காலஞ்சென்ற முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா உடன் பிறந்த அண்ணன் ஜெயக்குமார் மகள் தீபா தற்கொலை முயற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதியா ?
டிரைவர் ராஜா என்ற ஆயில் ராஜா குழப்பம் காரணமாக தீபாவுக்கும், கணவர் மாதவன் (பேட்ரிக்) க்கும் அடிக்கடி ஏற்பட்ட சண்டை கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்திருந்தனர். குடும்ப சூழ்நிலை சரி இல்லாததால் தீபாவால் யாரோ ஒருவர் தூண்டுதல் காரணமாக அரசியலில் தீவிரம் காட்டியவர் அதன் பின்னர் அவர் சொந்த பிரச்சினை மற்றும் பின்னணியில் அரசியல் முடியவில்லை. இதனால், தீபாவுக்கு இருந்த ஆதரவு மற்றும் அவரோடு இருந்த அரசியல் எதுவும் தெரியாத மாயையான கூட்டம் படிப்படியாக குறைந்தது. மீண்டும் பேட்ரிக் என்ற மாதவனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் .இதற்கிடையே தீபா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அது உண்மை தானா என்பதை உறுதிப்படுத்த மருத்துவர்கள் கருத்து தேவை இந்தத் தகவலை யாரும் உறுதிப்படுத்தவில்லை.அவர் தற்போது அவர் கணவர் தகவல் படி அவர் மருத்துவச் சிகிச்சையில் உள்ளார். மருந்தின் தாக்கம் அவரிடத்தில் உள்ளது. சராசரியாக எல்லா வீடுகளிலும் நடக்கும் குடும்பத் தகராறு தான். அவர் ஏதோ கோபத்தில் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். எனத் தெரிவித்துள்ளார். சென்னை தி நகர் சதாசிவம் சாலையில் உள்ள வீட்டில் கணவருடன் வசித்து வந்த தீபா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெ.தீபா மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். சென்னை தியாகராய நகர் சதாசிவம் சாலையில் வீட்டில் வசித்து வந்தாலும் அவ்வப்போது போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் ஜெ.தீபாவுக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.எனது மனைவி தீபா என்னைப்பற்றி அளித்த செய்தியினை மறுக்கிறேன். தீபாவின் உடல்நிலை குறித்து எனக்கு முழு அக்கறை உள்ளது. நான் தான் அவரை இன்று வரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று முழுமையாக பார்த்துக்கொள்கிறேன்.
இதற்கிடையே ஜெ.தீபா திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா என்பது இனி மேல் தான் தெரியும். ஜெ.ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை இந்த தீபா என்பவர் யார் என்றே யாரும் அறியவில்லை மேலும் அரசியல் குழப்பம் செய்ய சிலர் அவரை அழைத்து வந்து பயன் படுத்திக் கொண்டு தற்போது அவரை அரசியல் அனாதையைப் போல தவிக்க விட்ட கதை மட்டும் பெரிது அது இனி பலராலும் பேசப்படும்.
கருத்துகள்