மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் கருத்தப்புலியன்பட்டி பிரபு மனைவி மாலதி. பெயரில் ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான நிலமுள்ளது.
இதற்கான சொத்து மதிப்புச் சான்றிதழ் அதாவது (சால்வன்சி) கோரி, உரிய வழிமுறைகளின் படி மேலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து.
சான்றிதழை வழங்கும் படி கோரியிருந்தார், மேலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமையிடத்துத் துணை வட்டாட்சியராகப் பணிபுரியும் மணிகண்டன்(வயது 46) என்பவர் அவர் கேட்டிருந்த சான்றிதழ் வழங்குவதற்கு ரூபாய் 20 ஆயிரம் லஞ்சமாகத் தருமாறு கேட்டுள்ளார்.
கையூட்டுத் தர விரும்பாத பிரபு, மதுரை மாவட்ட இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையினரிடம் புகாரளித்தார். அதனையடுத்து
பினாப்தலின் ரசாயனம் தடயவிய அவரது 20 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அரசு தரப்பில் சாட்சி முன்னிலையில் அவரிடம் கொடுத்தனுப்பினர்.
மேலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மாலை சென்ற பிரபு, தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர் மணிகண்டனிடம் பணத்தைக் கொடுக்க முற்பட்ட போது அவர், தனது இடைதரகரான மூக்கனிடம் அந்தத் தொகையை வழங்குமாறு கூறியுள்ளார்.
இதன்படி, அருகில் நின்றிருந்த மூக்கனிடம் ரூபாய் 20 ஆயிரத்தை கொடுத்த போது, அருகில் மறைந்திருந்த மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் சத்யசீலன் தலைமையிலான காவல்துறையினர் அவரை லஞ்சம் பணத்துடன் பிடித்தனர்.
துணைக் கண்காணிப்பாளர் சத்யசீலன் மற்றும் ஆய்வாளர் ரமேஷ்பிரபு உள்ளிட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட பின்னர் மணிகண்டன் மற்றும் மூக்கன் இருவரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர் கையூட்டு வாங்கிய தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கைதான சம்பவம் மேலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இது போன்ற இதுவரை லஞ்சம் பெற்ற பலருக்கு பயத்தை ஏற்படுத்தியதுடன் மக்கள் மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.
கருத்துகள்