கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான எஸ்.பி.வேலுமணி கிராமப்புற
தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மேற்கொண்ட பணிகளுக்கான ஒப்பந்தங்களில் மிகப் பெரிய முறைகேடு செய்து தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிமுறைகளுக்கு விரோதமாக ஒப்பந்தப்பணி வழங்கியதில் அரசுக்கு ரூபாய்.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக நடத்திய முதற்கட்ட விசாரணையின் படி
வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதனடிப்படையில் சோதனை நடத்தப்படுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அறிக்கையில் கூறப்பட்டது. எஸ்.பி. வேலுமணியின் வீடும் அவருக்குத் தொடர்புடைய இடங்களிலும் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர்
சென்னையில் 10 இடங்களிலும் கோயம்புத்தூரில் 9 இடங்களிலும் திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய நகரங்களில் 7 இடங்களிலும் என சுமார் 45 இடங்களில் நடைபெற்றது. சுமார் 8 மணி நேரம் நடந்த இந்தச் சோதனை போல
.2020 ஆம் ஆண்டில், சுகாதாரத்துறை அமைச்சரான டாக்டர் விஜயபாஸ்கர், வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடங்குவதற்கு அத்தியாவசிய சான்றினை முறைகேடாக வழங்கியது தொடர்பாகவும், ஐசரி கணேஷ் மீதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, வழக்குப்பதிவு செய்தது. சம்பந்தமாக சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளுர் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் தலா 1 இடத்திலுமென மொத்தம் 13 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சோதனையில் மொத்தம் 16.37 லட்சம் ரூபாய் ரொக்கமும், 1,872 கிராம் தங்க நகைகளும், 8.28 கிலோ கிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டன. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 120 ஆவணங்கள், 1 ஹார்ட் டிரைவ், 1 பென்டிரைவ், 2 ஐ போன்கள் மற்றும் 4 வங்கி லாக்கர் சாவிகள் இவ்வழக்கின் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டன.
கருத்துகள்