முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோடியில் லாபம் கருதி நடக்கும் கோமாளி விழா மொய் விருந்து எனும் பொய் விருந்துகள்

"கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ! நாடி என் வினை தீர நான் வருவேன்" ...


எனும் தமிழ் கடவுள் வழி அன்னதானம் செய்த மரபுவழி வந்த பலருக்கு  இந்த மொய் விருந்து காதில் கேட்டதே அசிங்கம் என ஒதுங்கும் நிலையில், இலாபம் கருதி நடக்கும் கோமாளி விழா  மொய் விருந்து எனும் பொய் விருந்துகள்                    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆலங்குடி மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பேராவூரணி பகுதிகளில்  மொய் விருந்து விழாக்கள் துவங்கி நிறைவடையும் நிலையில் தான் கடந்த இரு நாட்களுக்கு முன்



புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் 31 பேர் இணைந்து ஊர் பொது இடத்தில் எந்த வித குடும்ப விழாவும் இல்லாமல் மொய் விருந்து எனும் கலாச்சார சீரழிவு விழா நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றதில் 31 பேருக்கும் சேர்த்து ஒரே நாளில் சுமார் ரூபாப்.15 கோடி மொய் வசூலாகி உள்ளது. இதில் ஒருவருக்கு மட்டும் ரூபாய்.2.50 கோடி வசூலானதாகத் தகவல் அந்த விழாதாரர்களில் 20 க்கும் மேற்பட்டோருக்கு தனிப்பட்ட முறையில் தலா 50 லட்சம் ரூபாய் வரை மொய் என்ற தொகை வசூலாகியுள்ளது. சிலர் போன் மூலம் , கூகுள் மூலமும் பணம் மொய்  செய்தனர். கட்டுக்கட்டாக பணம் மொய்யாக வந்ததால் அதனை சரியாக எண்ணும் வகையில் பணம் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

வங்கி ஊழியர்கள் நேரில் வந்து மொய் எழுதிய நிகழ்வு தான் உச்சம். மொத்தம் ரூபாய் .15 கோடி மொய் வசூலானதால் மொய் எனும் (பொய்) விருந்து விழாவை நடத்தியவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.  நெடுவாசல் கிழக்கு கிராமத்தின் 31 குடும்பம் இணைந்து ஒரே இடத்தில் மொய் விருந்து விழா நடத்துவதற்காக முன்கூட்டியே அழைப்பிதழ் அனுப்பி  நடத்தும் விருந்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அசைவ விருந்தில் பங்ககளித்து விழா நடத்தும் நபர் தங்கள் இல்லத்தின் விழாவில் எழுதிய பணத்தை விட சிறிது சேர்த்து பதிலுக்கு எழுதுவது அவர்கள் வாடிக்கை அதுவே பலருக்கு வேடிக்கை 

நாடே டிஜிட்டல் மயமாக மாறிவரும் சூழ்நிலையில் இந்த விருந்தில் கலந்துகொண்டவர்கள்ஆன்லைன் மூலமாக மொய் எழுதினர்.இதற்காக வங்கி ஊழியர்களை வங்கி ஏற்பாட்டில் அங்கு பணியிலமர்த்தப்பட்டிருந்தனர். மேலும் பணம் எண்ணுவதற்கான எந்திரங்களும் அங்கு கொண்டு வரப்பட்டிருந்தன.  ஒரு நபர் தனக்கு   அசிங்கம் அவமானம் என அறியாமல் வியாபார ரீதியாக உறவினர்களை அழைத்து மொய் விருந்து வைப்பதென்பது. வாழும் போது தற்கொலை செய்து கொள்ளும் நிலை தான், உலகில் நாம் அறிந்த வரையில் இரண்டு ஜாதி தான் உள்ளது ‌ஒன்று பட்டினி கிடந்தபோதும் மானத்துடன் வாழும், மற்றொன்று மானம் இழந்தாலும் வயிறு நிறைந்தால் போதுமெனும் ஜாதி .. இந்த மொய் விழா எனும் பொய் விழா விருந்து, அதை மானம், வெட்கம்,ரோஷம், தன்மானமுள்ள யாரும் செய்வதில்லை காரணமே இல்லாமல் ஒரு விழா நடத்த அவர்களுக்கு என்ன காரணம்?

இது பட்டுக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை பகுதியிலுள்ள பலர் இவ்விழாவை தொழில் முதலீட்டுக் கடன் விழாவாக பார்க்க முடியும், முதலீடு தான் இந்த விழா நடந்தப்படுகிறது இதுவும் கந்துவட்டி போலவே.

குறைந்தது பத்தாயிரம் ரெடி பண்ணினா பதில் நடத்தும் நபர் செல்வாக்கு மதிப்பு வைத்து பத்து லட்சம் வரை அனாயசமாக கௌரவப் பிச்சை போல அவர்கள் கைக்கு வரும்.

இது equity share என்ற மினி பங்கு தொகை வெளியீடு போல் அவர்களுக்கு அமைகிறது ,இதை அப்பகுதியில் வசிக்கும் நடுத்தரமான குடிமக்கள் தேவை என்று கூறுகின்றனர்.  நல்ல  ஆட்டுக்கிடாய்க்கறி

ஆடு இல்லை கோழி என்றால் அது சுமார் விழா. அசைவ உணவு சமையற்காரர்கள் வீட்டின்  முன்பாக ஒரு சாமியானா, அதில் டைனிங் ஹால் போல மேஜையில் பந்தி வைத்தால் முந்திச் செல்லும் கூட்டம். மஞ்சப் பை (உங்கள் அந்தஸ்து ஏற்ற) மொய் எழுதும் நூல் ஏடு (அந்தஸ்துக்கு ஏற்றது போல்) ஒரு பேனா ஊது குழாய் ஸ்பீக்கர் மற்றும் ஒலி பெருக்கி, மொய் விருந்துக்கு அழைப்புப் பத்திரிகை ரெடியானால் ஊரில் அவர் குறித்த பேச்சு 

மேலவீதி மெட்ராஸ் (பட்டப் பெயர்). கிராமங்களில் இது சகஜம். அவர் சத்யமா செங்கல்பட்டைத் தாண்டாதவர்) மேகநாதன் ரூபாய் 5001. சவுண்டா மூனு தரம் பக்கத்து ஊர் வரை கேக்கனும்.

ஒலி பெருக்கி மூலம் மொய் விஷயம் விளம்பரமாகவில்லை என்றால் அது  ரகளையே. இதில் மொய் விருந்து நடத்துபவர் "நன்கு" கவனிப்பார்

(இப்போது Paytm Google pay கூட மொய் கொடுக்க advance level.)

கண்டிப்பாக நோட்டில் எழுதனும். அடுத்து அவர் சில ஆண்டுகளில் 'மொய் விருந்து" வைக்க நீங்கள் அதற்கு குறைவாக ஒரு ரூபாய் தந்தாலும் சண்டை. கலாட்டா மற்றும் கொலையும் நடக்கும்.



அந்தக் காலத்தில் பத்தாண்டுக்கு ஒரு முறை இந்த மொய் விருந்து நடடத்தியவர். ஒரே நாளில் இருவர் செய்ய முடியாது. பேசி வைத்து ஒரிரு மாதம் தள்ளி வைப்பு நடக்கும். (வருவாய் முக்கியமல்ல)

ஆடு இளசா என முதல் நாள் நோடடமிட்டு மொய் (அதற்கேற்ப) வைப்போரும் உண்டு. சைவம் இங்கு தனிப் பந்தி.

மொய் வைத்தவர் அவர் வீட்டில் மொய் விருந்து வைக்கும் போது வட்டித் தொகை போல் சேர்த்து கொடுக்க ஊர்ல பஞ்சாயத்திருந்தால் கொடுக்க முடியாது போனால் இதுவும் கந்துவட்டிக்காரர்கள் கதை தான்.

"மயிர் நீட்பின் உயிர் வாழா கவரிமான்" கதைதான்.

உங்கள் மொய் விருந்தில் மொய் வைத்தவர் உங்களை மொய் விருந்து அழைத்து காசு இல்லாது போகாமல் இருந்திருந்தால் அய்யயோ பாவம்.

தமிழகத்தில் மதுரை இராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்களில் மொய் விருந்துக்கு யாரும் அழைப்பதில்லை 

"மொய் விருந்தா " அபப்டி என்றால் என்னவென்று மற்ற மாவட்ட மக்களுக்கு சுத்தமாக தெரியாது. மொய் வைத்து தான் விருந்து சாப்பிட வேண்டிய அவசியம் அவர்களிடமில்லை ..




வீட்டில் நடக்கும் அணைத்து விழாக்களுக்கும் அனைவரும் வரலாம் , இருந்து சாப்பிட்டுச் செல்லலாம். "இவருக்கு நான் இதை செய்தேன் , அதனால் இவர் எனக்கு அதைச் செய்ய வேண்டும் " என்ற குறுகிய மனப்பான்மை உள்ள மக்களில்லை. இருக்கப் போவதுமில்லை. நாங்கள் எல்லாம் அப்போதிருந்த நிலையில் அப்படி. மொய் வைத்து (அல்லது) மொய் வாங்கித்  தான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது அங்குள்ள பகுதி மக்கள் வாழ்க்கையில் இல்லை .

மொய் விருந்துகள் மூலம் சில சமையல்காரர்கள், சில பந்தல்காரர்கள், சில ஒலி பெருக்கி ஏற்பாட்டாளர்கள், அரிசி மளிகை வியாபாரக்கடை, விற்பனையாளர்கள், தனியார் வங்கி மொய் எழுத்தர்கள், பந்தல் அலங்கார வடிவமைப்பாளர்கள், விறகு விற்பவர்கள், பிளக்ஸ் தயாரிப்பாளர்கள், என பல தரப்பட்டோரும் பயன் அடைந்து வருவாய் ஈட்டி வருகின்றனர்.கலாச்சாரம் என்பது சமூகத்தை நல்வழியில் கொண்டுபோக உதவும் ஒரு வழிகாட்டி முறையே . வாழ்ந்து காட்டி வழிகாட்டும் முறை என்றால் மிகையில்லை. குடும்பம் என்பது ஒரு சிறிய சமூகம். ஆனால் சமூகம் என்பது ஒரு பெரிய குடும்பம். தனி மனிதர்கள் குடும்பத்தில் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதுவே சமூக விளைவாகப் பரவும். சமூகத்தில் பரவும் விளைவுகள் யாவும் ஒவ்வொரு தனி மனிதனையும் பாதிக்கும். ஒன்றையொன்று பின்னிக்கொண்டிருக்கும் சமூகச் சங்கிலிக்குள்ளேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறான வாழ்க்கையில் மொத்த மனித கூட்டத்தையும் சரியான பாதைக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதற்காகவே மனிதன் என்பவன் இப்படித்தான் வாழவேண்டும் என்ற வரையறை மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அத்தகைய கட்டுப்பாடுகளின் படி வழிவழியாக மக்கள் வாழ்வதையே கலாச்சாரம் என்றழைக்கிறோம்.  இப்படி நம் தாத்தா சொல்ல அப்பாவும் அப்பா சொல்ல நாமும் நாம் சொல்ல நமது பிள்ளைகளும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழும் பொழுது, துன்பங்களை சந்தித்துத் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலை இல்லாமல் துன்பங்களை தவிர்த்து வாழக் கற்றுக்கொள்கிறோம். இந்த வழி தவறு இந்த வழி சரி என்று முதலிலேயே சொல்லப்பட்டு விடுவதால் வாழ்நாள் முழுவதும் வாழ்வில் சில துன்பம் தெரியாமல் வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து சென்று விடுவோம். இப்படித்தான் கலாச்சாரம் காலம் காலமாக நம்மை வழிநடத்தி வருகிறது. ஆனால் இந்த விதிமீறல் விழா நம் தாத்தா காலத்தில் தந்தை காலத்தில் அறவே இல்லை. அப்போது மக்கள் கூட்டுக் குடும்பமாக இனிதாக வாழ்க்கை முறை.. இப்போது. லாபம் கருதி நடக்கும் கோமாளி விழா  மொய் விருந்து எனும் பொய் விருந்துகள் இல்லை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த