நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு..
சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் ஜூலை 22 ஆம் தேதி ஒரு தனியார் யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் , ' நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளதென கருத்துத் தெரிவித்திருந்தார். அவருக்கெதிராக நீதிமன்றம் தானாக முன்வந்து குற்றவியல் வழக்குப் பதிவு செய்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோரடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
ஆகஸ்ட் மாதம் அவர் நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கபட்டதைத் தொடர்ந்து அவர் நேரில் ஆஜரான போது நீதிபதிகள் , 'இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை குறித்து பொது வெளியில் (யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளங்கள்) விவாதிக்க மாட்டேன் என உத்தரவாதமளிக்க வேண்டும் ' எனக் கூறினர். அதை சவுக்கு சங்கர் ஏற்க மறுத்த நிலையில். அவர் கூறுகையில், ' இந்த வழக்கு குறித்து பொது வெளியில் பேசமாட்டேன் என உத்தரவாதம் அளிக்கமுடியாது. என்ற நிலையில்
வழக்கை விசாரிக்கும் இந்த நீதிமன்ற அமர்வு மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த வழக்கு குறித்து பதிலளிக்க கால அவகாசம் வேண்டும்' என சவுக்கு சங்கர் கோரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அப்போது சவுக்கு சங்கர் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கும் அதிகாரம் மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு இல்லையெனக் குறிப்பிட்டார். நீதிதுறையில் இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை. பட்டியல் இனத்தில் நீதிபதிகள் குறைவான எண்ணிக்கையில் தான் இருக்கின்றனர். அருந்ததியினர் இனத்தை சேர்ந்த நீதிபதிகள் ஒருவர் கூட இல்லை.
இந்த நீதிமன்றத் தரவுகள் அடிப்படையில் தான் நான் தகவல்களைக் குறிப்பிட்டேன். நீதிமன்றத்தை அவமதிப்பது எனது நோக்கமல்ல. பேச்சுரிமை அதற்கான உரிமையை வழங்குகிறது என நம்புகிறேன் என தனது தரப்பு வாதத்தைக் குறிப்பிட்டார். பிறகு, நீதிபதிகள் அவர் தரப்பு வாதத்தை ஆராய்ந்தனர்.
அதுவரையில் அவர் நீதிமன்ற வளாகத்தில் இருந்தார். பின்னர், நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். மேலும், சவுக்கு சங்கர் தவறாக பதிவிட்ட கருத்துக்களை நீக்குவதற்கும் உத்தரவுகளை பிறப்பித்தனர்.
கருத்துகள்