முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அருள் வழங்கும் வெட்டுடையாள் ஆலய ஆடி மாதம் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடந்தது

அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் கையில் திரிசூலம் – ஒரு காலை உயர்த்தி, ஒரு காலை இறக்கி அமர்ந்த நிலையில் வேகம். கண்களில் உக்கிரத்துடன் காட்சிதரும் அம்மனுக்குப் பின்னணி வரலாறு 18 ஆம் நூற்றாண்டில் துவங்கும்.

சிவகங்கைச் சமஸ்தானத்தின் மன்னர், முத்து வடுகநாதர் எனும் பெரிய உடையனத் தேவரைக் கொலை செய்ய நேரம் பார்த்துக் காத்திருக்கும் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனிப் படைத் தளபதி கா்னல் ஜோசப் ஸ்மித் காளையார் கோவில் மதில் சுவர் பகுதியில் ஒளிந்திருந்த போது உள்ளே நுழைந்த மன்னர் முத்து வடுகநாதர் எனும் உடையனத்தேவரையும் அவரது இரண்டாவது மனைவி கௌரி நாச்சியாரையும்




துப்பாக்கியால்  ஸ்மித் சுட்ட நிலையில் உயிர் துறந்த மன்னரும் அவரது இரண்டாவது மனைவியும் 1772 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ஆம் தேதியில். முத்து உடையத்தேவரின் முதல் மனைவியான வேலுநாச்சியார், தனது தளபதியும் பிரதானிகளுமானன மருது சகோதரர்களுடன் காளையார் கோவிலுக்கு வந்து கணவருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கிருந்து நாட்டரசன்கோட்டைக்குக் கிளம்புகிறார். அரியாக்குறிச்சி காட்டு வழியில், ஆங்கிலேயப் படை வேலு நாச்சியாரைப் பிடிக்கத் துரத்துகிறது. விரைந்து கீரனூா் கண்மாய்க்கரையைப் படை பரிவாரங்களுடன் தாண்டி விடுகிறார் ராணியார் அதை அறிந்து ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனிப்படை வருகிறது.


காட்டிற்குள் அய்யனார் கோவில் முன்பாக மாடு மேய்த்துக் கொண்டு இருந்த பெண்ணைப் பார்த்ததும் நின்று வினவியது 

“இந்தப்பக்கம் வேலுநாச்சியார் படை போனதைப் பார்த்தாயா? எந்தப் பக்கம் போனார்கள் கூறு ?” அந்தப் பெண்  பார்வையில் பயமோ, மிரட்சியோ இல்லாமல, போன திசை தெரியும். ஆனால் சொல்ல முடியாது”எனப் பதில் 



வந்த படைக்குக் கோபம் வாள் கொண்டு ஆங்கிலேயப் படை வீரனின் ஒரே வீச்சு தலை தனியான காரணமாக. உடையாள் என்கிற அந்தப் பெண் வெட்டுபட்டதும் ‘வெட்டுடையாள்' அன்று துவங்கி நாடு காக்கும் காவல் தெய்வமாக ‘அம்மன்’அருள் மிகு வெட்டுடையார் காளியம்மன். அதன் பின்னர் 

எட்டு வருடங்கள் ஓடின மைசூர் மன்னர் ஹைதர் அலி,  அவரது தளபதி திப்பு சுல்தான் உதவியுடன் சிவகங்கைச் சீமையை மீட்டாா்கள் மருத்துவர்கள் மற்றும் இராணி வீரமங்கை வேலுநாச்சியார். அரசியான பின்னர் தனக்காக வெட்டுடையாள்  வெட்டுண்ட இடத்திற்குச் சென்றார்.

அங்கு தெய்வாமாய் வரம் வழங்கும் சத்தியம் காகக நீதி வழங்கும் தேவதையாக அருள் கொண்ட வெட்டுடையாள் விளங்குவதை வேலு நாச்சியாரிடம் சொல்கிறார்கள் மருது சகோதரர்கள் கேட்டதும் இராணி வேலு நாச்சியாருக்கும் மகிழ்ச்சி. உடனே அந்தக் கோவிலுக்கு பூசாரிகளாக கருப்பு வேளார், காாி வேளார் என இருவரை இராணியார் நியமித்தார் தன்னுடைய காணிக்கையாக தன் வைரத் தாலியைச் செலுத்தி வணங்கினார்.


அதர்மத்தை அழித்து, நீதியை நிலைநாட்டுவதற்கான தெய்வீகமான இன்னும் இன்றும் அடையாளமாக சமஸ்தானத்தின் காவல் தெய்வமாக நிற்கிறாள் அருளும் வெட்டுடையாள் தேவி அம்மன்.

மனதில் இருக்கும் கஷ்டத்தோடு நேரில் இங்கு  வந்து, மனப்பாரத்தை இறக்குகிறார்கள் பக்தர்கள் தீராத நோய்களுக்கு வேண்டிக்கொள்கிறார்கள் வியாபார நஷ்டம் குழந்தைப்பேறு இல்லா நிலை எல்லாவற்றிற்கும் இங்கே வந்து வேண்டிக்கொண்டு நிறைவேறியதும் நேர்த்திக் கடன் செலுத்தும் மக்களுக்கு 



“எப்படியாவது நீதி வழங்குவாள் வெட்டுடையாள்” என்ற நம்பிக்கை இருப்பதால், நீதிக்காக பல ஏழைகள் நீதிமன்றம் முறையிட இயலாமல் இங்கு காசு வெட்டிப் போடும் பாங்கு அனா காலம் முதல் 

10 பைசா காலத்திலிருந்து , ஐம்பது பைசா பின்னர் ஒரு ரூபாய்  வெட்டுடையாளுக்கு நேர்ந்து கொண்டு வெட்டினால் சம்பந்தப்பட்ட எதிரியை நீதி கேட்டு பழி தண்டிக்கும் அம்மன் என்று ஒரு நம்பிக்கை அணைத்து மக்களிடம் உள்ளது.

அநீதியை, மோசடியை நீதிமன்றம் சென்று வரும் நிலை மாதிரி நேரே இங்கு வந்து காசு வெட்டுகிறார்கள்.

வெட்டுடையாள் முன்பு சில வழக்குகளும் நடப்பதுண்டு. வழக்கு சம்பந்தப்பட்ட இரு கோஷ்டியினரும் சூடத்துடன் வந்து அம்மன் முன் சூடத்தைக் கொளுத்திக் கையால் அணைக்கச் சொல்கிறார்கள். அவுங்கப் போன திசை தெரியும். ஆனா சொல்ல மாட்டேன்”


அந்த வாக்கு நாடு காக்கும் காவல் தெய்வம் தற்போது அருள் தரும் ஆலயத்தில் ஆடி மாதம் திருவிழா சிறப்பாக நடந்தது 

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் கொல்லங்குடி அறியாகுறிச்சி ஆலயத்தில்  நுழைந்ததும் ஆங்காரத்துடன் வெட்டுடையாள் காளியம்மன். காலடியில் பழிவாங்கப்படும் ஒருவன். திரிசூலம், கழுத்தைச் சுற்றி நிறைந்திருக்கும் எலுமிச்சம்பழத்தால் மாலைகள்.

காசு வெட்டிப் போட்டு  வேண்டியது நிறைவேறிய நிலையில் தங்கம், வெள்ளியிலான சிறு பொருட்களைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.தினமும் நான்குகால பூஜை நடக்கிறது. காலை 6 மணிக்கு திறக்கும் கோவிலை, மாலை 6 மணி வரை தரிசனம் 

கோவிலுக்குள் வெட்டுடைய அய்யனார், சோனைக் கருப்பசாமி எனும் பரிகார தேவதைகள் உட்பட கிழக்கு நோக்கியிருக்கிற அய்யனார் முகத்தில் சூரியோதயத்தின் போது வெயில் சிறு சதுரமாக வந்து போகும் . மாலை மறையும்போது மேற்கு நோக்கி இருக்கிற வெட்டுடையாள் தேவி முகத்தில் வந்து போகும் வெயில் கீற்று.

தீர்ப்பு கூறும் முன்பாக சில நீதிபதிகளும் வணங்கும்  தேவதை அம்மா ஆலயத்தில் பங்குனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கொடியேற்றம்.

துவங்கி 10 நாட்கள் ஊரே களைகட்ட நடக்கும் திருவிழா. அணைத்து ஜாதி மதம் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வணங்கும் விழா.

ஆடி மாதம் 19 ஆம் தேதி பூச்சொரிதல் விழா பிரமாண்டமாக நடந்தது நவராத்திரியில் விஜயதசமி அன்று குதிரை வாகனத்தில் வரும் வெட்டுடையார் காளி அம்மனை  வழிபட செவ்வாய்க்கிழமை, மற்றும் வெள்ளியன்று மட்டும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் வருகிறது.

கோவிலுக்குப் பக்கவாட்டில், நீண்ட அரிவாளுடன் கற்சிலைகளாக அமர்ந்திருக்கிறார்கள் வெட்டுடையாளுக்குப் பூசாரிகளாக நியமிக்கப்பட்ட இரு குலாலர் வழி வந்த வேளார்கள்.

கிறிஸ்தவர்கள், இஸ்லாமிய மக்கள் என்று பாகுபாடில்லாமல் பலரும் வருகிறார்கள். காரணம் தனக்கு எப்படியும் நீதி கிடைக்கும் என்று மக்கள் மனதில் பதிந்து கிடக்கும் நம்பிக்கை தான்.சிவகங்கை காளையார் கோவில் செல்லும் சாலையில் இடையே பத்தாவது கி.மீ தொலைவில் உள்ளது அணைவரும் பணிந்து சென்று வணங்கி வாரீர் ! பொய்யில்லை  கண்ட உண்மை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த