மதுரை- பழனி, மற்றும் பழனி- கோயமுத்தூர் ஒரே இரயிலாக இயக்கம்
மதுரையிலிருந்து பழனி வழியாக கோயம்புத்தூர் வரை சென்று கொண்டிருந்த பொதுப்பட்டிகளைக் கொண்ட இரயில் வண்டி கொரோனா தொற்று பரவலுக்குப் பின்னர் மதுரைக்கும் பழனிக்குமிடையே ஒரு இரயிலாகவும் பழனிக்கும் கோயம்புத்தூருக்குமிடையே மற்றொரு இரயிலாகவும் இயக்கப்பட்டது. இதனை ஒரே ரயிலாக இயக்க வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் விடுத்த கோரிக்கையை ஏற்று செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் மதுரையிலிருந்து பழனி பொள்ளாச்சி வழியாக கோயம்புத்தூருக்கு ஒரே இரயிலாக இயக்க கால அட்டவணையையும் உத்தரவும் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல கோயம்புத்தூர் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் அளித்த ஐந்து கோரிக்கைகளை உரிய முறையில் பரிசீலிக்க குறிப்பிட்ட துறையினருக்கு அனுப்பியுள்ளதாக
தெற்கு ரயில்வே பொது மேலாளர் கடிதம் மூலம்
திருச்செந்தூர் விரைவு வண்டியை கிணத்துக்கடவு கோயம்புத்தூர் வழியாக மேட்டுப்பாளையத்துக்கு இயக்க வேண்டுமென்றும்
மதுரை கோயம்புத்தூர் இடையே ஓடிக்கொண்டிருந்த நகர இடை விரைவு வண்டியை அதிவிரைவு வண்டியாக உயர்த்தி தூத்துக்குடியில் இருந்து மீண்டும் இயக்க இயக்கவும்
இராமேஸ்வரத்திற்கும் கோயம்புத்தூருக்கும் இடையே ஓடிக்கொண்டிருந்த விரைவு வண்டியை மீண்டும் உடனே இயக்க கோருவதுடன்,
அதிகாலையில் ஓடிக்கொண்டிருந்த திண்டுக்கல்லுக்கும் கோயம்புத்தூருக்குமான பழனி வழியாக ஓடிக்கொண்டிருந்த பயணிவண்டியை மீண்டும் இயக்கவும்.
திருநெல்வேலிக்கும் மேட்டுப்பாளையத்திற்கும் இடையே வாரம் ஒரு முறை இயக்கப்படும் தென்காசி கோயம்புத்தூர் வழியான விரைவு வண்டியை நிரந்தர வண்டி ஆக்கி வாரத்தின் அதிக நாட்கள் ஓடும் படி அமல்படுத்த வேண்டுமென உள்ள
கோரிக்கைகளை பொது மேலாளர் மக்கள் நலனை கருத்தில் கொண்டு குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் கருத்துக்களையும் மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு இயக்கிட வேண்டும் என்றும் அதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது
கருத்துகள்