முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூபாய். 300 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் பதிவுத்துறை புதிய சட்ட அமலாக்கம் முதல்வர் துவங்கி வைத்தார்

தமிழகத்தின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழகத்தின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூபாய். 300 கோடி மதிப்பீட்டில்



திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் பதிவுத்துறை சார்பில் அதிக ஆவணங்கள் பதிவாகும் நூறு சார்பதிவாளர் அலுவலகங்களில் தட்கல் டோக்கன் வசதி மற்றும் திருமணச் சான்றுகளில் திருத்தம் செய்திட இணையவழியாகவே விண்ணப்பித்து திருத்திய சான்றினைப் பெறும் வசதி ஆகியவற்றையும்  தொடங்கி வைத்தார். பதிவுத்துறை சார்பில் போலி ஆவணத்தை இரத்து செய்யும் பதிவுத்துறை சட்ட விதிகளின் படி அதிகாரம் பதிவுத்துறைக்கு வழங்கப்பட்டதை தொடங்கி வைக்கும் விதமாக,

போலி ஆவணப்பதிவினால் பாதிக்கப்பட்டு மனுவை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அதன் அடிப்படையில் உண்மையான சொத்து உரிமையாளர்கள் ஐந்து நபர்களுக்கு நில அபகரிப்பாளர்களால் மோசடியாக ஆவணப் பதிவு செய்யப்பட்டதை இரத்து செய்து அதற்கு உத்தரவுகளை  வழங்கினார். மோசடி ஆவணப்பதிவு ரத்து செய்யும்  அதிகாரம்' நடைமுறைப்படுத்தப்படுவதை  முதலமைச்சர் இன்று துவக்கி வைத்தார்.  

கடந்த காலங்களில் நில அபகரிப்பாளர்களால் நிகழ்த்தப்பட்ட மோசடி பதிவுகளினால் தங்களது சொத்துக்களை இழந்த உண்மையான நில உரிமையாளர்களுக்கு உரிய விசாரணைக்குப்  பிறகு அவர்களது சொத்துக்கள் மீட்கப்பட்டு  வழங்கப்படும்.



இந்த அதிகாரத்தை வழங்குவதற்காக  இந்திய பதிவுத்துறைச் சட்டம், 1908-ல் உள்ள விதிமுறைகள் 82 மற்றும் 83 ல் உரிய சட்ட திருத்தம் கொண்டுவர  சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மேதகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டு  நடைமுறைக்கு வருகிறது.

இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாய் தமிழ்நாட்டின் பதிவுத்துறை இந்த முன்னெடுப்பைச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இதற்கு சர்குலர் பதிவுத்துறை தலைவர் சார்பில் 67 போடப்பட்டு அதை உயர் நீதிமன்றம் இரத்து செய்த நிலையில் மீண்டும் சர்க்குலர் 68 போடப்பட்டு உரிய நடவடிக்கை இல்லை எனவே தமிழக பதிவுத் துறைக்கு வழங்கப்பட உள்ள இந்த அதிகாரம் அரசு சட்டம் வழி அரசாணை மூலம் மோசடிப் பதிவுகளை முற்றிலும் முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோசடிப் பதிவுகளுக்கு தெரிந்தே துணை போகும் பதிவுத்துறை அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடரவும் இந்த சட்ட திருத்தத்தில் வழிவகை செய்கிறது . மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவு அலுவலருக்கு வழங்கும் நடைமுறையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய பதிவுச்சட்டம், 1908-ல் பதிவு செய்த அலுவலருக்கோ அல்லது வேறு எந்த உயர் அலுவலருக்கோ இதுவரை அதிகாரம் அளிக்கப்படவில்லை. எனவே, அந்த ஆவணப் பதிவுகளை ரத்து செய்திட பாதிக்கப்பட்டோர் நீதிமன்றங்களை அணுகிட வேண்டிய நிலையே இருந்து வந்தது. இந்நிலையில், இது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு முடிவு செய்து, போலி, ஆள்மாறாட்டம் போன்ற காரணங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பதிவுத் துறையே ரத்து செய்ய அதிகாரம் அளிக்க சட்டப்பேரவையில், 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தார். திருத்தப்பட்ட இந்தப் பதிவுச் சட்டத்தில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 22-B ஆனது போலி ஆவணங்கள் மற்றும் சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஆவணங்களின் பதிவினை மறுக்க பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் முழு விவரம்:

ஒருவர் தனது இடம் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நினைத்தால், அது தொடர்பான ஆவணங்களுடன் மாவட்ட பதிவாளர்களிடம் புகார் அளிக்கலாம்.

இந்தப் புகாரின்படி மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை அழைத்து மாவட்டப் பதிவாளர் விசாரணை நடத்துவார்.

விசாரணையில் போலியானது என்று கண்டறியப்பட்டால், அந்த ஆவணப் பதிவை மாவட்டப் பதிவாளர் ரத்து செய்வார்.

இந்த ஆணையின் மீது பதிவுத் துறை தலைவரிடம் ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்யலாம்.

மேலும், முறையாக பரிசீலிக்காமல் போலி ஆவணத்தைப் பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட ஆவணதாரர்கள் மற்றும் பதிவு அலுவலர் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

தமிழகத்தில் மோசடி, போலி பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டம் அமலாகியுள்ள நிலையில், இச்சட்டப்படி, பதிவுச்சட்ட விதிகளில் 22ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்தப் பதிவை பதிவாளர் தானாக முன்வந்தோ, புகார் மீதோ ரத்து செய்யலாம். பதிவுத்துறை தலைவருக்கும் இந்த அதிகாரம் உண்டு. பதிவாளரின் உத்தரவால் பாதிக்கப்பட்டவர்கள், பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் பதிவுத்துறை தலைவரிடம் மேல் முறையீடு செய்யலாம். அவர், பதிவாளரின் ஆணையை உறுதிப்படுத்துதல், திருத்தம் செய்தல் அல்லது ரத்து செய்யும் உத்தரவை வழங்கலாம். அதற்கு மேல், பதிவுத்துறை தலைவரால் உத்தரவு வழங்கப் பட்ட தேதியில் இருந்து 30 நாட் களுக்குள் மாநில அரசிடம் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்த சட்டம் அமலுக்கு வந்த நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பதிவு ரத்து செய்யப்படுவது குறித்து, பதிவுத்துறை தலைவர் அலுவலகத்துக்கு வந்துள்ளன. இவற்றை ஆய்வு செய்து, மோசடி, போலி பத்திரப்பதிவுகள் குறித்த மனுக்களை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.


சட்டத் திருத்த ஆவணத்தைக் காண்க https://tnreginet.gov.in/portal/                ரூபாய்.300 கோடி மதிப்பீட்டில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் பெருந்திட்ட வளாகப் பணிகளைத் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக முதலமைச்சராகத் தொடங்கி வைத்த நிகழ்வில். இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்  சேகர் பாபு, தலைமைச் செயலாளர்  வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்திர மோகன், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், HCL நிறுவனத்தின் உயர் அலுவலர்கள்ஸ்ரீமதி சிவசங்கர். மற்றும் சுந்தர் மகாலிங்கம் தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆகியோரும் உடனிருந்தனர். 

திருச்செந்தூரிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் , அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் பதிவுத்துறை சார்பில் அதிக ஆவணங்கள் பதிவாகும் நூறு சார்பதிவாளர் அலுவலகங்களில் தட்கல் டோக்கன் வசதி மற்றும் திருமணச் சான்றுகளில் திருத்தம் செய்திட இணையவழியாகவே விண்ணப்பித்து திருத்திய சான்றினைப் பெறும் வசதி ஆகியவற்றையும்  தொடங்கி வைத்தார். பதிவுத்துறை சார்பில் போலி ஆவணத்தை இரத்து செய்யும் பதிவுத்துறை சட்ட விதிகளின் படி அதிகாரம் பதிவுத்துறைக்கு வழங்கப்பட்டதை தொடங்கி வைக்கும் விதமாக, போலி ஆவணப்பதிவினால் பாதிக்கப்பட்டு மனுவை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அதன் அடிப்படையில் உண்மையான சொத்து உரிமையாளர்கள் ஐந்து நபர்களுக்கு நில அபகரிப்பாளர்களால் மோசடியாக ஆவணப் பதிவு செய்யப்பட்டதை இரத்து செய்து அதற்கு உத்தரவுகளை  வழங்கினார். மோசடி ஆவணப்பதிவு ரத்து செய்யும்  அதிகாரம்' நடைமுறைப்படுத்தப்படுவதை  முதலமைச்சர் இன்று துவக்கி வைத்தார்.  

கடந்த காலங்களில் நில அபகரிப்பாளர்களால் நிகழ்த்தப்பட்ட மோசடி பதிவுகளினால் தங்களது சொத்துக்களை இழந்த உண்மையான நில உரிமையாளர்களுக்கு உரிய விசாரணைக்குப்  பிறகு அவர்களது சொத்துக்கள் மீட்கப்பட்டு  வழங்கப்படும்.

இந்த அதிகாரத்தை வழங்குவதற்காக  இந்திய பதிவுத்துறைச் சட்டம், 1908-ல் உள்ள விதிமுறைகள் 82 மற்றும் 83 ல் உரிய சட்ட திருத்தம் கொண்டுவர  சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மேதகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டு  நடைமுறைக்கு வருகிறது.

இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாய் தமிழ்நாட்டின் பதிவுத்துறை இந்த முன்னெடுப்பைச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இதற்கு சர்குலர் பதிவுத்துறை தலைவர் சார்பில் 67 போடப்பட்டு அதை உயர் நீதிமன்றம் இரத்து செய்த நிலையில் மீண்டும் சர்க்குலர் 68 போடப்பட்டு உரிய நடவடிக்கை இல்லை எனவே தமிழக பதிவுத் துறைக்கு வழங்கப்பட உள்ள இந்த அதிகாரம் அரசு சட்டம் வழி அரசாணை மூலம் மோசடிப் பதிவுகளை முற்றிலும் முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோசடிப் பதிவுகளுக்கு தெரிந்தே துணை போகும் பதிவுத்துறை அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடரவும் இந்த சட்ட திருத்தத்தில் வழிவகை செய்கிறது . மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவு அலுவலருக்கு வழங்கும் நடைமுறையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய பதிவுச்சட்டம், 1908-ல் பதிவு செய்த அலுவலருக்கோ அல்லது வேறு எந்த உயர் அலுவலருக்கோ இதுவரை அதிகாரம் அளிக்கப்படவில்லை. எனவே, அந்த ஆவணப் பதிவுகளை ரத்து செய்திட பாதிக்கப்பட்டோர் நீதிமன்றங்களை அணுகிட வேண்டிய நிலையே இருந்து வந்தது. இந்நிலையில், இது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு முடிவு செய்து, போலி, ஆள்மாறாட்டம் போன்ற காரணங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பதிவுத் துறையே ரத்து செய்ய அதிகாரம் அளிக்க சட்டப்பேரவையில், 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தார். திருத்தப்பட்ட இந்தப் பதிவுச் சட்டத்தில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 22-B ஆனது போலி ஆவணங்கள் மற்றும் சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஆவணங்களின் பதிவினை மறுக்க பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் முழு விவரம்:

ஒருவர் தனது இடம் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நினைத்தால், அது தொடர்பான ஆவணங்களுடன் மாவட்ட பதிவாளர்களிடம் புகார் அளிக்கலாம்.

இந்தப் புகாரின்படி மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை அழைத்து மாவட்டப் பதிவாளர் விசாரணை நடத்துவார்.

விசாரணையில் போலியானது என்று கண்டறியப்பட்டால், அந்த ஆவணப் பதிவை மாவட்டப் பதிவாளர் ரத்து செய்வார்.

இந்த ஆணையின் மீது பதிவுத் துறை தலைவரிடம் ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்யலாம்.

மேலும், முறையாக பரிசீலிக்காமல் போலி ஆவணத்தைப் பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட ஆவணதாரர்கள் மற்றும் பதிவு அலுவலர் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

தமிழகத்தில் மோசடி, போலி பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டம் அமலாகியுள்ள நிலையில், இச்சட்டப்படி, பதிவுச்சட்ட விதிகளில் 22ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்தப் பதிவை பதிவாளர் தானாக முன்வந்தோ, புகார் மீதோ ரத்து செய்யலாம். பதிவுத்துறை தலைவருக்கும் இந்த அதிகாரம் உண்டு. பதிவாளரின் உத்தரவால் பாதிக்கப்பட்டவர்கள், பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் பதிவுத்துறை தலைவரிடம் மேல் முறையீடு செய்யலாம். அவர், பதிவாளரின் ஆணையை உறுதிப்படுத்துதல், திருத்தம் செய்தல் அல்லது ரத்து செய்யும் உத்தரவை வழங்கலாம். அதற்கு மேல், பதிவுத்துறை தலைவரால் உத்தரவு வழங்கப் பட்ட தேதியில் இருந்து 30 நாட் களுக்குள் மாநில அரசிடம் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்த சட்டம் அமலுக்கு வந்த நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பதிவு ரத்து செய்யப்படுவது குறித்து, பதிவுத்துறை தலைவர் அலுவலகத்துக்கு வந்துள்ளன. இவற்றை ஆய்வு செய்து, மோசடி, போலி பத்திரப்பதிவுகள் குறித்த மனுக்களை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டத் திருத்த ஆவணத்தைக் காண்க https://tnreginet.gov.in/portal/                ரூபாய்.300 கோடி மதிப்பீட்டில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் பெருந்திட்ட வளாகப் பணிகளைத் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக முதலமைச்சராகத் தொடங்கி வைத்த நிகழ்வில். இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்  சேகர் பாபு, தலைமைச் செயலாளர்  வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்திர மோகன், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், HCL நிறுவனத்தின் உயர் அலுவலர்கள்ஸ்ரீமதி சிவசங்கர். மற்றும் சுந்தர் மகாலிங்கம் தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆகியோரும் உடனிருந்தனர். 

திருச்செந்தூரிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் , அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த