முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தலைமை ஆசிரியை இரஞ்சிதம் கொலையில் சம்பந்தப்பட்ட அவரது உறவுப்பெண் கள்ளக்காதலனுடன் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் கான்பாநகரில் கணவர் உயிரிழந்த நிலையில் சொந்த வீட்டில்


தனியாக வசித்தவர், ரஞ்சிதம்(வயது 52). தென்மாபட்டு அரசினர் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றியவர். செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி புதன்கிழமை அவரது வீட்டில் கால்,கை நரம்புகள் அறுக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் 

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள், மற்றும் மோப்ப நாயை வரவழைத்து தீவிரமாக விசாரித்தனர். தடயங்கள் கிடைக்காத நிலையில், கொலைக் குற்றவாளியைப் பிடிக்க முடியாமல் திணறிய நிலையில் கடந்த நான்கு நாட்களாக ரஞ்சிதத்தின் உறவினர்களிடம் நடத்தப்பட்ட  விசாரணையில், தலைமை ஆசிரியை ரஞ்சிதத்தின் அக்காவின் மகளும், அவருடன் பிறந்த தம்பி பாண்டிவேல் முருகனின் மனைவியுமான நதியா (வயது 32) மீது காவல்துறையினருக்கு சந்தேகமெழுந்தது

திருப்பத்தூர் வட்டம் நெடுமரம் கிராமத்தில் வசித்த நதியா, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருவதற்கு முன்னரே வந்திருக்கும் தகவல் காரணமாக காவல்துறையினரின் சந்தேக வளையத்திலிருந்த அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.  காவல்துறையினர் தரப்பில் வரும் தகவல்:-, கொலை செய்யப்பட்ட ரஞ்சிதம், அவரது அக்கா மகள் நதியாவை, அவரது தம்பி பாண்டிவேல் முருகனுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். அவர்களுக்கு மூன்று குழந்தைகளுள்ள நிலையில் சிங்கப்பூரில் வேலை செய்து வரும் பாண்டிவேல் முருகன், மனைவி நதியாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், தனது அக்கா ரஞ்சிதத்திற்கு நேரடியாகப் பணம் அனுப்பி, வீட்டுச்செலவுக்கு மட்டும் மனைவி நதியாவிடம் பணம் கொடுக்கும் படி கூறியுள்ளார். 

அதனால் நதியாவின் சித்தி ரஞ்சிதம் மீது நதியாவுக்கு கோபமிருந்து வந்துள்ள நிலையில் நதியாவின் எதிர் வீட்டில் வசிக்கும் திருமணமாகாத நபரான சூர்யா (வயது 25) என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்ட நிலையில் பின் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்த நிலையில் நதியா  கள்ளக்காதலன் சூர்யாவிடம், அவரது சித்தி ரஞ்சிதம் அவரது கணவன் அனுப்பும் பணத்தை வைத்துக் கொண்டு, எனக்குத் தராமல் என்னை கடன்காரியாக அலைய விடுகிறாள்.

அவள் உயிரோடு இருக்கும் வரை நான் நிம்மதியாக வாழ முடியாது எனக் கூறிய நிலையில், சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவரிடம் சூரியா கூறியுள்ளார். 12 ஆம் வகுப்பு வரை படித்த சூர்யா, கொலை செய்தால் எப்படித் தப்பிக்கலாம்? சி.சி.டி.வி கேமரா ஹார்டு டிஸ்க்கை எப்படிக் கழட்டுவது? எனத் தெரிந்து கொள்வதற்காக அது சம்பந்தப்பட்ட காணொளிகளை யூடியூப்பில் கடந்த ஒரு மாதமாகப் பார்த்துக்  கற்றுள்ளார். மேலும், தடயங்கள் சிக்காத சந்தேகம் வராத வகையிலும் கொலை செய்து கொள்ளையடிப்பதற்காநதியாவிடம் பணம் கொடுக்கும்படி சொல்லியுள்ளார். இந்த நிலையில்,  செப்டம்பர் 6 ஆம் தேதி செவ்வாய்கிழமை நதியாவின் கணவர் ரூபாய் 1.50 லட்சம் பணம் அனுப்பியுள்ளது தெரியவந்த நிலையில். அன்றிரவு 9:30 மணி அளவில் தலைமை ஆசிரியை இரஞ்சிதம் வீட்டின் பின்புற சுவரேறிக்குதித்த பின்னர் அங்கு சூர்யா, மறைந்திருந்து தூங்குவதற்கு முன்பாக ரஞ்சிதம் வீட்டின் பின்புறமுள்ள கழிப்பறை சென்று விட்டு வீட்டுக்கு செல்லும் போது பின் தொடர்ந்த சூர்யா, கையுறை மாட்டிக்கொண்டு தலைமை ஆசிரியர் ரஞ்சிதத்தின் மூக்கையும் வாயையும் பொத்தி, இடதுகையால் கழுத்தை நெறித்து கீழே தள்ளியுள்ளார்.

அதனால் ரஞ்சிதம் மயங்கிக் கிடந்த நிலையில் அவர் வீட்டில் பீரோவிலிருந்த சுமார் 60 பவுன் நகைகள் மற்றும் சுமார் ரூபாய் 2.50 லட்சம் பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்ப முயன்ற போது மயக்கம் தெளிந்த ரஞ்சிதம் முனங்கிய சத்தம் கேட்டதால், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து யூடியூபில் பார்த்தவாறு ரஞ்சிதத்தின் வலது கை நரம்பை அறுத்துள்ளார். அப்போதும் உயிர் பிரியாததால், தொடர்ந்து கால் நரம்பையும் அறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு, சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கையும் திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பியோடிள்ளார். கொள்ளையடித்த நகை, பணத்தை கள்ளக்காதலி நதியாவிடம் கொடுத்து விட்டு எதுவும் நடக்காதது போல தனது வீட்டிற்குச் சென்று விட்டார்.

நதியாவின் சித்தி இரஞ்சிதம் கொலையில் அவர் மீது சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக, அடுத்த நாள் காலை காவல்துறையினர் அங்கு வருவதற்கு முன்னதாகவே நதியா சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்திருக்கிறார். எனவே, திருப்பத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மலைச்சாமி நதியாவின் மீது சந்தேகப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அடுத்தடுத்து வருகை தந்ததால், அப்போது தப்பித்துக் கொண்ட நதியா எதுவும் தெரியாதது போல துக்க நிகழ்வில் அழுது கொண்டு நடித்துள்ளார். மேலும், அவரது கள்ளகாதலன் சூர்யாவும் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், திருப்பத்தூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆத்மநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட மூன்று தனிப்படைகள் நடத்திய விசாரணையில் சிக்கிய நதியா, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவர்களிடமிருந்து சுமார் 60 பவுன் நகைகள், ரூபாய் 2.20 லட்சம் ரொக்கம், இரண்டு செல்போன்கள், சிசிடிவி ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த