முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடிமக்கள் தங்களின் சமூக ஊடக காட்சிப்படத்தை மூவண்ணக்கொடியாக மாற்றுமாறு பிரதமர் வலியுறுத்தல்

குடிமக்கள் தங்களின் சமூக ஊடக காட்சிப்படத்தை மூவண்ணக்கொடியாக மாற்றுமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்

வீடுகள் தோறும் மூவண்ணக்கொடி என்ற  கூட்டான இயக்கத்தின் ஒரு பகுதியாக  குடிமக்கள் தங்களின் சமூக ஊடக காட்சிப்படத்தை மூவண்ணக்கொடியாக மாற்றுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

 ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“ஆகஸ்ட் 2-ம் நாளான இன்று சிறப்புமிக்கது! சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப்பெருவிழாவை நாம் கொண்டாடும் தருணத்தில் நமது மூவண்ணக்கொடியைக் கூட்டு இயக்கமாக கொண்டாடுவதற்கு வீடுகள் தோறும் மூவண்ணக்கொடி என்பதற்கு நமது நாடு தயாராகியுள்ளது. எனது சமூக ஊடக பக்கங்களின் காட்சிப்படத்தை நான் மாற்றியிருக்கிறேன். இதையே நீங்கள் அனைவரும் செய்யுமாறு வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். இச் சூழலில் 


  வீடுகளில் தேசியக் கொடி திட்டம்

சுமார் 20 கோடி வீடுகளில் கொடி ஏற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயம்.

இந்தியாவில்  தற்போது 4 கோடி கொடிகள் மட்டுமே உள்ளன என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) தெரிவித்துள்ளது. மீதமுள்ள கொடிகளின் ஆர்டரை மாநில அரசோ, இந்திய அரசோ அவர்களின் மட்டத்தில் தயாரித்து விற்பனை செய்யுமிடத்திற்கு அனுப்ப வேண்டும். மாநில அரசு விரும்பினால், மாநிலத்தின் தேவைக்கேற்ப மத்திய அரசிடம் மொத்தக் கொடிகளை கோரலாம் அல்லது தானே கொடிகளுக்கு ஏற்பாடு செய்யலாம்.

மத்திய அரசின் கூற்றுப்படி, கொடிகள் மூன்று அளவுகளில் கிடைக்கும். மூன்றின் விலையும் மாறுபடும். ரூபாய்.9, ரூபாய்.18, ரூபாய்.25 க்கு கிடைக்கும்..

கொடி தயாரிக்கும் நிறுவனங்கள் ஆரம்பத்தில் இந்தக் கொடிகளை மத்திய மாநில அரசுகளுக்கு கடனாக வழங்கும்.

குடிமக்கள் தங்கள் சொந்தப் பணத்தில் கொடியை வாங்க வேண்டும்.

மக்கள் விரும்பினால், மொத்தமாகக் கொடிகளை வாங்கி மற்றவர்களுக்குப் பரிசளிக்கலாம். கார்ப்பரேட் சமூகப் பொறுப்பின் கீழ் இதைச் செய்யலாம்.

உள்ளாட்சிகள், கடைக்காரர்கள், பள்ளிகள், கல்லூரிகள் இதில் இணைய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் அஞ்சல் நிலையங்களிலும் கொடிகள் கிடைக்கும்.

இந்திய அரசின் இலக்கு 20 கோடி வீடுகளில் கொடி ஏற்றுவது. கொடியின் குறைந்தபட்ச விலை 10 ரூபாயாக இருந்தாலும், மொத்தமாக 200 கோடி ரூபாய் இந்த திட்டத்தில் செலவிடப்படும்.

கொடிகளை வாங்கும் மக்களிடமிருந்து இந்த 200 கோடி ரூபாய் வரும்.

இந்தியாவில் இவ்வளவு அதிகமான கொடிகளை ஒரே நிறுவனத்தால் தயாரிக்கமுடியாது.

இதற்காக சிறு, குறு தொழில்களுடன் தொடர்புடைய பல சுயஉதவிக் குழுக்கள், வணிகர்கள், வணிக நிறுவனங்களுக்கு டெண்டர்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த முழு இயக்கத்தையும் முழுமையாக உதாரணத்துடன் புரிந்துகொள்வது அவசியம் 

ராஜஸ்தான் அரசு ஒரு கோடி வீடுகளில் கொடிகளைப் பறக்க விட இலக்கு நிர்ணயித்துள்ளதில் 70 லட்சம் கொடிகளை மத்திய அரசு வழங்க வேண்டுமென்றும், மாநில அரசு 30 லட்சத்தை ஏற்பாடு செய்யுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், தனது ஏழு மண்டலங்களுக்கான 70 லட்சம் கொடிகளை மத்திய அரசிடம் கேட்டுள்ளது.

ஆனால், மத்திய, மாநில அரசுகளுக்கிடையே சில பிரச்சனைகள் உருவாகின்றன.

அது 10 ரூபாயில் கொடி, கம்பு, எடுத்துச் செல்வதற்கு ஆகும் செலவு எல்லாம் அடங்கும். இந்தப் பணம் மிகவும் குறைவென்று சில நிறுவனங்கள் கருதுகின்றன. இதன் காரணமாக இந்திய அரசு மாநிலங்களுக்கு கொடியை மட்டுமே வழங்கி வருகிறது. அதுவும் சில இடங்களுக்கு மட்டுமே அளிக்கிறது, எல்லா மாவட்டங்களுக்கும் அல்ல.

இரண்டாவது பிரச்சனை பணம் செலுத்துவது. சில மாநில அரசுகள் கொடி விற்பனை செய்த பிறகு கொடி தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுப்பது பற்றிப் பேசின. இந்தச் சூழ்நிலையில், எல்லாக் கொடிகளும் விற்றுப் போகாவிட்டால், பணம் என்னவாகும் என்பது நிறுவனங்களின் அச்சமாக உள்ளது.

கொடி சட்டத்தில் மாற்றம்  டி.எம்.சி  தலைவரும் ஆர்.டி.ஐ ஆர்வலருமான சாகேத் கோகலே இந்த முழு திட்டத்தையும் ஓர் ஊழலாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றன் பின் ஒன்றாக நான்கு ட்வீட்கள் பதிவுசெய்தவர், இந்த இயக்கம், நரேந்திர மோதி அரசின் கார்ப்பரேட் நிறுவனங்களுடனான தொடர்பின் விளைவு என்று குறிப்பிட்டார். மேலும் இந்த இயக்கத்திற்காக இந்திய கொடி சட்டத்திலும் அரசு மாற்றங்களைச் செய்துள்ளதென்று கூறினார்.

இந்தியக் கொடிச் சட்டம் 2002 ஆம் ஆண்டின் படி, தேசியக் கொடியை கையால் நெய்த அல்லது கையால் நெய்யப்பட்ட துணிப் பொருட்களிலிருந்து மட்டுமே உருவாக்க முடியும். ஆகவே குறைந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான கொடிகளை உருவாக்குவது எளிதல்ல. 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தக் கொடி சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த மாற்றத்திற்குப் பிறகு இப்போது தேசியக் கொடியை, கையால் ராட்டை கொண்டு தயாரிக்கப்பட்ட, கையால் நெசவு செய்யப்பட்ட அல்லது இயந்திரத்தால் செய்யப்பட்ட பட்டு, பருத்தி, பாலியஸ்டர் துணிகள் மூலம் தயாரிக்கலாம்.

இந்தியாவில் பாலியஸ்டர் துணிகளை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நிறுவனம் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்  என்று சாகேத் கோகலே கூறுகிறார்.


இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுள்ள வெவ்வேறு ஜவுளி ஆலை உரிமையாளர்களுக்கு கொடிகள் தயாரிக்கும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது, இதில் ரிலையன்ஸ் நேரடியாக ஈடுபடவில்லை என்று பத்திரிகை வழி தகவல் தெரிவிக்கிறது..


கொடியை பெரிய அளவில் தயாரிக்க சம்மதித்துள்ள நிறுவனங்கள், பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க மற்ற வியாபாரிகளிடம் துணை ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பதிவில், "இந்தியாவின் சுதந்திரத்தின் ஆடை என்று நேரு வர்ணித்த காதி மூலம் தேசியக் கொடியை உருவாக்கியவர்களின் வாழ்வாதாரத்தை அவர்கள் அழிக்கிறார்கள்" என்று விவரிக்கிறார்.

ஹூப்ளியிலுள்ள காதிக் கொடி தயாரிக்கும் பிரிவு 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 90 லட்சம் கொடிகளுக்கான ஆர்டர்களைப் பெற்றது என்றும் கொடி சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்ட பின்னர் 2022 ஆம் ஆண்டு 14 லட்சம் கொடிகளுக்கான ஆர்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளன என்றும் ஒரு ஆங்கில நாளிதழ்  வெளியிடப்பட்ட செய்தி தெரிவிக்கிறது.

காதியை ஊக்குவிக்க குறைந்தபட்சம் ஒரு காதி கைக்குட்டையையாவது வைத்திருக்க வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோதி அறிவுறுத்திவரும் நிலையில் காதி கொடிகளின் இந்த நிலைமை இந்தியாவில் காணப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த