முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரே அறக்கட்டளை போட்டி போடும் கவிஞர் சினேகனும் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமியும்

தமிழ் திரைப்படஙகளான ஆட்டோகிராப், ஆடுகளம் உட்பட பல படங்களுக்கு பாடல் எழுதியதால் பிரபலமானவர் கவிஞர் சினேகன்


தற்போது நடிகர் கமல்ஹாசன் நடத்தும் ம.நீ.மையம் கட்சியில் உள்ளார். அவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தான் 2015 ஆம் ஆண்டு முதல் நடத்திவருவதாகக் கூறும்  சினேகம் அறக்கட்டளையை முறையாக பதிவு செய்துள்ளேன். இந்த அறக்கட்டளையை வருமானவரித்துறை அங்கீகரித்து அனுமதி வழங்கியுள்ளது என்று கூறி புகார் தாக்கல் செய்த நிலையில்   


 செய்தியாளர்களிடம் சினேகன் பேசியபோது:- 'கடந்த 2015 ஆம் ஆண்டு சினேகம் ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையைத் தொடங்கி நடத்தி வருவதன் மூலம் பலருக்கும் உதவிகள் செய்கிறேன். சில நாட்களுக்கு முன் எனது நண்பர்கள் என்னிடம் அதிர்ச்சியான தகவல் சொன்னார்கள்  சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி என்பவர் எனது அறக்கட்டளையின் பெயரில் வெப்சைட் தொடங்கி, அதன் மூலம் நன்கொடை வசூலிப்பதாகச் சொன்னார்கள்.

அதைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்... அடுத்த சில நாட்களிலேயே வருமான வரித் துறையினர் அது சம்பந்தமாக என்னிடம்.? விசாரணை செய்தனர். என்னுடைய அறக்கட்டளையின் வரவு செலவு விபரங்களைக் கேட்டார்கள்.. அப்போது தான் ஜெயலட்சுமியின் அத்தனை மோசடியும் அம்பலமானது. அதையடுத்து ஜெயலட்சுமியிடம் இரண்டு முறை விளக்கம் கேட்டும் எந்தப் பதிலும் வரவில்லை. அதனால், இந்த விவகாரம் குறித்து சென்னை காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனப் புகார் கொடுத்துள்ளேன்' என்றார்.

மேலும் நான் இது தொடர்பாக என்னுடைய அறக்கட்டளையின் பெயரை யாரும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்றுகூறி வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினால்... அது தவறான அஞ்சல் முகவரி என்று தபால்  திருப்பி விட்டது. நான் நேரடியாக என்னுடைய மேலாளரை அனுப்பி விசாரித்த போது அந்த சினேகம் ஃபவுண்டேஷன் என்ற பெயரில் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விலாசம் போலியானதென்பது தெரியவந்தது. போலியான விலாசத்தில் என்னுடைய அறக்கட்டளையை இயக்குவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்து தொலைபேசி மூலம் பொதுமக்களை தனியாகச் சந்தித்து, அவர்களைத் தன் வலையில் வீழ்த்திப் பணம் பறிக்கும் ஜெயலட்சுமி மீது மோசடி வழக்கு பதிவு செய்து பொதுமக்களை பாதுகாப்பு வேண்டும். மேலும், சினேகம் ஃபவுண்டேஷன் பெயரை தவறாகப் பயன்படுத்தியதற்காக ஜெயலட்சுமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியும்... அந்தப் போலியான இணையதளத்தை முடக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்" என்று புகாரில் குறிப்பிட்டிருந்த நிலையில் கவிஞர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்கும் படி நேற்று சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார்.



பின்னர் அவர் கூறியதாவது:-. ``என் மீது கவிஞர் சினேகன் அவதூறாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்திருக்கிறார். நான் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் சினேகம் அறக்கட்டளையைத் தொடங்கி மக்களுக்கு உணவு உட்பட பல்வேறு சேவைகளை செய்துவருகிறேன். கொரோனா பேரிடர் ர். காலத்தில் மக்களுக்கு எங்களின் சினேகம் அறக்கட்டளை மூலம் முடிந்த உதவிகளை செய்திருக்கிறோம். ஆனால், கவிஞர் சினேகன் தன்னுடைய சினேகம் அறக்கட்டளையின் பெயரை நான் தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களை தனியாகச் சந்தித்துப் பணம் பறித்ததாக புகார் அளித்திருக்கிறார். அது முற்றிலும் என்னுடைய நிறுவனம். அதன் பெயரைக் களங்கப்படுத்தும் வகையிலும், நான் பெண் என்று கூட பாராமல் என்னை அவமானப்படுத்தும் வகையில் கவிஞர் சினேகன் இந்தக் குற்றச்சாட்டுக்களை சொல்லியிருக்கிறார். மேலும், நான் பாரதிய ஜனதா.கட்சியில் மாநில மகளிரணித் துணைத் தலைவியாக இருந்து வருகிறேன். அதைப் போல கவிஞர் சினேகனும் ஒரு கட்சியில் இருந்து வருகிறார். அரசியல் ஆதாயத்துக்காகக்கூட அவர் என்மீது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கலாம் என நான் கருதுகிறேன். ஏனெனில் தமிழ்நாட்டில் பா.ஜ.க வளர்ந்து வருவது மற்ற கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் பா.ஜ.க நிர்வாகிகள்மீது இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். என்னுடைய அறக்கட்டளை, அண்ணாநகரில் தான் செயல்பட்டு வருகிறது. ஆனால் கவிஞர் சினேகன், இணையதளத்தில் கிடைத்த முகவரி, போலி என்று குறிப்பிட்டிருக்கிறார். என் மீது அவதூறாகக் குற்றம்சாட்டிய கவிஞர் சினேகன், பொது வெளியில் மன்னிப்புக் கேட்கவேண்டும். இல்லையென்றால் அவர்மீது மானநஷ்ட வழக்குத் தொடர்வேன் என்றார். சின்னத்திரை நடிகை

ஜெயலட்சுமியை பொறுத்தவரை, டிவி சீரியல்களில்  பிரபலம்.. திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.. பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டனர்.. பாஜக சார்பாக சட்டசபைத் தேர்தலிலும் இவர் பிரச்சாரம் மேற்கொண்டார். இவர் மீது ஏற்கெனவே பல மோசடி வழக்குகள் உள்ளது.. மகளிர் சுய உதவிக் குழுவினர் அளித்த மோசடிப் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது, கடன்வாங்கிய சுய உதவி குழுக்களில் உள்ள பெண்கள், மாதமாதம் தவணைத் தொகை கட்டிய பிறகும், அதெல்லாம் வட்டி பணம், அசல் எங்கே? என்று நடிகை கேட்டு மிரட்டுவதாகவும், இரவு நேரத்தில் எங்கள் வீட்டிற்கு ஆண்களை அனுப்பி கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஆணையர் அலுவலகத்தில் இவர் மீது புகார் ஒன்றை தந்திருந்த நிலையில் இப்படி பல புகார்கள் ஜெயலட்சுமி மீதுள்ள நிலையில், இன்னொரு புகாரை சினேகன் தந்திருப்பது இப்போது விவாதம் ஆனாலும் இதன் மீது சில ஆய்வுகள் தேவை. நடிகை ஜெயலட்சுமி பாஜக பொறுப்பு வகித்தவர் அங்கு பல ஆடிட்டர் உள்ள கட்சி அது அவருக்கு கை கொடுக்கும் ஆனால் இதில் கவிஞர் சினேகன் நடத்தும் டிரஸ்ட் வரவு செலவு தணிக்கை மற்றும் ஆண்டு அறிக்கை சரியாக இருந்தால் மட்டுமே இதில் நடவடிக்கை இயலும். எடுத்தேன் கவிழ்த்தேன் என இதில் நடவடிக்கை வர வாய்ப்பு இல்லை.



ஒரே பெயரில் பலர் இருக்கலாம் ஆனால் ஒரே பெயரில் அறக்கட்டளை சட்டப்படி பதிவு இருக்க வாய்ப்பு இல்லை ஒருவர் அறக்கட்டளைகள் சட்டப்படியும் மற்றொருவர் சங்கப் பதிவு சட்டப்படியும் பதிவு செய்திருந்தால் கூட அதை வைத்து நிதி திரட்டும் செயல் முடியாது  காரணம் மத்திய உள்துறை அனுமதி தேவை மேலும் கம்பெனிகள் சட்டம் பிரிவு 25 ன் படி துவங்கி அதே பெயரில் வேறு ஒருவர் நிறுவனங்கள் நடத்தினாலும் டிரஸ்ட் சட்டப்படி வருமான வரித்துறை அனுமதிக்காது கணக்கு எண் வழங்காதுஅப்படி இருக்க வருமான வரி சோதனை நடத்தினர் என சினேகன் கூறுவது சரியா எனப் பார்த்தால் உண்மை வெளிவரும் டிரஸ்ட் சட்டப்படி முதலில் வருமான வரி கணக்கு எண் மற்றும் டிரஸ்ட் பதிவு பத்திரம் மற்றும் தீர்மானம் இல்லாமல் வங்கிகள் கணக்கு துவக்க அனுமதிப்பது இல்லை மேலும் கணக்கு வருடம் தோறும் தாக்கல் செய்த நிலை இருந்து அதன் அடிப்படையில் தான் மத்திய உள்துறை அமைச்சகம் 10 A ,10B  12A,12B, மற்றும் 80 A முதல் 80 G வரை வழங்கும் அதன் பின்னர் தான் நிதி திரட்டும் பணிகள் டிரஸ்ட் துவங்கும் இதில் வெளிநாட்டு நிதி பெறுவதற்கு கட்டாயம் FCRA பெற வேண்டும் இவ்வளவு நடைமுறை உள்ள போது கவிஞர் சினேகனும் நடிகை ஜெயலெட்சுமியும் தவறு யார் செய்தது என கண்டறிவது பெரிய செயல் இல்லை ஆனால் இது பின்னணி வேறு ஏதோ உண்டு அது விரைவில் தெரியலாம். என்பதே இங்கு பொது நீதி.        "அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்". இது சினேகன் எழுதிய பாடல்      அந்த மாற்றம் விரைவில் வரலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த