முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜாதிச் சான்றிதழ் மோசடியில் உதவிப் பேராசிரியர்கள் பிண்ணனி நபர்கள் மற்றும் ஊழல் அதிகாரிகள் சிக்குவர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பூண்டி  புஷ்பம் கலைக் கல்லூரி 1956-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது.


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த துளசி அய்யா வாண்டையார் இக் கல்லூரியினை நிர்வகிக்கிறார். அப்பகுதியில் அடித்தள ஏழை எளிய மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வி அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கும் வகையில் கல்லூரியை உருவாக்கிச்  செயல்படுத்தினார். இக் கல்லூரியில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்றிருக்கின்றனர்.

இக்கல்லூரி ஒரு தன்னாட்சி நிறுவனமாகும். திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இணைக்கப் பெற்று. தேசிய தர மதிப்பீட்டுக் குழுவால் “அ” அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதன் நிறுவனர் துளசி அய்யா வாண்டையார்  இங்கு திறந்தவெளி அரங்கமுள்ளது. வீரையா வாண்டையார் நினைவு அறக்கட்டளை நிர்வாகப் பணிகளை நடத்துகிறது.

அரசு அறிவித்த கட்டணத்தை மட்டுமே பெற்று கூடுதலாககீ கட்டணங்களை வசூலிக்காத நிலையில்  பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய கல்வி நிறுவனம் அதனால் துளசி அய்யா வாண்டையாரை கல்வி வள்ளல் என்றே பகுதி மக்கள் அழைத்தனர். அவர் காலமான பின்னர் அவர் மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக உள்ளார். அமமுக டி.டி.வி.தினகரனின் சமீபத்திய சம்பந்தியாவார் பூண்டி புஷ்பம் கல்லூரியில் 2015 ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை பேராசிரியர் பணிக்கு நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினருக்குக் வந்த தகவலில் விசாரணை நடத்தினர்.  2017-ஆம் ஆண்டு உதவி பேராசிரியர்கள் பணி நியமனத்தில் இனச் சுழற்சி முறையைப் பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது. உதவிப் பேராசிரியர்கள் தியாகராஜன், கற்பகசுந்தரி ஆகிய இருவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை மறைத்து, தங்கள் பகுதியில் வருவாய் வட்டாட்சியர் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எனப் போலியான சாதிச் சான்றிதழ் பெற்று அதை கல்லூரியில் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பதைத் தொடர்ந்து, கல்லூரியில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில். இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தரப்பில் தெரியவரும் தகவல்``கல்லூரிப் பணி நியமனத்தில் நிர்வாகத்தின் தரப்பில் முறைகேடு நடந்திருப்பதாக துளசி அய்யா வாண்டையார் மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் எங்களிடம் புகார் அளித்திருக்கிறார். அதற்கான ஆதாரங்களும் கிடைத்த நிலையில், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

மறைந்த துளசி அய்யா வாண்டையார் கல்லூரி மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பது தங்களை வேதனையுடையச் செய்திருப்பதாகக் அந்தக் கல்லூரியில் படித்து பல துறைகளில் உள்ள முன்னாள் மாணவர்கள். நாட்டில் இதுபோல் பல இடங்களில் முறைகேடுகள் நடந்து அதை கண்டும் காணாமல் உள்ள நிலை நாம் பல உதாரணங்கள் கூறமுடியும் ஆனால் இந்த ஒரு கல்லூரி மட்டும் இது போன்ற நிலை இல்லை. பல உயர் ஜாதி மாணவர்கள் உட்பிரிவுகள் பெயரில் சான்றிதழ் பெற்று அரசுப் பணிகளில் உள்ள நிலையில் அவர்கள் அனைவரது கல்விக்காண சான்றிதழ்கள் சரிபார்ப்பு தற்போது அவசியம் இட ஒதுக்கீடுகள் உண்டு என்பதால் சில வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில்  உள்ள பல ஊழல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மூலம் இப்படி சான்றுகள் பெற்று பணியில் பலர் உள்ளனர் அதை விசாரித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இப்போது வந்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...