திருவாரூர் - காரைக்குடி - சென்னை இடையே கம்பன் விரைவு ரயில் இயக்க (16175/16176) நடவடிக்கை எடுப்பதாக தென்னக இரயில்வே பொது மேலாளர் தகவல்.
நீண்ட காலமாக காரைக்குடி - திருவாரூர் இடையே 73 ரயில்வே கிராசிங்குகளில் கேட் கீப்பர்கள் இல்லை என்பதால். அற்போது ஒவ்வொரு கிராசிங்கிலும் இரயில் வந்ததும் முதல் பெட்டியிலிருக்கும் ஊழியர் கீழே இறங்கி ரயில்வே கேட்டை அடைப்பார். பின்னர் கிராசிங்கை ரயில் கடந்ததும் கடைசி பெட்டியில் இருக்கும் ஊழியர் கீழே இறங்கி கேட்டை திறந்துவிடுகிறார். அதன் பின் ரயில் புறப்பட்டுச் செல்லும் நிலை. இருந்து வந்தது திருவாரூரிலிருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 2.15 மணிக்கு காரைக்குடியை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் காரைக்குடியிலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு திருவாரூரை சென்றடைகிறது.இந்த முறையால் கால விரயம் ஏற்படுகிறது. 146 கி.மீ. தூரத்தை கடந்து செல்ல 6 மணி நேரமானது. காரைக்குடி - திருவாரூர் இடையே 73 ரயில்வே கிராசிங்குகளிலும் கேட் கீப்பர்களை நியமிக்க ரயில்வே நிர்வாகம் முன்னாள் படைவீரர்களை தேர்வு செய்துள்ளதனால் பயண நேரத்தில் 2 மணி நேரம் குறையும் வாய்ப்பு தற்போது உண்டு
காரைக்குடி - திருவாரூர் இடையே அகல ரயில் பாதையாக மாற்றும் பணி நீண்டகாலம் நடந்ததால், அவ்வழித்தடத்தில் 7 ஆண்டுகளாக இரயில்கள் இயக்கப்படாமலிருந்தன. பல்வேறு போராட்டங்களுக்குப் பின்பு 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் ரயில் இயக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று பரவிய ஊரடங்கால் இந்த ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் கடந்த ஆகஸ்ட் மாதம்.4-ஆம் தேதியிலிருந்து ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் மாங்குடி மாவூர் ரோடு, மணலி, திருத்துறைப்பூண்டி, அதிராமபட்டினம், பட்டுக் கோட்டை, பேராவூரணி, பெரியக்கோட்டை, கண்டனூர், புதுவயல் உட்பட 20 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
இந்நிலையில் 73 ரயில்வே கிராசிங்குகளிலும் கேட் கீப்பர் களை நியமிக்க முன்னாள் படைவீரர் களை ரயில்வே நிர்வாகம் தேர்வு செய்து நியமனம் செய்யப்பட்டு கேட் கீப்பர்களாக பணி புரியத் தொடங்கியதும் இந்த வழித்தடத்தில் ரயில் பயண நேரம் 2 மணி நேரம் வரை குறைகிறது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். இச் சூழ்நிலையில் இந்த மார்க்கத்தில் ஏற்கனவே சென்னை முதல் காரைக்குடி வரை சென்று வந்த கம்பன் விரைவு வண்டியை மீண்டும் இயக்க விரைவில் ஏற்பாடுகள் துவங்கியுள்ளதாக தென்னக இரயில்வே பொது மேலாளர் மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனால் இனி திருவாரூர் - காரைக்குடி - சென்னை கம்பன் விரைவு ரயில் இயக்கம் (16175/16176) துவங்கும்.
கருத்துகள்