகவும் திறமையான அதிகாரியாகக் கருதப்படுகிறார் சஞ்சய் அரோரா. இவர் தமிழகத்தின் எஸ்டிஎப் எனும் அதிரடி படையின் முக்கிய அதிகாரியாக இருந்த போதுதான் சந்தனக் கடத்தல் செய்த வீரப்பன் கொல்லப்பட்டார். வீரப்பன் வேட்டைக்கு தலைமை வகித்த ஐபிஎஸ் அதிகாரி விஜய்குமாருக்கு மிகவும் நெருக்கமானவராக சஞ்சய் அரோரா கருதப்பட்டார். மேலும், முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு முதன்முதலில் கறுப்புப் பூனை படை பாதுகாப்பு அளிக்கப்பட்ட போது அப்படையை ஏற்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர்.

கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் அயல்பணியில் ஐடிபிபியின் கமாண்டன்ட்டாக உத்தராகண்டிலும், பயிற்சியாள ராக முஸோரியின் ஐடிபிபி பயிற்சிக் கல்லூரியிலும் பணியாற்றிய சஞ்சய் அரோரா.

கோயமுத்தூர் நகரில் காவல் துறை ஆணையராக 2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை இருந்தார். டிஐஜியாக பதவி உயர்வு பெற்றவர், விழுப்புரம் சரகத்திலும், தமிழகத்தின் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவிலும் பணியாற்றினார். தனது வீரதீரச் செயல்களுக்காக தமிழகம் மற்றும் மத்திய அரசின்பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் 

சென்னை மாநகரக் காவல் துறையின் கூடுதல் ஆணையராக குற்றவியல் பிரிவு, தலைமையகம் மற்றும் போக்குவரத்துப் பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். தனது பதவி உயர்வுக்கு பின் தமிழ் நாடு காவல் துறையின் தலைமையக நிர்வாகம் மற்றும் ஆபரேஷன் பிரிவுகளின் ஏடிஜிபியாகவுமிருந்தார்.

மத்திய அரசின் அயல்பணியில் எல்லைப் பாதுகாப்பு படையில் ஐஜி ஆபரேஷன், சத்தீஸ்கரில் நக்ஸல் வேட்டையாடும் சிஆர்பிஎப் ஐஜியாகவும் இருந்தார். இதே படையில் ஏடிஜியாகவும் பதவி உயர்வு பெற்றார். ஜம்மு-காஷ்மீர் சிறப்பு பிரிவின் இயக்குநர் ஜெனரலாகவும் பணியாற்றினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த