முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனியார் வங்கிக் கொள்ளையில் காவல்துறை ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் 3.5 கிலோ தங்கம்

தனியார் வங்கிக் கொள்ளையில் காவல்துறை ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் 3.5 கிலோ தங்கம் சிக்கியது

சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் காவல் ஆய்வாளர் அமல்ராஜிடம் விசாரணை நடந்து வருகிறது. அவரின் வீட்டிலிருந்து 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது காவல்துறையில் மாத்திரம் அல்ல பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கம், ரசாக் கார்டனிலுள்ள தனியார் வங்கிக் கிளையில் ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களைக் கட்டிப்போட்டும் 32 கிலோ தங்க நகைகளை திருடர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வங்கியின் கிளை மேலாளர் சுரேஷ் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்ததன் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிசிடிவி காணொளிப் பதிவுகளையும் ஆய்வுசெய்தனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் அன்பு, இணை ஆணையர் ராஜேஸ்வரி, அண்ணாநகர் துணை ஆணையர் விஜயகுமார் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன

தனிப்படைக் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ்( வயது 30), பாலாஜி (வயது 28) ஆகியோர் ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 18 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கொள்ளை சம்பவத்தில் மாஸ்டர் மைன்ட்டாகச் செயல்பட்ட சென்னை பாடியைச் சேர்ந்த அதே வங்கியின் கஸ்டமர் கேர் மேலாளராக பணியாற்றிவந்த முருகன், திருமங்கலம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரையும்  கைது செய்தனர். அதையடுத்து கொள்ளையடித்த தங்க நகைகளை கோயமுத்தூரில் விற்கச் சென்ற முருகனின் கூட்டாளியான சூர்யாவையும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் 31 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தனிப்படை காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் இன்னும் சிலரைத் தேடி வந்த நிலையில் அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக செங்கல்பட்டு மாவட்டம் அச்சரம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றும் அமல்ராஜிக்கு தொடர்பிருக்கும் ரகசியத் தகவல் தனிப்படை காவல்துறையினருக்குக் கிடைத்தது. உடனடியாக இந்தத் தகவல் காவல்துறை உயரதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள் என்று மேலிடத்திலிருந்து உத்தரவு கொடுக்கப்பட்டதையடுத்து கைதானவர்கள் கொடுத்த  தகவலின் படி அச்சரம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் அமல்ராஜின் வீட்டுக்கு தனிப்படைப் காவல்துறையினர் சென்றனர். அவரின் வீட்டிலிருந்து 3.5 கிலோ தங்க நகைகளைக் பறிமுதல் செய்தனர். தங்க நகைகள் குறித்து ஆய்வாளர் அமல்ராஜிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். கட்டிபோடப்பட்ட வங்கி ஊழியர்கள்.. கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்க நகைகள்! 

ஆய்வாளர் அமல்ராஜ் குறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``தமிழக காவல் துறையில் கடந்த 1999-ஆம் ஆண்டு சாரபு ஆய்வாளராக அமல்ராஜ் பணிக்குச் சேர்ந்துள்ளார். இவர், மேல்மருவத்தூர், கும்மிடிப்பூண்டி, உத்திரமேரூர் ஆகிய இடங்களில் பணியாற்ற்யுள்ளார். இவர் திருநெல்வேலியைச்  சேர்ந்தவர் 2022 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை அச்சரம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றிவருகிறார்" என்றார்.

வங்கி கொள்ளை வழக்கை விசாரிக்கும் தனிப்படை காவல்துறையினரிடமிருந்து தகவல். ``ஆய்வாளர் அமல்ராஜிக்கும் கொள்ளை வழக்கில் கைதானவர்களுக்கும் எந்த வகையில் தொடர்பு என்று விசாரணை நடத்தப்பட்டதில், இந்த வழக்கில் கைதான சந்தோஷ் என்பவரின் உறவினர் தான் ஆய்வாளர் அமல்ராஜ் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் தான் அவரின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.தொடர்பாக அமல்ராஜிடம் விசாரித்த போது அவர் அமைதியாகவே இருக்கிறார். அதனால்தான் தகவல்களை சேகரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது" என்றனர்.இந்த நிலையில் அரும்பாக்கம் வங்கி கொள்ளை போன வழக்கில் திருப்பமாக செங்கல்பட்டு மாவட்டம் அச்சரம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஆய்வாளர் அமல்ராஜிக்குஅ தொடர்பிருக்கும் ரகசியத் தகவல் தனிப்படை காவல்துறையினருக்கு கிடைத்தது. உடனடியாக இந்தத் தகவல் காவல்துறை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள் என்று மேலிடத்திலிருந்து க்ரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கைதானவர்கள் கொடுத்த தகவலின்படி அச்சரம்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமல்ராஜின் வீட்டுகு தனிப்படை காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இந்தக் கொள்ளை சம்பவத்தில் மாஸ்டர் மைன்ட்டாக செயல்பட்ட சென்னை பாடியைச் சேர்ந்த அதே வங்கியில் கஸ்டமர் கேர் மேலாளராக இருந்த முருகன், திருமங்கலம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரையும் காவல்துறை கைது செய்தனர். அதையடுத்து கொள்ளையடித்த தங்க நகைகளை கோயமுந்தூரில் விற்பனை செய்யச் சென்ற முருகனின் கூட்டாளியான சூர்யாவையும் கைது செய்தனர். இந்த வழக்கில் 31 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தனிப்படை போலீஸார் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் இன்னும் சிலரை  தேடி வந்தனர்.

சென்னை அரும்பாக்கத்தில் நடந்த வங்கி கொள்ளையில் ஆய்வாளர் அமல்ராஜிடம் விசாரணை நடந்து வருகிறது. அவரின் வீட்டிலிருந்து 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது காவல்துறையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த