முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவருக்கும் புகழாரம்

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு குடியரசுத் தலைவர் மரியாதை செலுத்தினார்

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 5, 2022) குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவருக்கு மரியாதை செலுத்தினார். டாக்டர் ராதாகிருஷ்ணனின் திருவுருவப்படத்திற்கு குடியரசுத் தலைவரும், மாளிகையின் அதிகாரிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.ஆசிரியர்கள் தினத்திற்கு குறிப்பாக கடினமாக உழைக்கின்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவருக்கும் புகழாரம் சூட்டியுள்ளார்

ஆசிரியர்கள் தினத்திற்கு குறிப்பாக, இளைஞர் மனங்களில் கல்வியின் சுகங்களை பரப்புகின்ற கடினமாக உழைக்கின்ற  ஆசிரியர்கள் அனைவருக்கும் பிரதமர்  திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர்  டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவருக்கும் திரு மோடி  புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் கூறியிருப்பதாவது:

 “ஆசிரியர்கள் தினத்திற்கு #TeachersDay குறிப்பாக, இளைஞர் மனங்களில் கல்வியின் சுகங்களை பரப்புகின்ற கடினமாக உழைக்கின்ற  ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  நமது முன்னாள் குடியரசுத் தலைவர்  டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவருக்கும் நான் புகழாரம் சூட்டுகிறேன்.”ஆசிரியர் தினத்தன்று தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் உரையாடினார்

கல்வித்துறையில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆற்றிய பணிகள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது

ஆசிரியராக இருந்த தற்போதைய இந்திய குடியரசுத்தலைவர் மூலம் பாராட்டப்படுவது மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது

ஆசிரியரின் பங்கு என்பது மனிதர்களின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தி அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில், கற்பிப்பதாகும்

மாணவர்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு அரசு உருவாக்கியுள்ள தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்

2047-ஆம் ஆண்டுக்கான கனவை காணாமல் நாட்டில் உள்ள எந்தவொரு மாணவரும் இருந்துவிடக் கூடாது

தண்டி யாத்திரை – வெள்ளையனே வெள்ளையேறு இயக்கம் நடைபெற்ற காலத்தில் நாட்டில் இருந்த உத்வேகத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்

ஆசிரியர் தினத்தையொட்டி புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்.

இந்நிகழ்ச்சியின் போது, சர்வபள்ளி் ராதாகிருஷ்ணணுக்கு, பிரதமர் மரியாதை செலுத்தினார். ஆசிரியராக இருந்த தற்போதைய இந்திய குடியரசுத்தலைவர் மூலம் பாராட்டப்படுவது மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் ஒடிசாவில் தொலைதூர இடங்களில் ஆசிரியர் பணியை மேற்கொண்டார் என்றும் நினைவூட்டினார். நாடு இன்று அமிர்தப் பெருவிழாவின் கனவுகளை நிறைவேற்ற தொடங்கியுள்ள நிலையில், கல்வித்துறையில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆற்றிய பணிகள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக கூறினார். தேசிய விருது பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ஆசிரியர்களின் அரப்பணிப்புக் குறித்து எடுத்துரைத்த பிரதமர், நேர்மறை சிந்தனையுடன் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு அவர்களுடன் உழைக்க வேண்டும் என்று கூறினார். ஆசிரியரின் பங்கு என்பது மனிதர்களின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தி அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் கற்பிப்பதாகும்.

2047-ஆம் ஆண்டு இந்தியாவின் நிலை குறித்து குறிப்பிட்ட பிரதமர், இது மாணவர்களைச் சார்ந்தது என்றும், அவர்களுடைய எதிர்காலம் இன்றைய ஆசிரியர்கள் மூலம், உருவாக்கப்படுவதாகவும், பிரதமர் தெரிவித்தார். எனவே, மாணவர்களின் வாழ்க்கையை சிறப்படையச் செய்ய நீங்கள் உதவுவதாகவும், அத்துடன் நாட்டிற்கு பங்களிப்பதாகவும் அவர் கூறினார்.  மாணவர்களின் கனவுகளுடன் ஆசிரியர் ஒன்றிணையும் போது அவர் வெற்றி பெறுவதாகவும் தெரிவித்தார்.



பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களிடையே  மோதலையும் முரண்பாடுகளையும் களைவது முக்கியம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். பள்ளி, சமூகம் மற்றும் வீடுகளில் மாணவர்கள் மோதலை கடைப்பிடிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்களும் மாணவர்களின்  குடும்பத்தினரும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொள்வதன் அவசியம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.  மாணவர்களுடன் விருப்பு வெறுப்புகளை  கடைப்பிடிக்காமல் அனைத்து மாணவர்களையும், சமமாக நடத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.

புதிய கல்விக் கொள்கை குறித்து கிடைத்துள்ள வரவேற்பை சுட்டிக்காட்டிய பிரதமர், அது சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார். தேசியக் கல்விக் கொள்கையை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை படிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், மகாத்மா காந்தி பகவத் கீதையை பலமுறை படித்து, ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அர்த்தத்தைக் கண்டறிந்ததாகக் கூறினார். மாணவர்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு அரசு உருவாக்கியுள்ள தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இக்கொள்கையை உருவாக்கியதில் ஆசிரியர்கள் பெரும் பங்கு வகித்ததாக அவர் கூறினார். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பொறுப்புள்ளதாகவும் தெரிவித்தார். 

தமது சுதந்திர தின உரையின்போது குறிப்பிட்ட ஐந்து தீர்மானங்கள் குறித்து நினைவு கூர்ந்த பிரதமர், இவற்றை பள்ளிகளில் வழக்கமாக விவாதிக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சிக்காக இந்த தீர்மானங்கள் பாராட்டப்படுவதாகக் கூறிய அவர், குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் அவற்றை கற்பிப்பதற்கான வழிவகைகளை காணுவது அவசியம் என்று தெரிவித்தார். 2047-ஆம் ஆண்டுக்கான கனவை காணாமல் நாட்டில் உள்ள எந்தவொரு மாணவரும் இருந்துவிடக் கூடாது என்று பிரதமர் கூறினார். தண்டி யாத்திரை – வெள்ளையனே வெள்ளையேறு இயக்கம் நடைபெற்ற காலத்தில் நாட்டில் இருந்த உத்வேகத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.



உலகில் பொருளாதார வளர்ச்சியில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ள இந்தியாவின் சாதனை குறித்து பிரதமர் குறிப்பிட்டார். சுமார் 250 வருடங்களுக்கு மேலாக  இந்தியாவை ஆட்சி  செய்த அவர்களைவிட பொருளாதாரத்தில் ஆறாம் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். இல்லம் தோறும் மூவண்ணக் கொடி இயக்கம் மூலம் உலகில் இன்று இந்தியா புதிய  உச்சத்தை எட்டியுள்ளதாகவும், இந்த உத்வேகம் இன்று தேவை என்றும் அவர் கூறினார். சுதந்திரத்திற்காக பிரிட்டிஷ்கார்களுடன் ஒவ்வொரு இந்தியரும், 1930ஆம் ஆண்டு முதல் 1942-ம் ஆண்டு வரை கடைபிடித்த அதே உத்வேகத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.  நான் எனது நாட்டை பின்தங்கியிருக்கச் செய்ய மாட்டேன் என்றும் குறிப்பிட்டார்.  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து அடிமைத் தனத்தை நாம் ஒழித்துக் கட்டியுள்ளோம் என்றும் தற்போது இதை நாம் நிறுத்தவிடக் கூடாது என்றும் கூறிய பிரதமர், நாம் முன்னோக்கி மட்டுமே செல்ல வேண்டும் என்றும் கூறினார்.

பிரதமர் தனது உரையை நிறைவு செய்யும் போது, ​​இந்தியாவின் திறன் பன்மடங்கு வளர, எதிர்கால இந்தியாவிற்காக  இதே போன்ற உணர்வை ஒருங்கிணைக்குமாறு  ஆசிரியர்களை வலியுறுத்தினார்.ஆசிரியர் தினத்தன்று தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் உரையாடினார்

கல்வித்துறையில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆற்றிய பணிகள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது

ஆசிரியராக இருந்த தற்போதைய இந்திய குடியரசுத்தலைவர் மூலம் பாராட்டப்படுவது மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது

ஆசிரியரின் பங்கு என்பது மனிதர்களின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தி அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில், கற்பிப்பதாகும்

மாணவர்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு அரசு உருவாக்கியுள்ள தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்

2047-ஆம் ஆண்டுக்கான கனவை காணாமல் நாட்டில் உள்ள எந்தவொரு மாணவரும் இருந்துவிடக் கூடாது

தண்டி யாத்திரை – வெள்ளையனே வெள்ளையேறு இயக்கம் நடைபெற்ற காலத்தில் நாட்டில் இருந்த உத்வேகத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்


இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.2022 ல் இந்தியாவில் 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்குவதில் 

தமிழ்நாட்டிலிருந்து இராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தினத்தில் ஒட்டி டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி பாராட்டுச் சான்றிதழ், வெள்ளிப்பதக்கம், ரூபாய். 50,000-க்கான காசோலை ஆகியவை விருதில் அடங்கும்   தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற இராமச்சந்திரனுக்கு மனைவி நாகலட்சுமி , மகன் திரவியம் ராஜ் உள்ளனர். அவரது மகன் அவரது சொந்த ஊரான செம்பொன்குடி அரசு பள்ளியில் 2-ஆம் வகுப்பில் படிக்கிறார்.

இராமசந்திரன் தொடக்கக் கல்வியை செம்பொன்குடி தொடக்கப் பள்ளியிலும் பிறகு 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பை திருவரங்கத்திலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியிலும் படித்தார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் படிப்பதற்கு முயன்ற நிலையில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. குடும்ப வறுமை காரணமாக மதுரையில் டீக்கடையில் வேலை பார்த்தார்.

பின்னர் 2000 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை மஞ்சூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சியை முடித்தார். பின்பு பணி கிடைக்காததால் மூன்று ஆண்டுகள் திருப்பூரில் வேலை செய்த பின்னர் 2005-ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகிலுள்ள எம்.வி பட்டினத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் பணியிலிருந்து கொண்டே பிஎஸ்சி கணிதம், பி.எட், எம் எஸ் சி கணிதம் முடித்தார்.

2006 ஆம் ஆண்டு போகலூர் ஒன்றியம் செவ்வூர் அரசு தொடக்கப் பள்ளிக்கு பணி மாறுதல் பெற்றார். பின்னர் 2008 ஆம் ஆண்டில் போகலூர் ஒன்றியம் கீழாம்பல் அரசு தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டு தற்போது வரை அப்பள்ளியில் பணியாற்றுகிறார்.

பல்வேறு அமைப்புகள் ஆசிரியர் இராமசந்திரன் சேவையைப் பாராட்டி விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கிய நிலையில் மேலும், 2018 ஆம் ஆண்டு  மாவட்ட அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருதை இவர் இன்று  பெற்றுள்ளார். மாணவர்கள் இவரை உறவு முறை கொண்டு அழைக்கும் நிலையில் இவர் ஒரு வித்தியாசமான உபாத்யாயர் விருதுக்குத் தகுதியானவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...