கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜோதிமணிக்கு ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தை ஒருங்கிணைக்கும் பணி
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் ஒற்றுமைப் பயணத்தை
ஒருங்கிணைக்கும் பணி கரூர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜோதிமணிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை வழங்கியுது.2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்த பணிகளில் ஒரு பக்கம் பாரதிய ஜனதா கட்சி துவங்கி இருக்கும் நிலையில்
காங்கிரஸ் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியும் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையிலான பாத யாத்திரையை செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி துவங்கி நடக்கும் யாத்திரையை ஒருங்கிணைக்கும் பணி கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜோதிமணிக்கு வழங்கப்பட்டுள்ளது குறித்து முகநூல் மூலம் பதிவிட்டதாவது,
"கடந்த 25 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றி இருக்கேன்.எல்லாவற்றையும் விட தலைவர் ராகுல்காந்தி தலைமையில், காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கும் இந்திய ஒற்றுமைப் பயணம் எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை ஒருங்கிணைக்கும் இந்த வாய்ப்பு மகத்தானது. வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தல் நமது தேசம் எதிர்நோக்கி இருக்கும் வாழ்வா? சாவா? போராட்டம். ஆர்எஸ்எஸ்/ பாஜகவின் மோடி ஆட்சி இந்த தேசத்தின் ஆன்மாவை மதம்,சாதியின் அடிப்படையில் கூறுபோட்டுள்ளது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பேரழிவை சந்தித்துள்ளன. காயம்பட்டுக் கிடக்கும் இந்த தேசத்தின் ஆன்மாவை மீட்டெடுக்கவும், வெறுப்பால் பிரிந்துகிடக்கும் இதயங்களை ஒருங்கிணைத்து, அன்பை விதைக்கவும், அழிந்துபோன பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்யவும் காங்கிரஸ் கட்சி இந்த இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நடத்துகிறது. இது மக்களுக்கான ஒரு மாபெரும் இயக்கம்.இந்த மாபெரும் மக்கள் இயக்கம், தொன்மையும்,பெருமையும் மிக்க தமிழ் மண்ணில், கன்னியாகுமரியில் இருந்து துவங்குகிறது.இப்படியொரு வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை வழங்கிய அன்னை திருமிகு.சோனியா காந்தி, தலைவர் திரு.ராகுல்காந்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் திரு.திக்விஜயசிங் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். என் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்