முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விபிசிஎல் பிரபல தனியார் தொலைக்காட்சி என்.டி.டிவியின் அதிகமான பங்குகளை அதானி குழுமம் வாங்க உள்ளதாக தகவல்

இந்தியாவில் மிகப்பெரிய தொழில் குழுமம் அதானி குழுமம். பல்வேறு துறைகளில் தொழில்களை நடத்தி வருகிறது. தற்போது அதானி குழுமம் மீடியா துறையாக ஏ.எம்.ஜி நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் ஒரு அங்கமாக விஸ்வபிரதான் கமர்சியல் (விபிசிஎல்)  நிறுவனம் இயஙகுகிறது. 


 விபிசிஎல் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான என்.டி.டிவியின் அதிகமான பங்குகளை வாங்க உள்ளதாக தெரிவித்தது தொடர்பாக அந்த நிறுவனம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 29.16 சதவீதம் பங்குகளை விபிசிஎல் நிறுவனம் வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.  அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் 26 சதவீதம் பங்குகளையும் பங்குச்சந்தையில் விற்பனை செய்ய உள்ளதாகக் கூறியுள்ளது. விபிசிஎல் நிறுவனம் ஆர்.ஆர்.பி.ஆர் நிறுவனத்தின் 99.5 சதவீதம் பங்குகளை வாங்க உள்ளது. இந்த ஆர்.ஆர்.பி.ஆர் நிறுவனம் என்.டி.டிவியின் 29.6 சதவீதம் பங்குகளை வைத்துள்ளது. அந்த நிறுவனத்தை வாங்கியதன் மூலம் அதானி குழுமம் தனியார் தொலைக்காட்சியின் பங்குகளை வாங்க உள்ளது 

இந்த முடிவு தொடர்பாக ஏ.எம்.ஜி நிறுவனத்தின் சிஇஒ சஞ்சய் புகாலியா, தகவல் படி “ஏ.எம்.ஜி நிறுவனத்திற்கு இந்த முடிவு ஒரு மைல் கல்லாக அமையும். ஏ.எம்.ஜி நிறுவனம் இந்திய குடிமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சரியான தகவலைக் கொடுக்க வேண்டும் என்று குறிக்கோள் உடன் உள்ளது. அதற்கு இந்த தனியார் செய்தி நிறுவனம் மிகவும் முக்கியமான ஒரு கருவியாக இருக்கும். ஆகவே இந்த தனியார் செய்தி செனலின் தரத்தையும், செய்தி வெளியிட்டு திறனையும் நாங்கள் மேம்படுத்த உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். 


என்.டி.டிவி செய்தி நிறுவனம் சார்பில் 3 செய்தி சேனல்கள் தற்போதுள்ளன. என்.டி.டிவி 24 -7, என்.டி.டிவி இந்தியா, என்.டி.டிவி ப்ராஃபிட் ஆகிய 3 சேனல்கள் உள்ளன. மேலும் ஆன்லைனிலும் இந்த செய்தி நிறுவனம் அதிகமான வாடிக்கையாளர்களை வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்த தனியார் செய்தி நிறுவனத்தை சுமார் 3.5 கோடி வாடிக்கையாளர்கள் பின் தொடர்கின்றனர். இந்த நிறுவனம் தற்போது வரை மொத்தமாக 421 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த நிதியாண்டியில் 85 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக அலைக்கற்றை 5 ஜி ஸ்பெக்ட்ரெம் ஏலத்தில் நாட்டின் மிகப்பெரும் டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக அதானி நிறுவனமும் களமிறங்கியுள்ளது. மேலும், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் அதானி குழுமம் 88.1 விழுக்காடு வளர்ச்சியை எட்டி அதன் சொத்து மதிப்பு வரலாற்றிலில்லாத அளவில் அதிகரித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன  "ராதிகாவும் பிரணாய் ராய்யும் இப்போது விவாதத்தில் இல்லை, உரிமையில் மாற்றம் அல்லது பங்குகளை விலக்குவது பற்றி எந்த நிறுவனத்துடனும் பேசவில்லை" என்று நிறுவனம் திங்களன்று பரிமாற்றங்களுக்கு ஒரு ஒழுங்குமுறை தாக்கல் செய்ததாகக் கூறியது. ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் தலைமை நிர்வாகி அதிகாரி சஞ்சய் புகாலியா கூறுகையில், இந்த கையகப்படுத்தல், "பிளாட்ஃபார்ம்கள் முழுவதும் புதிய யுக ஊடகங்களின் பாதையை அமைக்கும் AMNL இன் இலக்கின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்" என்றார். எங்கள் பார்வையை வழங்க மிகவும் பொருத்தமான ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளம்,” என்று புகாலியா கூறினார். 2021-'22 ஆம் நிதியாண்டில், என்டிடிவி ரூபாய். 421 கோடி வருவாய் ஈட்டியது, ரூ. 85 கோடி நிகர லாபம் ஈட்டியது மற்றும் மிகக் குறைவான கடனில் உள்ளது என்று ஒரு செய்திக்குறிப்பு. அதானி குழுமம் தெரிவித்தது. செவ்வாயன்று, மும்பை பங்குச் சந்தையில் NDTV பங்குகள் ஒவ்வொன்றும் 2.61 சதவீதம் உயர்ந்து ரூ.366.20 ஆக இருந்தது. இதற்கிடையில், அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளின் விலை திங்கட்கிழமையிலிருந்து கிட்டத்தட்ட 1 சதவீதம் குறைந்து ரூபாய் .3,023.65 ஆக இருந்தது.கிரெடிட் சைட் எனும் கடன் ரேட்டிங் ஏஜென்சி அதானி குரூப் கம்பெனிகளை பற்றி எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் 

அதானி நிறுவனங்கள் அளவுக்கதிகமாக கடன் பெற்றிருக்கின்றன என்றும் 

 இந்த நிறுவனங்கள் கடன் வலையில் சிக்கி கடன் கட்டமுடியாத நிலைமைக்கு ஆளாகும் வாய்ப்புள்ளதென்றும். 

கடன் சுமையை அபாயகரமான நிலைமைக்குக் கீழே கொண்டு வருவதற்குத் தேவையான வருமானமில்லை என்றும். 

கடந்த இரண்டாண்டுகளில் பங்குகளின் மதிப்பு 13 -19 மடங்கு எப்படி அதிகரித்ததென்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் பலர் உணரமுடிகிறது 

தற்போது ஆளும் கட்சியுடனும் வங்கிகளுடனும் நல்ல உறவை அதானி வைத்திருக்கிறார் என்பது ஒன்றுதான் 

அதானி நிறுவனம் பற்றி இப்படி அடிக்கடி ரிப்போர்ட்டுகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. 

எதிர்க்கட்சிகள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் யாரும் புரிந்து கொள்ள முடியவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...