பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் 2016 ஆம் ஆண்டு ஏற்படுத்திய பிரிவு 3, உட்பிரிவு 2, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறுவதாகும் பிரிவு 5 முன் தேதி அமலில் வராது என உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு
கறுப்புப் பணத்தைத் தடுக்கும் முயற்சியாக, ஜூலை மாதம் 2016 ஆம் ஆண்டில், மத்திய அரசால் அசல் சட்டத்தை திருத்த முடிவு செய்ததைத் தொடர்ந்து இந்திய நாடாளுமன்றத்தால்
"பினாமி பரிவர்த்தனைகள் (தடை) திருத்தச் சட்டம், 2016 நிறைவேற்றப்பட்டதன்பின், 1 ஆம் தேதி நவம்பர் மாதம் 2016 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் சட்டத்தின் விதிகளை அரசாங்கம் அறிவித்தது. கறுப்புப் பணம் (வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள்) மற்றும் வரி விதிப்புச் சட்டம், 2015 ஆம் ஆண்டு ஆகியவற்றுடன் பினாமிச் சட்டம் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் கறுப்புப் பணத்திற்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கு உதவுங்கள். 2016 சட்டம், தீர்ப்பளிக்கும் அதிகாரம் மற்றும் மேல்முறையீடுகளுக்கான மேல்முறையீட்டு நெறிமுறை போன்ற பாதுகாப்பு வழிமுறைகளையும் கொண்டது.
இந்தச் சட்டம் பினாமி பரிவர்த்தனைகளைத் தடை செய்கிறது, மேலும் பினாமி சொத்தின் நியாயமான சந்தை மதிப்பில் 25 சதவீதம் வரை நீட்டிக்கக்கூடிய இந்தச் சட்டத்தை மீறினால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுகிறது.பினாமி பரிவர்த்தனை தடை சட்டத்தில், 2016 ஆம் ஆண்டில் ஏற்படுத்திய சில திருத்தங்கள் தற்போது செல்லாதென்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது, . 'பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் 2016 ஆம் ஆண்டு ஏற்படுத்திய பிரிவு 3, உட்பிரிவு 2, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறுவதாக உள்ளதெனவும்; மேலும், பிரிவு, 5 ஐயும், பின்னோக்கி அமல்படுத்த முடியாது' அதாவது பிராஸ்பெக்ட்ரி எபக்ஃட்ஸ் தான் ரெட்ராஸபக்ஃட்ரி எபக்ஃட்ஸ் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பின் சாராம்சத்தின் படி, நாட்டில் ஊழல் புரிந்து, பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவிக்கும் அரசியல்வாதிகளையோ, அரசியல் செல்வாக்கு உள்ளவர்களையோ, செல்வந்தர்களையோ, ஆட்டவோ, அசைக்கவோ, தண்டனை பெற்றுத் தரவோ, அவர்கள் பினாமி பெயரில் வாங்கிய சொத்துக்களை அரசு கையகப்படுத்தவோ முடியாது என்பதை, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் எடுத்துரைத்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பில் இருந்து, சாமானியர்கள் தெரிந்து கொள்ள வேண்டியதென்றால், அரசியல் சட்டத்தை உருவாக்கும் போதே, அதை உருவாக்கியவர்கள், இலஞ்ச பிசாசுகளுக்கும், ஊழல் பெருச்சாளிகளுக்கும் எந்தகால கட்டத்திலும் பிரச்னை வராத வகையில், சிறைத் தண்டனை கிடைத்து விடாத வகையில், மிக மிக எச்சரிக்கையாக வடிவமைத்திருக்கின்றனர் என்பது மட்டுமே தெளிவாகிறது. உலகின் வேறு எந்த நாட்டிலாவது, ஊழல் பெருச்சாளிகளையும், இலஞ்சப் பிசாசுகளையும் காப்பாற்றும் வகையில், அரசியல் சட்டத்தை வடிவமைத்து இருக்கின்றனரா என்பதும் தெரியாது ஆனால், வடிவமைத்து இருக்கின்றனர்.
அரசியல்வாதிகள் இலஞ்ச,- ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டு, கைதாகும் போது, முகத்தில் கொஞ்சமும் கவலையோ, வருத்தமோ, பயமோ இல்லாமல், உள்ள ரகசியம், இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக வெட்ட வெளிச்சமாகிறது.இப்படிச் சொல்வதற்கு வருத்தமாகத்தானுள்ளது.
கருத்துகள்