முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜாதிச் சான்றிதழ் மோசடியில் உதவிப் பேராசிரியர்கள் பிண்ணனி நபர்கள் மற்றும் ஊழல் அதிகாரிகள் சிக்குவர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பூண்டி  புஷ்பம் கலைக் கல்லூரி 1956-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது.


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த துளசி அய்யா வாண்டையார் இக் கல்லூரியினை நிர்வகிக்கிறார். அப்பகுதியில் அடித்தள ஏழை எளிய மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வி அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கும் வகையில் கல்லூரியை உருவாக்கிச்  செயல்படுத்தினார். இக் கல்லூரியில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்றிருக்கின்றனர்.

இக்கல்லூரி ஒரு தன்னாட்சி நிறுவனமாகும். திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இணைக்கப் பெற்று. தேசிய தர மதிப்பீட்டுக் குழுவால் “அ” அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதன் நிறுவனர் துளசி அய்யா வாண்டையார்  இங்கு திறந்தவெளி அரங்கமுள்ளது. வீரையா வாண்டையார் நினைவு அறக்கட்டளை நிர்வாகப் பணிகளை நடத்துகிறது.

அரசு அறிவித்த கட்டணத்தை மட்டுமே பெற்று கூடுதலாககீ கட்டணங்களை வசூலிக்காத நிலையில்  பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய கல்வி நிறுவனம் அதனால் துளசி அய்யா வாண்டையாரை கல்வி வள்ளல் என்றே பகுதி மக்கள் அழைத்தனர். அவர் காலமான பின்னர் அவர் மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக உள்ளார். அமமுக டி.டி.வி.தினகரனின் சமீபத்திய சம்பந்தியாவார் பூண்டி புஷ்பம் கல்லூரியில் 2015 ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை பேராசிரியர் பணிக்கு நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினருக்குக் வந்த தகவலில் விசாரணை நடத்தினர்.  2017-ஆம் ஆண்டு உதவி பேராசிரியர்கள் பணி நியமனத்தில் இனச் சுழற்சி முறையைப் பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது. உதவிப் பேராசிரியர்கள் தியாகராஜன், கற்பகசுந்தரி ஆகிய இருவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை மறைத்து, தங்கள் பகுதியில் வருவாய் வட்டாட்சியர் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எனப் போலியான சாதிச் சான்றிதழ் பெற்று அதை கல்லூரியில் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பதைத் தொடர்ந்து, கல்லூரியில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில். இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தரப்பில் தெரியவரும் தகவல்``கல்லூரிப் பணி நியமனத்தில் நிர்வாகத்தின் தரப்பில் முறைகேடு நடந்திருப்பதாக துளசி அய்யா வாண்டையார் மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் எங்களிடம் புகார் அளித்திருக்கிறார். அதற்கான ஆதாரங்களும் கிடைத்த நிலையில், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

மறைந்த துளசி அய்யா வாண்டையார் கல்லூரி மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பது தங்களை வேதனையுடையச் செய்திருப்பதாகக் அந்தக் கல்லூரியில் படித்து பல துறைகளில் உள்ள முன்னாள் மாணவர்கள். நாட்டில் இதுபோல் பல இடங்களில் முறைகேடுகள் நடந்து அதை கண்டும் காணாமல் உள்ள நிலை நாம் பல உதாரணங்கள் கூறமுடியும் ஆனால் இந்த ஒரு கல்லூரி மட்டும் இது போன்ற நிலை இல்லை. பல உயர் ஜாதி மாணவர்கள் உட்பிரிவுகள் பெயரில் சான்றிதழ் பெற்று அரசுப் பணிகளில் உள்ள நிலையில் அவர்கள் அனைவரது கல்விக்காண சான்றிதழ்கள் சரிபார்ப்பு தற்போது அவசியம் இட ஒதுக்கீடுகள் உண்டு என்பதால் சில வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில்  உள்ள பல ஊழல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மூலம் இப்படி சான்றுகள் பெற்று பணியில் பலர் உள்ளனர் அதை விசாரித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இப்போது வந்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...