முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் வெள்ளிவிழா.

மக்கள் பணத்தை சேமித்த பிரதமரின் மக்கள் மருந்தகங்கள்: மருந்து துறை தலைவர் பெருமிதம்

மத்திய மருந்து & மருத்துவக் கருவிகள் துறை தலைமை செயல் அதிகாரி திரு. ரவி தாதிச் சென்னையில் உள்ள பிரதமரின் மக்கள் மருந்தக உரிமையாளர்களுடன் பெரம்பூரில் உள்ள மருந்தகத்தில் கலந்துரையாடினார். அப்போது, நாட்டில் உள்ள 8,700 பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் மூலம் 1,600 மருந்துகள் மற்றும் 250 அறுவை சிகிச்சை உபகரணங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், சென்னையில் மட்டும் 120 மக்கள் மருந்தகங்கள் மூலம் தரமான உயிர்காக்கும் மருந்துகளை மலிவான விலையில் பொதுமக்களுக்கு வழங்கி வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மத்திய மருந்து & மருத்துவக் கருவிகள் துறை சார்பில், அதிக தேவையுள்ள மருந்துகளை இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் மருந்தகங்கள் மூலம் பொதுமக்களுக்கு மலிவான விலையில் மருந்துகள் வழஙகப்பட்டு வருவதன் மூலமாக கடந்த நிதியாண்டில் ரூ. 5,000 கோடி அளவிற்கு பொதுமக்கள் பணம் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து மத்திய மருந்து & மருத்துவக் கருவிகள் துறையின் மண்டல கிடங்கினை ஆய்வு செய்த திரு. ரவி தாதிச், மாநிலம் முழுவதும் இயங்கும் மக்கள் மருந்தகங்களுக்கு சரியான நேரத்தில் மருந்துகளை விநியோகிக்க அறிவுறுத்தினார். மேலும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணைய வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் டாக்டர்.மன்சுக் மாண்டவியா உரையாற்றினார்


தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தில், மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.மன்சுக் மாண்டவியா இன்று உரையாற்றினார். மத்திய ரசாயனம், உரங்கள் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணையமைச்சர் திரு.பகவந்த் கூபா அவர்கள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் உரையாற்றிய டாக்டர்.மன்சுக் மாண்டவியா, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், ஒரு மருந்து கட்டுப்பாட்டாளராக மட்டுமின்றி, மருந்துகள் எளிதில் கிடைக்கும் வகையில் பணியாற்றுவதாகவும் பாராட்டு தெரிவித்தார். கடந்த 25 ஆண்டுகாள மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதில் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் குறிப்பிட்ட பங்களிப்பை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து தரமான மருந்துப் பொருட்களை தயாரித்து வரும் இந்திய தொழில்துறையினரை அமைச்சர் பாராட்டினார். வணிக நோக்கத்துக்காக மட்டுமின்றி, மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில், மருந்துகளை தயாரிக்க வேண்டும், புதுமையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.


இந்திய மருந்து நிறுவனங்களுக்கு அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று மாண்டவியா உறுதியளித்தார். மருந்துகளுக்குத் தேவையான முக்கியமான பல மூலப்பொருட்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டங்கள் உதவி செய்வதாக அமைச்சர் எடுத்துரைத்தார். கொவிட் பெருந்தொற்று நேரத்தில், இந்திய மருந்து நிறுவனங்களின் பங்களிப்பை அவர் நினைவுகூர்ந்தார். மேலும், மக்களுக்கு தரமான சுகாதார சேவையை அளிப்பதில், தொழில்துறைக்கும், அரசாங்கத்துக்கும் இடையேயான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அமைச்சர் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு.பகவந்த் கூபா, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், கடந்த 25 ஆண்டுகளாக நாட்டுக்கும், மருந்துகள் துறைக்கும் சேவையாற்றி வருவதாக பாராட்டு தெரிவித்தார். “தொழில்துறையினருக்கு தீங்கு விளைவிக்காமல், மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் உறுதி செய்வதாக”வும் அவர் குறிப்பிட்டார்.

தொடக்க அமர்வில், மருந்து தரவு நிர்வாக நடைமுறை 2.0 (ஐடிபிஎம்எஸ் 2.0) இணையதளம் மற்றும் நவீனப்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய ஃபார்மா சாஹி தாம் 2.0 செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. வணிகம் செய்வதை எளிதாக்கும் அரசின் நம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் அனைத்து வகையான படிவங்களையும் ஒற்றைச் சாளர முறையில் கிடைக்கச் செய்ய இது உதவும். மேலும் நாடு முழுவதிலும் உள்ளவர்கள் தேசிய மருந்து விலை நிர்ணைய ஒழுங்குமுறை ஆணையத்துடன் தொடர்பு கொள்ள காகிதம் இல்லா செயல்பாட்டையும் இது கொண்டிருக்கும். பேச்சை அறிதல், தேடப்படும் மருந்துகளின் நிறுவனம், நுகர்வோர் புகார்களைக் கையாளும் முறை போன்றவை ஃபார்மா சாஹி தாம் 2.0 செயலியின் சிறப்பு அம்சங்கள்.

விழாவில் தொடர்ந்து பேசிய பகவந்த் கூபா, “இந்த இரண்டு பயன்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வரும் நாட்களிலும் சிறப்பாகவும், திறமையாகவும் பணியாற்றும்” என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

விழாவில், “தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின், 25 ஆண்டு பயணத்தின் காலவரிசைப்படியான தொகுப்பும்” வெளியிடப்பட்டது. இந்த தொகுப்பு, ஆணையத்தின் 25 ஆண்டு பயணத்தை மட்டும் கொண்டிருக்காமல், மருந்துகளின் விலை நிர்ணயத்துக்கு முக்கியத்துவம் அளித்து, மருந்து ஒழுங்குமுறையின் வளர்ச்சியையும் உள்ளடக்கியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...