முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டோக்கியோவில் இந்தியா-ஜப்பான் 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

டோக்கியோவில் இந்தியா-ஜப்பான் 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கை



அமைச்சர் ஹயாஷி அவர்களே, அமைச்சர் ஹமாடா அவர்களே, டாக்டர் ஜெயசங்கர் அவர்களே, ஊடகவியலாளர்களே, பெரியோர்களே, தாய்மார்களே,

முதற்கண் அன்பான விருந்தோம்பல் மற்றும் சிறப்பாக கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்த ஜப்பான் அமைச்சர்கள், அவர்களது குழுவினருக்கு எனது நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று எங்களது விவாதத்தின் போது, பரஸ்பர நலன் சார்ந்த இருதரப்பு மற்றும் பிராந்திய விஷயங்கள் குறித்து விரிவாக அலசப்பட்டது.  ஆசியாவின் இரண்டு எழுச்சிமிகு ஜனநாயக நாடுகள் என்ற வகையில், சிறப்பு பாதுகாப்பு மற்றும் உலக ஒத்துழைப்பை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.  இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்தாண்டு இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக உள்ளது. இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த உறவுகள் உள்ளன.

இன்றைய விவாதத்தின் போது, ராணுவ ஒத்துழைப்பு மற்றும் பகிர்வுகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. இருதரப்பு உறவுகளில் உள்ள சிக்கல்களை அகற்றி மேலும் வாய்ப்புகளை உருவாக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. முப்படைகள் மற்றும் கடலோரக் காவல்படையிடையே, உயர்மட்ட பேச்சுவார்த்தையை நாங்கள் உருவாக்கியுள்ளோம். ஊழியர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. போர் விமானப் பயிற்சியை  விரைவில் தொடங்குவதற்கு இரு விமானப்படைகளும், நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பன்னோக்கு பயிற்சியும் முதன் முறையாக ஜப்பான் கலந்துகொண்டது. 


இந்தியாவுக்கும்-ஜப்பானுக்குமிடையே பாதுகாப்பு தளவாடம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, முக்கிய முன்னுரிமை அம்சமாகும். இந்திய பாதுகாப்பு வழித்தடங்களில் முதலீடு செய்யும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு நாம் ஜப்பான் பாதுகாப்பு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.


இந்தியா- ஜப்பான் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க இரு நாடுகளும் அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்தியுள்ளன. ஜப்பானின் அமைச்சர்களுடன் நடைபெற்ற விவாதங்கள், ஆக்கப்பூர்வமாக அமைந்திருந்தன.பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு நிலை குறித்து ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆய்வு

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு யாசுகசு ஹமடாவுடன் இன்று இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்த பல்வேறு அம்சங்களை இரு அமைச்சர்களும் ஆய்வு செய்தனர். தடையற்ற, வெளிப்படையான, விதிமுறைகள் அடிப்படையிலான இந்தோ-பிசிபிக் பிராந்தியத்தின் முக்கிய பங்கு குறித்தும், இந்திய- ஜப்பான் பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும்,  அவர்கள் ஆய்வு நடத்தியதுடன், இதன் அவசியம் பற்றி வலியுறுத்தினர்.

பேச்சுவார்த்தையின் போது திரு ராஜ்நாத் சிங், இந்தோ- ஜப்பான் இருதரப்பு பாதுகாப்பு  பயிற்சிகளில் அதிகரித்து வரும் சிக்கல்களை, சுட்டிக்காட்டினார். இருநாடுகளுக்குமிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த பயிற்சி அவசியம் என்று  அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு தளவாடம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, துறைகளின் கூட்டாண்மைக்கான வாய்ப்புகளை விரிவாக்க வேண்டியதன் அவசியத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் வலியுறுத்தினார். மத்திய அரசால் பாதுகாப்பு தொழிலின் வளர்ச்சியில் உருவாக்கப்பட்டுள்ள இணக்கமான சூழலை சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவின் பாதுகாப்பு வழித்தடங்களில் ஜப்பான் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

இந்தியா-ஜப்பானுக்கிடையேயான தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு, 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சரின் ஜப்பான் பயணம், முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நேற்றிரவு ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்த திரு ராஜ்நாத் சிங்குக்கு, பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை  அமைச்சர் டாக்டர்  ஜெயசங்கருடன் இரண்டாவது இந்தியா-ஜப்பான் டூ பிளஸ் டூ அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் இன்று பங்கேற்கிறார். ஜப்பான் தரப்பில், பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு யாசுகசு ஹமடா, வெளியுறவுத்துறை அமைச்சர் திரு யோஷிமசா  ஹயாஷி ஆகியோர்  கலந்துகொள்கிறார்கள். டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தை இருதரப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்து செல்வது குறித்து ஆய்வு செய்யும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...