கர்நாடகா மாநிலத்தில் மைசூரு-சித்ரதுர்காவின் முருகா மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது
இரண்டு மாணவியர் பாலியல் புகாரைத் தொடர்ந்து அவர் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சித்ரதுர்காவில் உள்ள முருகா மடம் சார்பில் பல இடங்களில் கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுவதில் ஏழை மாணவ - மாணவியருக்கு இலவச விடுதி வசதி, கல்வி அளிக்கப்படுகிறது. சித்ரதுர்காவில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் இரண்டு மாணவியர் மைசூரிலுள்ள மகளிர் அமைப்பில், மடாதிபதி மீது அளித்த பாலியல் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: ,""மடத்துக்குச் சொந்தமான உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவியர், வரிசைப்படி மடாதிபதியிடம் செல்ல வேண்டும்; செல்ல மறுத்தால் விடுதி வார்டன் மற்றும் ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டுவர்; தொந்தரவு தருவர். ஆசிர்வாதம் என்ற பெயரில் மடாதிபதி, மாணவியரை தன்னுடைய படுக்கை அறைக்குள் அழைப்பார். மாணவியரிடம், வார்டன் பழங்களை கொடுத்தனுப்புவார். அங்கு குடும்பம் குறித்த தகவல்களை மடாதிபதி கேட்டு தெரிந்து கொள்வார். ஏதாவது கஷ்டம் இருந்தால் அதை தீர்த்து வைப்பதாக கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்வார்.ஒரு வேளை அவரது ஆசைக்கு இணங்கா விட்டால் பழம் மற்றும் இனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்வார்.இதை யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுப்பார். தனக்கு ஏற்படும் தொந்தரவுகள் குறித்து கேள்வி கேட்டால் விடுதியை விட்டு அனுப்பி விடுவார்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகார் குறித்து மாவட்டக் குழந்தைகள் நலத்துறை விசாரித்த நிலையில் உண்மை இருப்பது தெரிய வரவே, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலர் சந்திரகுமார், மைசூரு நசர்பாத் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, மடாதிபதிக்கு உடந்தையாக இருந்த சித்தர துர்காவில் இருக்கும் அக்கமா தேவி வஸ்தி நிலையத்தில் வார்டன் ரஷ்மி, பசவதித்தியா, பரமசிவன், கங்காதரைய்யா உட்பட ஐந்து பேர் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மடாபதி முதல் குற்றவாளியாகவும்; வார்டன் இரண்டாவது குற்றவாளியாவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள்