தமிழகத்தில் சமூக ஊடகங்களில் வதந்திகளைப் பரப்பும் நபர்களைக் கண்டுபிடித்து உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறையில் தனிக் குழுக்கள் அமைப்பு.
பொய்யான தகவல்களைப் பதிவு செய்து அதன் மூலம் வதந்திகளைப் பரப்பி குழப்பங்களையும், கலவரங்களையும் ஏற்படுத்தும் நபர்களைக் கண்காணிக்கக் குழுக்கள் அமைக்கப்பட்டது.
தமிழகத்தின் காவல்துறை சார்பில் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட 'சமூக ஊடகக் குழுக்கள்' அமைக்கப்பட்டுள்ளன. சமூக வலைதளம் வாயிலான பாலியல் குற்றங்கள் மற்றும் வதந்திகளைக் கண்காணிக்கக், காவல் துறையில், புதிதாக சமூக ஊடகக் குழுக்களை ஏற்படுத்தி, காவல்துறையின் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பதிவு செய்து, வதந்திகளை பரப்பி, அதன் வாயிலாக, குழப்பங்கள் மற்றும் கலவரங்களை ஏற்படுத்தி, காவல் துறைக்கு அதன் காரணமாக அவப்பெயரை வருவதாகவும் அதன் காரணமாக அவர்களைக் கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதெனவும்.
அதேபோல, சமூக வலைதளம் மற்றும் இணைய வழியிலான பாலியல் குற்றங்கள், போதை பொருள் விற்பனை, பண மோசடி போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை, எளிதில் கண்டுபிடிக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளதாகவும். இதற்காக, சென்னை உட்பட ஒன்பது நகரங்களிலும், 37 மாவட்டங்களிலும், 203 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலருடன், சமூக ஊடகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதற்கு, கணினிசார் திறன், சைபர் தடய அறிவியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவினர் சைபர் கிரைம் பிரிவு, கண்காணிப்பாளர் ., தலைமையின் கீழ் இறங்குவார்கள். பொய்யான பதிவுகளை, சமூக வலைதளம் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்பும் விஷமிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அவர்களால் பரப்பப்படும் வதந்திகளை நீக்குவதோடு, அவர்களின் சமூக வலைதளக் கணக்குகளை முடக்கும் செயலிலும் ஈடுபடுவர்.
கணினி சார் குற்ற வழக்குகளைப் பதிவு செய்வதிலும், இக்குழுவினர் துரிதமாகச் செயல்படுவர். இந்த நடவடிக்கையின் வாயிலாக, ஜாதி,மத அரசியல், சமூக,வழி சைபர் குற்றம் தடுக்கவும் முடியும்.
கருத்துகள்