விபிசிஎல் பிரபல தனியார் தொலைக்காட்சி என்.டி.டிவியின் அதிகமான பங்குகளை அதானி குழுமம் வாங்க உள்ளதாக தகவல்
இந்தியாவில் மிகப்பெரிய தொழில் குழுமம் அதானி குழுமம். பல்வேறு துறைகளில் தொழில்களை நடத்தி வருகிறது. தற்போது அதானி குழுமம் மீடியா துறையாக ஏ.எம்.ஜி நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் ஒரு அங்கமாக விஸ்வபிரதான் கமர்சியல் (விபிசிஎல்) நிறுவனம் இயஙகுகிறது.
விபிசிஎல் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான என்.டி.டிவியின் அதிகமான பங்குகளை வாங்க உள்ளதாக தெரிவித்தது தொடர்பாக அந்த நிறுவனம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 29.16 சதவீதம் பங்குகளை விபிசிஎல் நிறுவனம் வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் 26 சதவீதம் பங்குகளையும் பங்குச்சந்தையில் விற்பனை செய்ய உள்ளதாகக் கூறியுள்ளது. விபிசிஎல் நிறுவனம் ஆர்.ஆர்.பி.ஆர் நிறுவனத்தின் 99.5 சதவீதம் பங்குகளை வாங்க உள்ளது. இந்த ஆர்.ஆர்.பி.ஆர் நிறுவனம் என்.டி.டிவியின் 29.6 சதவீதம் பங்குகளை வைத்துள்ளது. அந்த நிறுவனத்தை வாங்கியதன் மூலம் அதானி குழுமம் தனியார் தொலைக்காட்சியின் பங்குகளை வாங்க உள்ளது
இந்த முடிவு தொடர்பாக ஏ.எம்.ஜி நிறுவனத்தின் சிஇஒ சஞ்சய் புகாலியா, தகவல் படி “ஏ.எம்.ஜி நிறுவனத்திற்கு இந்த முடிவு ஒரு மைல் கல்லாக அமையும். ஏ.எம்.ஜி நிறுவனம் இந்திய குடிமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சரியான தகவலைக் கொடுக்க வேண்டும் என்று குறிக்கோள் உடன் உள்ளது. அதற்கு இந்த தனியார் செய்தி நிறுவனம் மிகவும் முக்கியமான ஒரு கருவியாக இருக்கும். ஆகவே இந்த தனியார் செய்தி செனலின் தரத்தையும், செய்தி வெளியிட்டு திறனையும் நாங்கள் மேம்படுத்த உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
என்.டி.டிவி செய்தி நிறுவனம் சார்பில் 3 செய்தி சேனல்கள் தற்போதுள்ளன. என்.டி.டிவி 24 -7, என்.டி.டிவி இந்தியா, என்.டி.டிவி ப்ராஃபிட் ஆகிய 3 சேனல்கள் உள்ளன. மேலும் ஆன்லைனிலும் இந்த செய்தி நிறுவனம் அதிகமான வாடிக்கையாளர்களை வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்த தனியார் செய்தி நிறுவனத்தை சுமார் 3.5 கோடி வாடிக்கையாளர்கள் பின் தொடர்கின்றனர். இந்த நிறுவனம் தற்போது வரை மொத்தமாக 421 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த நிதியாண்டியில் 85 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அலைக்கற்றை 5 ஜி ஸ்பெக்ட்ரெம் ஏலத்தில் நாட்டின் மிகப்பெரும் டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக அதானி நிறுவனமும் களமிறங்கியுள்ளது. மேலும், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் அதானி குழுமம் 88.1 விழுக்காடு வளர்ச்சியை எட்டி அதன் சொத்து மதிப்பு வரலாற்றிலில்லாத அளவில் அதிகரித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன "ராதிகாவும் பிரணாய் ராய்யும் இப்போது விவாதத்தில் இல்லை, உரிமையில் மாற்றம் அல்லது பங்குகளை விலக்குவது பற்றி எந்த நிறுவனத்துடனும் பேசவில்லை" என்று நிறுவனம் திங்களன்று பரிமாற்றங்களுக்கு ஒரு ஒழுங்குமுறை தாக்கல் செய்ததாகக் கூறியது. ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் தலைமை நிர்வாகி அதிகாரி சஞ்சய் புகாலியா கூறுகையில், இந்த கையகப்படுத்தல், "பிளாட்ஃபார்ம்கள் முழுவதும் புதிய யுக ஊடகங்களின் பாதையை அமைக்கும் AMNL இன் இலக்கின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்" என்றார். எங்கள் பார்வையை வழங்க மிகவும் பொருத்தமான ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளம்,” என்று புகாலியா கூறினார். 2021-'22 ஆம் நிதியாண்டில், என்டிடிவி ரூபாய். 421 கோடி வருவாய் ஈட்டியது, ரூ. 85 கோடி நிகர லாபம் ஈட்டியது மற்றும் மிகக் குறைவான கடனில் உள்ளது என்று ஒரு செய்திக்குறிப்பு. அதானி குழுமம் தெரிவித்தது. செவ்வாயன்று, மும்பை பங்குச் சந்தையில் NDTV பங்குகள் ஒவ்வொன்றும் 2.61 சதவீதம் உயர்ந்து ரூ.366.20 ஆக இருந்தது. இதற்கிடையில், அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளின் விலை திங்கட்கிழமையிலிருந்து கிட்டத்தட்ட 1 சதவீதம் குறைந்து ரூபாய் .3,023.65 ஆக இருந்தது.கிரெடிட் சைட் எனும் கடன் ரேட்டிங் ஏஜென்சி அதானி குரூப் கம்பெனிகளை பற்றி எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில்
அதானி நிறுவனங்கள் அளவுக்கதிகமாக கடன் பெற்றிருக்கின்றன என்றும்
இந்த நிறுவனங்கள் கடன் வலையில் சிக்கி கடன் கட்டமுடியாத நிலைமைக்கு ஆளாகும் வாய்ப்புள்ளதென்றும்.
கடன் சுமையை அபாயகரமான நிலைமைக்குக் கீழே கொண்டு வருவதற்குத் தேவையான வருமானமில்லை என்றும்.
கடந்த இரண்டாண்டுகளில் பங்குகளின் மதிப்பு 13 -19 மடங்கு எப்படி அதிகரித்ததென்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் பலர் உணரமுடிகிறது
தற்போது ஆளும் கட்சியுடனும் வங்கிகளுடனும் நல்ல உறவை அதானி வைத்திருக்கிறார் என்பது ஒன்றுதான்
அதானி நிறுவனம் பற்றி இப்படி அடிக்கடி ரிப்போர்ட்டுகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
எதிர்க்கட்சிகள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் யாரும் புரிந்து கொள்ள முடியவில்லை.
கருத்துகள்