முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குனோ தேசிய பூங்காவில் இரண்டு இடங்களில் பிரதமர் சிறுத்தைகளை விடுவித்தார்

குனோ தேசிய பூங்காவில் இந்தியாவிலிருந்து அழிந்துபோன இன சிறுத்தைகளை பிரதமர் விடுவித்தார்

இந்தியாவிலிருந்து அழிந்துபோன இன சிறுத்தைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி மத்தியப்பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் இன்று விடுவித்தார். கண்டங்களுக்கு இடையேயான  மாமிச உண்ணிகளை இடமாற்றம் செய்யும் உலகின் முதல் திட்டத்தின் கீழ், நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பூங்காவில் விடுவிக்கப்பட்டுள்ள  எட்டு சிறுத்தைகளில் ஐந்து பெண்,  மூன்று ஆண் சிறுத்தைகள்.

குனோ தேசிய பூங்காவில் இரண்டு இடங்களில் பிரதமர் சிறுத்தைகளை விடுவித்தார். சிறுத்தை ஆர்வலர்கள், சிறுத்தை  மறுவாழ்வு மேலாண்மை குழு மற்றும் மாணவர்களுடன்  பிரதமர் கலந்துரையாடினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

குனோ தேசியப் பூங்காவில் பிரதமர் சிறுத்தைகளை விடுவித்திருப்பது, இந்தியாவின் வனவிலங்குகளுக்கும் அதன் வாழ்விடத்துக்கும் புத்துயிர் அளிப்பது மற்றும் பல்வகைப்படுத்துவதற்கான அவரது முயற்சிகளின் ஒரு பகுதியாகும். 1952 இல் இந்தியாவில் இருந்து சிறுத்தை இனம் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. விடுவிக்கப்படும் சிறுத்தைகள் நமீபியாவைச் சேர்ந்தவையாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இவை கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியாவில் சிறுத்தை  அறிமுகமானது, கண்டங்களுக்கு இடையேயான உலகின் முதல் பெரிய மாமிச உண்ணிகள்  இடமாற்றத் திட்டத்தின் கீழ், இது செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் திறந்த காடுகள் மற்றும் புல்வெளி சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்க சிறுத்தைகள் அறிமுகம் பெரிதும் உதவும். இது பல்லுயிரியலைப் பாதுகாக்கவும், நீர் பாதுகாப்பு, கார்பன் சுரப்பு மற்றும் மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாத்தல் போன்ற சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை மேம்படுத்தவும், சமூகத்திற்கு பெருமளவில் பயனளிக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்புக்கான பிரதமரின் உறுதிப்பாட்டிற்கு இணங்க இந்த முயற்சி, சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா நடவடிக்கைகள் மூலம் உள்ளூர் சமூகத்திற்கு மேம்பட்ட வாழ்வாதார வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.

இந்தியாவில் சிறுத்தைகளின் வரலாற்று மறு அறிமுகம், கடந்த எட்டு ஆண்டுகளில் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நீண்ட தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும், இதன் விளைவாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.  2014ல் நாட்டின் புவியியல் பரப்பில் 4.90% ஆக இருந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் பரப்பு தற்போது 5.03% ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் 2014-ல், பாதுகாக்கப்பட்ட பரப்பு 1,61,081.62 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட  740  இடங்களாக இருந்தது. தற்போது இது  1,71,921 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 981 இடங்களாக அதிகரித்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவு 16,000 சதுர கி.மீ. காடுகளின் பரப்பளவு தொடர்ந்து அதிகரித்து வரும் உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

சமூக ரிசர்வ் காடுகளின்  எண்ணிக்கையிலும் உயர்வு  ஏற்பட்டுள்ளது. 2014ல் வெறும் 43 ஆக இருந்த இவை 2019ல் 100க்கும் அதிகமாக அதிகரித்துள்ளன.

தோராயமாக 75,000 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட 52 புலிகள் காப்பகங்கள் உள்ளன. உலக அளவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 75% இந்தியாவில் உள்ளன. 2022 ஆம் ஆண்டை விட நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே 2018 ஆம் ஆண்டிலேயே புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் இலக்கை இந்தியா அடைந்துள்ளது. இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2014 இல் 2,226-லிருந்து 2018 இல் 2,967 ஆக அதிகரித்துள்ளது.

2014ல் ரூ.185 கோடியாக இருந்த  புலிகள் பாதுகாப்புக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 2022ல் ரூ.300 கோடியாக அதிகரித்துள்ளது.

ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 2015 இல் 523-லிருந்து 28.87 சதவிகிதம் (இதுவரை அதிக வளர்ச்சி விகிதங்களில் ஒன்று) அதிகரித்து தற்போது  674 ஆக உயர்ந்துள்ளது.


இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல், முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் திரு நரேந்திர சிங் தோமர், திரு பூபேந்தர் யாதவ், திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா, திரு  அஸ்வினி சவுபே ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த