முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டோக்கியோவில் இந்தியா-ஜப்பான் 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

டோக்கியோவில் இந்தியா-ஜப்பான் 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கை



அமைச்சர் ஹயாஷி அவர்களே, அமைச்சர் ஹமாடா அவர்களே, டாக்டர் ஜெயசங்கர் அவர்களே, ஊடகவியலாளர்களே, பெரியோர்களே, தாய்மார்களே,

முதற்கண் அன்பான விருந்தோம்பல் மற்றும் சிறப்பாக கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்த ஜப்பான் அமைச்சர்கள், அவர்களது குழுவினருக்கு எனது நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று எங்களது விவாதத்தின் போது, பரஸ்பர நலன் சார்ந்த இருதரப்பு மற்றும் பிராந்திய விஷயங்கள் குறித்து விரிவாக அலசப்பட்டது.  ஆசியாவின் இரண்டு எழுச்சிமிகு ஜனநாயக நாடுகள் என்ற வகையில், சிறப்பு பாதுகாப்பு மற்றும் உலக ஒத்துழைப்பை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.  இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்தாண்டு இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக உள்ளது. இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த உறவுகள் உள்ளன.

இன்றைய விவாதத்தின் போது, ராணுவ ஒத்துழைப்பு மற்றும் பகிர்வுகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. இருதரப்பு உறவுகளில் உள்ள சிக்கல்களை அகற்றி மேலும் வாய்ப்புகளை உருவாக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. முப்படைகள் மற்றும் கடலோரக் காவல்படையிடையே, உயர்மட்ட பேச்சுவார்த்தையை நாங்கள் உருவாக்கியுள்ளோம். ஊழியர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. போர் விமானப் பயிற்சியை  விரைவில் தொடங்குவதற்கு இரு விமானப்படைகளும், நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பன்னோக்கு பயிற்சியும் முதன் முறையாக ஜப்பான் கலந்துகொண்டது. 


இந்தியாவுக்கும்-ஜப்பானுக்குமிடையே பாதுகாப்பு தளவாடம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, முக்கிய முன்னுரிமை அம்சமாகும். இந்திய பாதுகாப்பு வழித்தடங்களில் முதலீடு செய்யும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு நாம் ஜப்பான் பாதுகாப்பு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.


இந்தியா- ஜப்பான் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க இரு நாடுகளும் அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்தியுள்ளன. ஜப்பானின் அமைச்சர்களுடன் நடைபெற்ற விவாதங்கள், ஆக்கப்பூர்வமாக அமைந்திருந்தன.பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு நிலை குறித்து ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆய்வு

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு யாசுகசு ஹமடாவுடன் இன்று இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்த பல்வேறு அம்சங்களை இரு அமைச்சர்களும் ஆய்வு செய்தனர். தடையற்ற, வெளிப்படையான, விதிமுறைகள் அடிப்படையிலான இந்தோ-பிசிபிக் பிராந்தியத்தின் முக்கிய பங்கு குறித்தும், இந்திய- ஜப்பான் பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும்,  அவர்கள் ஆய்வு நடத்தியதுடன், இதன் அவசியம் பற்றி வலியுறுத்தினர்.

பேச்சுவார்த்தையின் போது திரு ராஜ்நாத் சிங், இந்தோ- ஜப்பான் இருதரப்பு பாதுகாப்பு  பயிற்சிகளில் அதிகரித்து வரும் சிக்கல்களை, சுட்டிக்காட்டினார். இருநாடுகளுக்குமிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த பயிற்சி அவசியம் என்று  அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு தளவாடம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, துறைகளின் கூட்டாண்மைக்கான வாய்ப்புகளை விரிவாக்க வேண்டியதன் அவசியத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் வலியுறுத்தினார். மத்திய அரசால் பாதுகாப்பு தொழிலின் வளர்ச்சியில் உருவாக்கப்பட்டுள்ள இணக்கமான சூழலை சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவின் பாதுகாப்பு வழித்தடங்களில் ஜப்பான் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

இந்தியா-ஜப்பானுக்கிடையேயான தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு, 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சரின் ஜப்பான் பயணம், முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நேற்றிரவு ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்த திரு ராஜ்நாத் சிங்குக்கு, பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை  அமைச்சர் டாக்டர்  ஜெயசங்கருடன் இரண்டாவது இந்தியா-ஜப்பான் டூ பிளஸ் டூ அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் இன்று பங்கேற்கிறார். ஜப்பான் தரப்பில், பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு யாசுகசு ஹமடா, வெளியுறவுத்துறை அமைச்சர் திரு யோஷிமசா  ஹயாஷி ஆகியோர்  கலந்துகொள்கிறார்கள். டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தை இருதரப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்து செல்வது குறித்து ஆய்வு செய்யும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த