அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம் வழக்கில் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி மனு விசாரணைக்கு ஏற்பு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
தமிழ்நாட்டிலுள்ள கோவில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும்
அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்தாலும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது என்பதும் முக்கியமானது மேலும் இது சம்பந்தமாக ஏற்கெனவே தாக்கல் செய்து விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இனிமேல் இணைந்து பட்டியல் இடப்படும் என்பது தான் அத்துடன் இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது அது குறித்து ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்த அரசுத் தரப்பு, உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்ததன் பின்னர் ஒரு வருடம் பயிற்சி முடித்தவர்கள்
விண்ணப்பிக்கலாமென அறிவிக்கப்பட்டதாக பதில் மனுவை தாக்கல் செய்தது. மேலும் சிவாச்சார்யர்கள் வழக்கில், ஆகம விதிகள் கற்றவர்கள் அர்ச்சகராகலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளதையும் சுட்டிக் காட்டித் தான் உயர்நீதிமன்றத்தில் வாதிடட்டது. தற்போது நேற்று வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசின் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் முடிவுக்குத் தடை விதிக்க மறுத்தது. இறுதி தீர்ப்பு தான் தீர்வாகும் அத்துடன் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்துள்ள மனு மீது தமிழக அரசு பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது மட்டுமின்றி நிலுவையிலுள்ள ரிட் மனுக்களுடன், டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியின் ரிட் மனுவும் சேர்த்து விசாரிக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளது.
தமிழ் நாட்டில் ஆலயங்கள் பலவகையானது அதில் சிவன் ஆலயத்தில் சைவ நெறி அந்தணர்களும், பெருமாள் கோவில் பூஜையில் வைணவ நெறியைப் பின்பற்றும் அந்தணர்களும், முருகன் கோவில் பூஜையில் ஆண்டிப்பண்டாரங்களும், அய்யனார், கருப்பர் போன்ற பலரது குலதெய்வ ஆலயத்தில் குளாளர் எனும் பரம்பரை வேளார்களும், காளி கோவில் பூஜையில் தெலுங்கு வழி தாசரிகளோ அல்லது கவிச்சக்கரவர்த்தி கம்பர் வழி வந்த உவச்சர் எனும் பட்டர்கள் மட்டுமே பூஜகராக உள்ளன இவை அல்லாத கிராம ஆலயங்களில் அவரவர் சமூக மற்றும் இனவழி வந்த பூஜாரி முறை உள்ள நிலையில் இது குறித்து உண்மை நிலை. இருக்கும் போது இந்த ஆலயங்களில் பல இன்று வரை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லை இந்த நிலையில் அணைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆகலாம்
அரசாணையின் படி முதல் முறையாக தேர்வு செய்யப்பட்ட 208 நபருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வு பசுமைவழிச்சாலையிலுள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் சில மாதங்கள் முன்பு நடந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் கோவில்களில் பணிபுரிவதற்காக அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்று தேர்வு செய்யப்பட்ட அனைத்து சாதியினை சார்ந்த 24 அர்ச்சகர்கள், இனச் சுழற்சி முறையில் இதர பாடச்சாலையில் பயிற்சி பெற்ற 34 அர்ச்சகர்கள், பூசாரிகள், பட்டாசாரியார்களுக்கும், 20 ஓதுவார்கள், 17 பரிசாரகர், நய்வேத்யம், சுயம்பாகம், 23 திருவலகர்கள், 25 காவல், நந்தவனம் பராமரிப்பு, தோட்டப் பணியாளர்களுக்கும், 28 தவில், நாதஸ்வரம் (மேளம் செட்), சுருதி ஆகியோருக்கும், 2 திருமஞ்சனம், 3 ஸ்தானிகம், 7 மணியம், ஊழியம், எழுத்தர், சீட்டு விற்பனை, 3 பரிகலம், 2 மாலை கட்டி, 3 சுப்பரபாதம், தேவபாராயணம், அத்யாபாகருக்கும், 3 திருவடி, வில்லம், உக்ராணம், 1 குடைகாரர், 1 யானை பாகன், கருணை அடிப்படையில் 12 நபர்கள் என மொத்தம் 208 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கிய அடையாளமாக 75 நபருக்கு பணிநியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், உயிரிழந்த 3 பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சத்துக்கான குடும்ப நலநிதியும், 5 ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலு, பிரபாகர ராஜா, ஆதினம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாந்தலிங்க மருதாசல அடிகள், தவத்திரு குமரகுருபர சுவாமிகள், ஆன்மிக பேச்சாளர்கள் சுகி சிவம், தேச மங்கையர்க்கரசி,
அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கண்ணன் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். உயிரிழந்த 3 பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சத்துக்கான குடும்ப நலநிதியும், 5 ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்அந்த நியமனம் அணைத்தும் இந்த வழக்கில் இறுதியில் பிறப்பிக்கப்படும் உத்தரவு மூலம் தான் இந்த அணைத்து ஜாதி அர்ச்சகர் ஆகலாம் எனும் சமூகத்தில் நீதி சமநீதி காரணமாக வெளிவந்த அரசாணை குறித்து தீர்வு வரும்
கருத்துகள்