அழகப்பா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஒரு மாத காலத்திற்குள் நடத்தப்படுமென புதிய துணைவேந்தர் முனைவர். இரவி தகவல்
சிவகங்கை மாவட்டம்,காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையில் பணியாற்றிய பேராசிரியர் இரவியை தமிழ்நாடு ஆளுநர் இரவி நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். இவருக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள கிராமம் பூர்வீகம். 25 ஆண்டுகளாக அழகப்பா பல்கலைக் கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றுகிறார்.
அதனடிப்படையில் புதிய துணைவேந்தராக முனைவர். இரவி இன்று காலை பதவியேற்றார் . துணைவேந்தர் முனைவர். இரவிக்கு அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களான டாக்டர். சுவாமிநாதன் டாக்டர். சத்திய நாராயணன் , டாக்டர். குணசேகரன், டாக்டர். கருப்புசாமி, உள்ளிட்ட துறைத் தலைவர்களும், பேராசிரியர்களும், அலுவலர்களும், வாழ்த்துத் தெரிவித்தனர். முன்னதாக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுப்பையா புதிதாகப் பொறுப்பேற்ற துணைவேந்தர் ரவிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து துணைவேந்தர் இரவி செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, அழகப்பா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காகவும் அதன் உள்கட்டமைப்பை உறுதிப்படுத்தவும், கடினமாக உழைக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.
பல்கலைக்கழகப் பணியாளர்களைப் பொறுத்தவரை சட்டச் சிக்கல்கள் இருப்பதற்குத் தகுந்தார் போல் அலசி ஆராய்ந்து முடிவு மேற்கொள்ளப்படும், பணியாளர்களின் நலன் காக்கப்படுமென்றார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக அழகப்பா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறாமலிருக்கிறது. இதனால் கல்வி பயின்ற குறிப்பாக உயர்கல்வி பயின்ற மாணவர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் திண்டாடுகின்றார்கள். அதனைக் கருத்தில் கொண்டு, விரைவில் பட்டமளிப்பு விழா நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படுமென்றார். அதன்படி எவ்வளவு நாள்களுக்குள் பட்டமளிப்பு விழாவை நடத்த உத்தேசமாக முடிவு செய்துள்ளீர்கள்? என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த துணைவேந்தர் ரவி சரியாக 30 நாட்களுக்குள் பட்டமளிப்பு விழாவை நடத்துவோமென்று தீர்க்கமாகப் பதிலளித்தார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர்.ரவி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்னும் ஒரு மாதத்திற்குள் அழகப்பா பல்கலைக்கழக பட்டளிப்பு விழா நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அப்போது ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் டாக்டர். ஆர். சுவாமிநாதன், டாக்டர். குணசேகரன்,டாக்டர். கருப்பசாமி, மற்றும் சங்கர நாராயணன், உடனிருந்தனர்.
கருத்துகள்