முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆர்டர்லி முறை குறித்து டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்தாகத் தெரிவித்தார்

தமிழ்நாட்டில் காவல்துறை பணியிலிருக்கும் மற்றும் ஓய்வுபெற்ற  அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாகப் பணியாற்றும் காவலர்களை உடனே திரும்பப் பெற வேண்டுமென


சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆர்டலி சம்பந்தப்பட்ட புகார் வந்தால்,  அதிகாரி மீது நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்ததன் படி இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆர்டலி முறையை ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்துவருவதாகவும், 19 ஆர்டலிகள் தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளனர் எனவும் காவல்துறை  தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆர்டர்லி முறை குறித்து டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்தாக தெரிவித்தார்:-

 "ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரே ஒரு வார்த்தை போதும். ஆனால் அந்த வார்த்தை அரசிடமிருந்தோ, காவல்துறைத் தலைவரிடமிருந்தோ வருவதில்லை. நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்திலும் ஆங்கிலேய ஆர்டர்லி முறையைப் பின்பற்றுவது வெட்கக்கேடானதென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  காவல்துறைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்.19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி  காவல்துறையில் ஆர்டர்லி முறை அறிமுகப்படுத்தப்பட்டு. சீருடைகளைப் பராமரிப்பது, தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பது, காவல்துறை உயரதிகாரிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது போன்றவற்றில் ஆர்டர்லிகள் ஈடுபடுத்தப்பட்டனர். காவல்துறை அதிகாரி 24-7 பணியிலிருக்கும் போது குறுகிய நேரத்தில் குற்றமோ, கலவரமோ விரைந்து செல்ல வேண்டிய நிலையில். அதில், ஆர்டர்லி பயிற்சி பெற்ற சீருடை அணிந்தவர் அந்த அதிகாரிக்கு துணையாகவும் உதவியாகவும் இருக்க வேண்டியிருந்தது.


ஆனால், அதுவே காலப்போக்கில் சுதந்திரம் பெற்ற பிறகு சமைப்பதற்கும், துவைப்பதற்கும், அதிகாரிகளின் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கும், அதிகாரியின் குடும்பத்திற்கு காய் கனிகள் வாங்கி வருவதற்கும், ஆர்டர்லிகளை தவறாகப் பயன்படுத்தப்படத் தொடங்கினர்.


இதனால் ஆர்டர்லி காவலர் கீழ்த்தரமாக நடத்தப்படும் ஒருவராகவே மாறினார். பல ஆண்டுகளுக்கு முன்பு, ஆயுதம் ஏந்திய காவல்துறை கான்ஸ்டபிளுக்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக ஏழாம் வகுப்பு மட்டுமே இருந்தது. இப்போது,  ஒவ்வொரு கான்ஸ்டபிளும் பட்டதாரிகளாகவே  சாதிக்க வேண்டும் என்ற இலட்சியத்தில் காவல்துறையில் சேர்கின்றனர் .தமிழக காவல்துறையில் சட்டம்-ஒழுங்கு டிஜிபி முதல் காவலர் வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இவர்களில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள், அயல் பணி என்ற அடிப்படையில் காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாக வேலை செய்து வருவதாக தகவல்.



அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தாரின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் சொல்லும் பணிகளைச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால், ஆவணத்திலோ தமிழகத்தில், 1979 ஆம் ஆண்டே ஆர்டர்லி காவலர் முறை ஒழிக்கப்பட்டுவிட்டதாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், ஆர்டர்லி முறை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டபோது, அப்போது டிஜிபியான டி.கே.ராஜேந்திரன், இதைத் தான் பதில் மனுவாகத் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறையில் பணியாற்றும் U.மாணிக்கவேல் என்பவரை வேறு பணியிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, காவலர்கள் வசிக்கும் குடியிருப்பில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும் படி 2014 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 2014 ஆம் ஆண்டிலேயே இடத்தைக் காலி செய்யுமாறு காவல்துறை உத்தரவிட்டும், அதை உயர் நீதிமன்றம் உறுதி செய்த பிறகும், இந்த ஆண்டு தான் இடத்தைக் காலி செய்திருப்பதாகவும், ஆனாலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பினார்.         



     உயர் அதிகாரிகளின் கீழுள்ளவர்களைக் கட்டுப்படுத்த இயலாவிட்டால், நன்மதிப்பை இழக்க நேரிடுமெனத் தெரிவித்ததுடன், உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை போன்ற விவகாரங்கள் குறித்தும் நீதிபதி சுப்ரமணியம் விசாரித்து வருகிறார். அந்த வழக்குத்தான் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதற்கு, காவல்துறை தரப்பில்  பதிலளிக்கப்பட்டது அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 19 ஆர்டர்லிகள் தான் திரும்பப் பெறப்பட்டுள்ளனரா?  நாம் ஒன்றும் இராஜா இராணி கிடையாது, நாட்டின் அனைத்து குடிமக்களும் இராஜா, இராணிக்கள் தான்.. நாம் அனைவரும் மக்களின் சேவகர்கள் தான். முதன்மைச் செயலாளர் முறையாகச் செயல்பட வேண்டும். வெறும் எச்சரிக்கை மட்டுமே போதாது. நடவடிக்கையும் அவசியம் எடுக்க வேண்டும். மக்களுடன் நேரடித் தொடர்பிலிருக்கும் காவல்துறைக்கு ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. 75வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆர்டர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது. எனத் தெரிவித்துள்ளார். வழக்கு ஒத்திவைப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த