நிதியமைச்சரின் தேசிய கொடி கட்டிய கார் மீது காலணியை வீசிய பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாநகர மாவட்ட மகளிர் அணி மூன்று பெண்கள் உள்பட பத்து நபர்கள் கைது
தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணியை
வீசியவர்களான
பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாநகர மாவட்ட மகளிர் அணிச் செயலாளரான விளாங்குடி அன்னை தெரசா தெருவைச் சேர்ந்த சரண்யா ( வயது 38), மற்றும் தெய்வானை என்பதும், அவர்களுக்கு உடந்தையாக பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியைச் சேர்ந்த மதுரை முடக்குச்சாலை நேதாஜி நகரைச் சேர்ந்த தனலட்சுமி (வயது 48) என்பதும் தெரியவந்தது.
ஆகவே தலைமறைவான அவர்களை தேட தனிப்படையினர் தொடர்ந்து முயன்று. அவர்களின் கைகளில் உள்ள செல்போன் டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.இவர்களில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மதுரை மாநகர் மாவட்டத் துணைத் தலைவர் குமார் என்ற மார்க்கெட் குமார் (வயது 48), பிரச்சாரப் பிரிவுச் செயலாளர் பாலா (எ) பாலசுப்பிரமணியன் (வயது 49), திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி ஜெயகருணா (வயது 39), கோபிநாத், (வயது 42), மற்றொரு கோபிநாத் (வயது 44), முகமது யாகூப் (வயது 42), முன்னாள் மாநகராட்சி மண்டலத் தலைவரும், தற்போது மதுரை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவர் ஜெயவேல் (வயது 55) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம், பேரையூர் பகுதியில் கட்சிக்காரர் ஒருவரின் வீட்டில் அவர்கள் பதுங்கி இருப்பது தெரிந்து, தனிப்படையினர் நேற்று அங்கு விரைந்தனர்.
பதுங்கியிருந்த வீட்டைச் சுற்றி வளைத்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதன் பிறகு இன்று சரண்யா உட்பட மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனர்.
இவர்கள் 3 பேருடன் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்