முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரே அறக்கட்டளை போட்டி போடும் கவிஞர் சினேகனும் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமியும்

தமிழ் திரைப்படஙகளான ஆட்டோகிராப், ஆடுகளம் உட்பட பல படங்களுக்கு பாடல் எழுதியதால் பிரபலமானவர் கவிஞர் சினேகன்


தற்போது நடிகர் கமல்ஹாசன் நடத்தும் ம.நீ.மையம் கட்சியில் உள்ளார். அவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தான் 2015 ஆம் ஆண்டு முதல் நடத்திவருவதாகக் கூறும்  சினேகம் அறக்கட்டளையை முறையாக பதிவு செய்துள்ளேன். இந்த அறக்கட்டளையை வருமானவரித்துறை அங்கீகரித்து அனுமதி வழங்கியுள்ளது என்று கூறி புகார் தாக்கல் செய்த நிலையில்   


 செய்தியாளர்களிடம் சினேகன் பேசியபோது:- 'கடந்த 2015 ஆம் ஆண்டு சினேகம் ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையைத் தொடங்கி நடத்தி வருவதன் மூலம் பலருக்கும் உதவிகள் செய்கிறேன். சில நாட்களுக்கு முன் எனது நண்பர்கள் என்னிடம் அதிர்ச்சியான தகவல் சொன்னார்கள்  சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி என்பவர் எனது அறக்கட்டளையின் பெயரில் வெப்சைட் தொடங்கி, அதன் மூலம் நன்கொடை வசூலிப்பதாகச் சொன்னார்கள்.

அதைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்... அடுத்த சில நாட்களிலேயே வருமான வரித் துறையினர் அது சம்பந்தமாக என்னிடம்.? விசாரணை செய்தனர். என்னுடைய அறக்கட்டளையின் வரவு செலவு விபரங்களைக் கேட்டார்கள்.. அப்போது தான் ஜெயலட்சுமியின் அத்தனை மோசடியும் அம்பலமானது. அதையடுத்து ஜெயலட்சுமியிடம் இரண்டு முறை விளக்கம் கேட்டும் எந்தப் பதிலும் வரவில்லை. அதனால், இந்த விவகாரம் குறித்து சென்னை காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனப் புகார் கொடுத்துள்ளேன்' என்றார்.

மேலும் நான் இது தொடர்பாக என்னுடைய அறக்கட்டளையின் பெயரை யாரும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்றுகூறி வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினால்... அது தவறான அஞ்சல் முகவரி என்று தபால்  திருப்பி விட்டது. நான் நேரடியாக என்னுடைய மேலாளரை அனுப்பி விசாரித்த போது அந்த சினேகம் ஃபவுண்டேஷன் என்ற பெயரில் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விலாசம் போலியானதென்பது தெரியவந்தது. போலியான விலாசத்தில் என்னுடைய அறக்கட்டளையை இயக்குவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்து தொலைபேசி மூலம் பொதுமக்களை தனியாகச் சந்தித்து, அவர்களைத் தன் வலையில் வீழ்த்திப் பணம் பறிக்கும் ஜெயலட்சுமி மீது மோசடி வழக்கு பதிவு செய்து பொதுமக்களை பாதுகாப்பு வேண்டும். மேலும், சினேகம் ஃபவுண்டேஷன் பெயரை தவறாகப் பயன்படுத்தியதற்காக ஜெயலட்சுமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியும்... அந்தப் போலியான இணையதளத்தை முடக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்" என்று புகாரில் குறிப்பிட்டிருந்த நிலையில் கவிஞர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்கும் படி நேற்று சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார்.



பின்னர் அவர் கூறியதாவது:-. ``என் மீது கவிஞர் சினேகன் அவதூறாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்திருக்கிறார். நான் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் சினேகம் அறக்கட்டளையைத் தொடங்கி மக்களுக்கு உணவு உட்பட பல்வேறு சேவைகளை செய்துவருகிறேன். கொரோனா பேரிடர் ர். காலத்தில் மக்களுக்கு எங்களின் சினேகம் அறக்கட்டளை மூலம் முடிந்த உதவிகளை செய்திருக்கிறோம். ஆனால், கவிஞர் சினேகன் தன்னுடைய சினேகம் அறக்கட்டளையின் பெயரை நான் தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களை தனியாகச் சந்தித்துப் பணம் பறித்ததாக புகார் அளித்திருக்கிறார். அது முற்றிலும் என்னுடைய நிறுவனம். அதன் பெயரைக் களங்கப்படுத்தும் வகையிலும், நான் பெண் என்று கூட பாராமல் என்னை அவமானப்படுத்தும் வகையில் கவிஞர் சினேகன் இந்தக் குற்றச்சாட்டுக்களை சொல்லியிருக்கிறார். மேலும், நான் பாரதிய ஜனதா.கட்சியில் மாநில மகளிரணித் துணைத் தலைவியாக இருந்து வருகிறேன். அதைப் போல கவிஞர் சினேகனும் ஒரு கட்சியில் இருந்து வருகிறார். அரசியல் ஆதாயத்துக்காகக்கூட அவர் என்மீது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கலாம் என நான் கருதுகிறேன். ஏனெனில் தமிழ்நாட்டில் பா.ஜ.க வளர்ந்து வருவது மற்ற கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் பா.ஜ.க நிர்வாகிகள்மீது இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். என்னுடைய அறக்கட்டளை, அண்ணாநகரில் தான் செயல்பட்டு வருகிறது. ஆனால் கவிஞர் சினேகன், இணையதளத்தில் கிடைத்த முகவரி, போலி என்று குறிப்பிட்டிருக்கிறார். என் மீது அவதூறாகக் குற்றம்சாட்டிய கவிஞர் சினேகன், பொது வெளியில் மன்னிப்புக் கேட்கவேண்டும். இல்லையென்றால் அவர்மீது மானநஷ்ட வழக்குத் தொடர்வேன் என்றார். சின்னத்திரை நடிகை

ஜெயலட்சுமியை பொறுத்தவரை, டிவி சீரியல்களில்  பிரபலம்.. திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.. பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டனர்.. பாஜக சார்பாக சட்டசபைத் தேர்தலிலும் இவர் பிரச்சாரம் மேற்கொண்டார். இவர் மீது ஏற்கெனவே பல மோசடி வழக்குகள் உள்ளது.. மகளிர் சுய உதவிக் குழுவினர் அளித்த மோசடிப் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது, கடன்வாங்கிய சுய உதவி குழுக்களில் உள்ள பெண்கள், மாதமாதம் தவணைத் தொகை கட்டிய பிறகும், அதெல்லாம் வட்டி பணம், அசல் எங்கே? என்று நடிகை கேட்டு மிரட்டுவதாகவும், இரவு நேரத்தில் எங்கள் வீட்டிற்கு ஆண்களை அனுப்பி கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஆணையர் அலுவலகத்தில் இவர் மீது புகார் ஒன்றை தந்திருந்த நிலையில் இப்படி பல புகார்கள் ஜெயலட்சுமி மீதுள்ள நிலையில், இன்னொரு புகாரை சினேகன் தந்திருப்பது இப்போது விவாதம் ஆனாலும் இதன் மீது சில ஆய்வுகள் தேவை. நடிகை ஜெயலட்சுமி பாஜக பொறுப்பு வகித்தவர் அங்கு பல ஆடிட்டர் உள்ள கட்சி அது அவருக்கு கை கொடுக்கும் ஆனால் இதில் கவிஞர் சினேகன் நடத்தும் டிரஸ்ட் வரவு செலவு தணிக்கை மற்றும் ஆண்டு அறிக்கை சரியாக இருந்தால் மட்டுமே இதில் நடவடிக்கை இயலும். எடுத்தேன் கவிழ்த்தேன் என இதில் நடவடிக்கை வர வாய்ப்பு இல்லை.



ஒரே பெயரில் பலர் இருக்கலாம் ஆனால் ஒரே பெயரில் அறக்கட்டளை சட்டப்படி பதிவு இருக்க வாய்ப்பு இல்லை ஒருவர் அறக்கட்டளைகள் சட்டப்படியும் மற்றொருவர் சங்கப் பதிவு சட்டப்படியும் பதிவு செய்திருந்தால் கூட அதை வைத்து நிதி திரட்டும் செயல் முடியாது  காரணம் மத்திய உள்துறை அனுமதி தேவை மேலும் கம்பெனிகள் சட்டம் பிரிவு 25 ன் படி துவங்கி அதே பெயரில் வேறு ஒருவர் நிறுவனங்கள் நடத்தினாலும் டிரஸ்ட் சட்டப்படி வருமான வரித்துறை அனுமதிக்காது கணக்கு எண் வழங்காதுஅப்படி இருக்க வருமான வரி சோதனை நடத்தினர் என சினேகன் கூறுவது சரியா எனப் பார்த்தால் உண்மை வெளிவரும் டிரஸ்ட் சட்டப்படி முதலில் வருமான வரி கணக்கு எண் மற்றும் டிரஸ்ட் பதிவு பத்திரம் மற்றும் தீர்மானம் இல்லாமல் வங்கிகள் கணக்கு துவக்க அனுமதிப்பது இல்லை மேலும் கணக்கு வருடம் தோறும் தாக்கல் செய்த நிலை இருந்து அதன் அடிப்படையில் தான் மத்திய உள்துறை அமைச்சகம் 10 A ,10B  12A,12B, மற்றும் 80 A முதல் 80 G வரை வழங்கும் அதன் பின்னர் தான் நிதி திரட்டும் பணிகள் டிரஸ்ட் துவங்கும் இதில் வெளிநாட்டு நிதி பெறுவதற்கு கட்டாயம் FCRA பெற வேண்டும் இவ்வளவு நடைமுறை உள்ள போது கவிஞர் சினேகனும் நடிகை ஜெயலெட்சுமியும் தவறு யார் செய்தது என கண்டறிவது பெரிய செயல் இல்லை ஆனால் இது பின்னணி வேறு ஏதோ உண்டு அது விரைவில் தெரியலாம். என்பதே இங்கு பொது நீதி.        "அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்". இது சினேகன் எழுதிய பாடல்      அந்த மாற்றம் விரைவில் வரலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...