சென்னையில் விதிகளை மீறிக் கட்டப்படும் 6,500 க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் 1,200 கட்டிடங்களை சீல் வைக்க நடவடிக்கை
சென்னையில் விதிகள் மீறிய நிலையில் கட்டப்படும் 1,400 க்கும் மேற்பட்ட கட்டிடங்களின் கட்டுமானப் பணியை நடத்தும் நிறுவனங்கள் நிறுத்த சென்னை பெருநகர மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
மேலும், 1,200 கட்டிடங்களை சீல் வைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு பெருநகர திட்டக் திட்ட அனுமதி மற்றும் கட்டிட அனுமதி மாநகராட்சியின் நகரமைப்பு துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் 5,000 சதுர அடி வரையிலான கட்டிட அனுமதியானது சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களின் செயற்பொறியாளர்கள் மூலமாகவும், 5001 சதுர அடி முதல் 10,000 சதுர அடி வரை ரிப்பன் மாளிகையில் உள்ள நகரமைப்பு பிரிவின் மூலமாகவும் அளிக்கப்படுகிறது.இங்கு, கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி பெறுபவர்கள் கட்டிட மற்றும் திட்ட அனுமதியில் குறிப்பிட்டுள்ளவாறு அளவு மற்றும் விவர குறிப்பின் அடிப்படையின் தான் கட்டிடங்களை கட்ட வேண்டும். ஆனால், பலர் அதை மீறி கட்டிடம் கட்டி வருகின்றனர். இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி, விதிமீறல் கட்டிடங்களுக்கு சீல் வைத்து வருகின்றனர். அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் தற்போது சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் சுமார் 1,400க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது தெரியவந்துள்ளது. எனவே, இந்த கட்டிடங்களில் கட்டுமான வேலையை நிறுத்த வேண்டும் என 5 நம்பர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், விதிமீறி கட்டிய 1,200 கட்டிடங்களுக்கு சீல் வைக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் 3,500 க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு பணி நீக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 56 கட்டிடங்களுக்கு சிஎம்டிஏ ஒப்புதலில் மேல்முறையீட்டு முறைப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 169 கட்டிடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி மொத்தம் சுமார் 6,500 கட்டிடங்களில் மாநகாராட்சி சார்பில் தன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்று விதிமீறல் கட்டிடங்கள் நாள்தோறும் மாநகராட்சி அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட திட்ட வரைபடத்தின்படி கட்டிடங்களை கட்ட வேண்டும். விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களை மூடி சீல் வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊழல் செய்யாத ஊழியர் மட்டுமே இதுபோன்ற நல்ல அரசு சார்பில் நடவடிக்கைகள் பற்றி தெரிவிப்பது நடக்கும் மற்றவர்கள் பணம் சம்பாதிக்க அந்த பதவியை பயன் படுத்துவது மட்டுமே நடக்கும் அதைத் தடுக்கும் நேர்மையான நபர்கள் மாநகராட்சி பணியில் உண்டா என்பது தான் பலரது கவலை.
அதிகாரிகள் முறைகேடு மாநகராட்சி பகுதிகளில் கட்டிட விதிமுறைகளை பின்பற்றாமல் கட்டப்பட்டுள்ள ஏராளமான கட்டிடங்களுக்கு, பணிகள் முடிவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் அடிப்படையில் வரம்பு மீறிய கட்டிடங்களுக்கு குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் பெரியளவில் முறைகேடு நடந்துள்ளது. எனவே, மாநகராட்சி பகுதியில் விதிமீறிய கட்டிடங்களுக்கு பணி முடிவு சான்றிதழ் வழங்கிய மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்