கனியாமூர் பள்ளி மாணவி மர்மமாக மரணத்தில் பள்ளி நிர்வாகிகளின் ஜாமினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என சட்டம் மற்றும் நீதித்துறை துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தகவல்
புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றதில் கலந்துகொண்டு சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி
புதிய கட்டிடம் கட்டுமானப் பணிகளைத் துவங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது கூறியது:- "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு தொடர்பாக விசாரிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையம் வழங்கிய அறிக்கையை விரைவில் சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும். தமிழக அரசு விழிப்போடு இருப்பதால் தான் தமிழகத்தில் எங்கெல்லாம் கஞ்சா புழக்கத்தில் இருந்ததோ அவற்றைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தமிழகத்தில் மிகுந்த அச்சுறுத்தலோடு பணியாற்றிக்கொண்டு இருப்பவர்கள் சிறைத் துறையில் இருக்கக்கூடிய காவலர்கள் தான். இது வெளியுலகுக்குத் தெரியாது. ஏனெனில், பல வழக்குகளில் குற்றவாளிகள் என்று குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள்தான் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அவர்கள் குற்றம் புரிவதற்கு தயங்குவது கிடையாது. அவர்களோடு இருக்கக்கூடிய சூழ்நிலையில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிக்கொண்டு இருப்பவர்கள் சிறையில் பணியாற்றுபவர்கள். அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு கொடுப்பதற்கும், அவர்களது குடும்பத்தைக் காப்பதற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
சிறைப் பணியாளர்களிடம் பயங்கரமான செயல்களில் ஈடுபடக்கூடிய கைதிகளைக் கண்காணித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு விவகாரத்தில் மேல்முறையீடு குறித்து அரசு வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார். கள்ளக்குறிச்சி சக்தி இண்டர்நேஷனல் உண்டு உறைவிடப்பள்ளித் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, 🏫 தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய ஐந்து நபர்களையும் சின்னசேலம் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாணை நீதிமன்றத்தில் தள்ளுபடியான நிலையில் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த. மனுவை விசாரித்த நீதிமன்றம், பள்ளித் தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி உத்தரவிட்டதன்படி, பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரையில் தங்கியிருக்க வேண்டும் என்றும் ஆசிரியைகள் இரண்டு பேரும் சேலத்தில் தங்கியிருக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதித்தது. அதில் ஆசிரியைகள் இருவரும் சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்திலும், பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட மூவரும் மதுரை மாவட்டம் தல்லாகுளம் காவல் நிலையத்திலும் கையெழுத்திட வேண்டுமென்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இறந்த மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படுமென சட்டம் மற்றும் நீதித்துறை துறை அமைச்சர் எஸ். ரகுபதி கூறியுள்ளதது
பாதிக்கப்பட்ட மாணவி குடும்பத்திற்கு ஆறுதலாக அமைகிறது. புதுக்கோட்டையில் அவர் கூறும்போது, சட்ட ஆலோசனைகளுக்கு பிறகு கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என சட்டம் மற்றும் நீதித்துறை துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.
கருத்துகள்