முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவருக்கும் புகழாரம்

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு குடியரசுத் தலைவர் மரியாதை செலுத்தினார்

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 5, 2022) குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவருக்கு மரியாதை செலுத்தினார். டாக்டர் ராதாகிருஷ்ணனின் திருவுருவப்படத்திற்கு குடியரசுத் தலைவரும், மாளிகையின் அதிகாரிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.ஆசிரியர்கள் தினத்திற்கு குறிப்பாக கடினமாக உழைக்கின்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவருக்கும் புகழாரம் சூட்டியுள்ளார்

ஆசிரியர்கள் தினத்திற்கு குறிப்பாக, இளைஞர் மனங்களில் கல்வியின் சுகங்களை பரப்புகின்ற கடினமாக உழைக்கின்ற  ஆசிரியர்கள் அனைவருக்கும் பிரதமர்  திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர்  டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவருக்கும் திரு மோடி  புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் கூறியிருப்பதாவது:

 “ஆசிரியர்கள் தினத்திற்கு #TeachersDay குறிப்பாக, இளைஞர் மனங்களில் கல்வியின் சுகங்களை பரப்புகின்ற கடினமாக உழைக்கின்ற  ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  நமது முன்னாள் குடியரசுத் தலைவர்  டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவருக்கும் நான் புகழாரம் சூட்டுகிறேன்.”ஆசிரியர் தினத்தன்று தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் உரையாடினார்

கல்வித்துறையில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆற்றிய பணிகள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது

ஆசிரியராக இருந்த தற்போதைய இந்திய குடியரசுத்தலைவர் மூலம் பாராட்டப்படுவது மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது

ஆசிரியரின் பங்கு என்பது மனிதர்களின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தி அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில், கற்பிப்பதாகும்

மாணவர்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு அரசு உருவாக்கியுள்ள தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்

2047-ஆம் ஆண்டுக்கான கனவை காணாமல் நாட்டில் உள்ள எந்தவொரு மாணவரும் இருந்துவிடக் கூடாது

தண்டி யாத்திரை – வெள்ளையனே வெள்ளையேறு இயக்கம் நடைபெற்ற காலத்தில் நாட்டில் இருந்த உத்வேகத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்

ஆசிரியர் தினத்தையொட்டி புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்.

இந்நிகழ்ச்சியின் போது, சர்வபள்ளி் ராதாகிருஷ்ணணுக்கு, பிரதமர் மரியாதை செலுத்தினார். ஆசிரியராக இருந்த தற்போதைய இந்திய குடியரசுத்தலைவர் மூலம் பாராட்டப்படுவது மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் ஒடிசாவில் தொலைதூர இடங்களில் ஆசிரியர் பணியை மேற்கொண்டார் என்றும் நினைவூட்டினார். நாடு இன்று அமிர்தப் பெருவிழாவின் கனவுகளை நிறைவேற்ற தொடங்கியுள்ள நிலையில், கல்வித்துறையில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆற்றிய பணிகள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக கூறினார். தேசிய விருது பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ஆசிரியர்களின் அரப்பணிப்புக் குறித்து எடுத்துரைத்த பிரதமர், நேர்மறை சிந்தனையுடன் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு அவர்களுடன் உழைக்க வேண்டும் என்று கூறினார். ஆசிரியரின் பங்கு என்பது மனிதர்களின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தி அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் கற்பிப்பதாகும்.

2047-ஆம் ஆண்டு இந்தியாவின் நிலை குறித்து குறிப்பிட்ட பிரதமர், இது மாணவர்களைச் சார்ந்தது என்றும், அவர்களுடைய எதிர்காலம் இன்றைய ஆசிரியர்கள் மூலம், உருவாக்கப்படுவதாகவும், பிரதமர் தெரிவித்தார். எனவே, மாணவர்களின் வாழ்க்கையை சிறப்படையச் செய்ய நீங்கள் உதவுவதாகவும், அத்துடன் நாட்டிற்கு பங்களிப்பதாகவும் அவர் கூறினார்.  மாணவர்களின் கனவுகளுடன் ஆசிரியர் ஒன்றிணையும் போது அவர் வெற்றி பெறுவதாகவும் தெரிவித்தார்.



பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களிடையே  மோதலையும் முரண்பாடுகளையும் களைவது முக்கியம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். பள்ளி, சமூகம் மற்றும் வீடுகளில் மாணவர்கள் மோதலை கடைப்பிடிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்களும் மாணவர்களின்  குடும்பத்தினரும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொள்வதன் அவசியம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.  மாணவர்களுடன் விருப்பு வெறுப்புகளை  கடைப்பிடிக்காமல் அனைத்து மாணவர்களையும், சமமாக நடத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.

புதிய கல்விக் கொள்கை குறித்து கிடைத்துள்ள வரவேற்பை சுட்டிக்காட்டிய பிரதமர், அது சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார். தேசியக் கல்விக் கொள்கையை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை படிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், மகாத்மா காந்தி பகவத் கீதையை பலமுறை படித்து, ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அர்த்தத்தைக் கண்டறிந்ததாகக் கூறினார். மாணவர்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு அரசு உருவாக்கியுள்ள தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இக்கொள்கையை உருவாக்கியதில் ஆசிரியர்கள் பெரும் பங்கு வகித்ததாக அவர் கூறினார். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பொறுப்புள்ளதாகவும் தெரிவித்தார். 

தமது சுதந்திர தின உரையின்போது குறிப்பிட்ட ஐந்து தீர்மானங்கள் குறித்து நினைவு கூர்ந்த பிரதமர், இவற்றை பள்ளிகளில் வழக்கமாக விவாதிக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சிக்காக இந்த தீர்மானங்கள் பாராட்டப்படுவதாகக் கூறிய அவர், குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் அவற்றை கற்பிப்பதற்கான வழிவகைகளை காணுவது அவசியம் என்று தெரிவித்தார். 2047-ஆம் ஆண்டுக்கான கனவை காணாமல் நாட்டில் உள்ள எந்தவொரு மாணவரும் இருந்துவிடக் கூடாது என்று பிரதமர் கூறினார். தண்டி யாத்திரை – வெள்ளையனே வெள்ளையேறு இயக்கம் நடைபெற்ற காலத்தில் நாட்டில் இருந்த உத்வேகத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.



உலகில் பொருளாதார வளர்ச்சியில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ள இந்தியாவின் சாதனை குறித்து பிரதமர் குறிப்பிட்டார். சுமார் 250 வருடங்களுக்கு மேலாக  இந்தியாவை ஆட்சி  செய்த அவர்களைவிட பொருளாதாரத்தில் ஆறாம் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். இல்லம் தோறும் மூவண்ணக் கொடி இயக்கம் மூலம் உலகில் இன்று இந்தியா புதிய  உச்சத்தை எட்டியுள்ளதாகவும், இந்த உத்வேகம் இன்று தேவை என்றும் அவர் கூறினார். சுதந்திரத்திற்காக பிரிட்டிஷ்கார்களுடன் ஒவ்வொரு இந்தியரும், 1930ஆம் ஆண்டு முதல் 1942-ம் ஆண்டு வரை கடைபிடித்த அதே உத்வேகத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.  நான் எனது நாட்டை பின்தங்கியிருக்கச் செய்ய மாட்டேன் என்றும் குறிப்பிட்டார்.  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து அடிமைத் தனத்தை நாம் ஒழித்துக் கட்டியுள்ளோம் என்றும் தற்போது இதை நாம் நிறுத்தவிடக் கூடாது என்றும் கூறிய பிரதமர், நாம் முன்னோக்கி மட்டுமே செல்ல வேண்டும் என்றும் கூறினார்.

பிரதமர் தனது உரையை நிறைவு செய்யும் போது, ​​இந்தியாவின் திறன் பன்மடங்கு வளர, எதிர்கால இந்தியாவிற்காக  இதே போன்ற உணர்வை ஒருங்கிணைக்குமாறு  ஆசிரியர்களை வலியுறுத்தினார்.ஆசிரியர் தினத்தன்று தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் உரையாடினார்

கல்வித்துறையில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆற்றிய பணிகள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது

ஆசிரியராக இருந்த தற்போதைய இந்திய குடியரசுத்தலைவர் மூலம் பாராட்டப்படுவது மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது

ஆசிரியரின் பங்கு என்பது மனிதர்களின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தி அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில், கற்பிப்பதாகும்

மாணவர்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு அரசு உருவாக்கியுள்ள தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்

2047-ஆம் ஆண்டுக்கான கனவை காணாமல் நாட்டில் உள்ள எந்தவொரு மாணவரும் இருந்துவிடக் கூடாது

தண்டி யாத்திரை – வெள்ளையனே வெள்ளையேறு இயக்கம் நடைபெற்ற காலத்தில் நாட்டில் இருந்த உத்வேகத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்


இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.2022 ல் இந்தியாவில் 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்குவதில் 

தமிழ்நாட்டிலிருந்து இராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தினத்தில் ஒட்டி டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி பாராட்டுச் சான்றிதழ், வெள்ளிப்பதக்கம், ரூபாய். 50,000-க்கான காசோலை ஆகியவை விருதில் அடங்கும்   தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற இராமச்சந்திரனுக்கு மனைவி நாகலட்சுமி , மகன் திரவியம் ராஜ் உள்ளனர். அவரது மகன் அவரது சொந்த ஊரான செம்பொன்குடி அரசு பள்ளியில் 2-ஆம் வகுப்பில் படிக்கிறார்.

இராமசந்திரன் தொடக்கக் கல்வியை செம்பொன்குடி தொடக்கப் பள்ளியிலும் பிறகு 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பை திருவரங்கத்திலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியிலும் படித்தார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் படிப்பதற்கு முயன்ற நிலையில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. குடும்ப வறுமை காரணமாக மதுரையில் டீக்கடையில் வேலை பார்த்தார்.

பின்னர் 2000 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை மஞ்சூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சியை முடித்தார். பின்பு பணி கிடைக்காததால் மூன்று ஆண்டுகள் திருப்பூரில் வேலை செய்த பின்னர் 2005-ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகிலுள்ள எம்.வி பட்டினத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் பணியிலிருந்து கொண்டே பிஎஸ்சி கணிதம், பி.எட், எம் எஸ் சி கணிதம் முடித்தார்.

2006 ஆம் ஆண்டு போகலூர் ஒன்றியம் செவ்வூர் அரசு தொடக்கப் பள்ளிக்கு பணி மாறுதல் பெற்றார். பின்னர் 2008 ஆம் ஆண்டில் போகலூர் ஒன்றியம் கீழாம்பல் அரசு தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டு தற்போது வரை அப்பள்ளியில் பணியாற்றுகிறார்.

பல்வேறு அமைப்புகள் ஆசிரியர் இராமசந்திரன் சேவையைப் பாராட்டி விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கிய நிலையில் மேலும், 2018 ஆம் ஆண்டு  மாவட்ட அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருதை இவர் இன்று  பெற்றுள்ளார். மாணவர்கள் இவரை உறவு முறை கொண்டு அழைக்கும் நிலையில் இவர் ஒரு வித்தியாசமான உபாத்யாயர் விருதுக்குத் தகுதியானவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்