முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லம் வீட்டை விற்பனை செய்யும் திட்டம் உண்மையா
முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லம் வீட்டை விற்பனை செய்ய இரண்டாம் தரப்பு வாரிசு ஜெ. தீபாவும், ஜெ.தீபக்கும் முடிவு செய்ததாக சில நாட்களுக்கு முன் தகவல்கள் வெளியானதை தீபா, தீபக் இருவரும் மறுத்தனர். ஆனால் உண்மையில் வீட்டை விற்பனை செய்வதற்கு ஓசை இல்லாமல் முயற்சிகள் நடக்கிற தகவல் வருகிறது.
தமிழகத்திலுள்ள கோடீசுவரர்கள் சிலர் அந்த வீட்டை வாங்க முதலில் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் அரசியல் சர்ச்சை, சட்டச் சிக்கல் போன்றவற்றுக்கு பயந்து இப்போது விலகி விட்டனர். இதனால் ஜெ.ஜெயலலிதா வீட்டை வாங்க வி.கே.சசிகலா நடராஜன் தரப்பில் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வருகிறது.
டிரஸ்ட் ஒன்றின் வழியாக ஜெயலலிதா வீட்டை வாங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். அந்த டிரஸ்ட்டில் சசிகலா, தீபா, தீபக் ஆகியோர் முக்கிய பொறுப்பில் இருப்பார்களாம். இந்த திட்டம் வெற்றி பெற்று நிறைவேறினால், சசிகலா நடராஜன் மீண்டும் போயஸ் கார்டன் வீட்டில் குடியேறுவார் என்கின்றனர்
அரசியல் பார்வையாளர்கள்.முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லம் வீட்டை விற்பனை செய்யும் திட்டம் உண்மையா என்பது விரைவில் தெரியவரும்
கருத்துகள்