முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காரைக்குடியில் புதிய சட்டக் கல்லூரி துவக்க விழா

காரைக்குடியில் புதிதாக தொடங்கப் பட்டுள்ள அரசு சட்டக் கல்லூரியில்


நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சமீபத்தில் தெரிவித்த நிலையில்.  டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும், இந்த கல்வி ஆண்டில், ஒருங்கிணைந்த  5 ஆண்டு சட்ட படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள் தொடங்கியது. சென்னை, தரமணியில் உள்ள பல்கலை கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் விண்ணப்ப பதிவையும் சமீபத்தில் தொடங்கி  வைத்ததில் உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன்,  துணைவேந்தர் சந்தோஷ் குமார், சட்டப் படிப்புகளுக்கான இயக்குனர் விஜய லட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

காரைக்குடி சட்டக் கல்லூரியில் நடப்பாண்டில் ஒருங்கிணைந்த  5 ஆண்டு படிப்பு மற்றும் 3ஆண்டு படிப்புகளுக்கான  சேர்க்கை நடக்கும்.  தமிழகத்தில் கூடுதலாக சட்டக்கல்லூரிகளை உருவாக்க கூடுதலாக நிதி  தேவைப்படுகிறது. இருந்தாலும், காரைக்குடியில் மாணவர் சேர்க்கை தொடங்கும். சட்டக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில்  கல்லூரிகளைத் தொடங்க  தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.





 மேலும் சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயமுத்தூர்,  திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, இராமநாதபுரம்,  சேலம், நாமக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில்  அமைந்திருக்கும் 14 அரசு  சட்டக்கல்லூரிகள் மற்றும் திண்டிவனத்தில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியிலுள்ள இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பெருங்குடி  வளாக சீர்மிகு சட்டப்பள்ளியில் 624 இடங்களுக்கும், இதர கல்லூரிகளில் உள்ள  1,731 இடங்களுக்குமென மொத்தம் 2 ஆயிரத்து 355 இடங்களுக்கு இந்த ஆண்டு  விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கலந்தாய்வு மூலம் அவை நிரப்பப்பட இருக்கின்றன. விண்ணப்பதாரர்கள் தகுதித் தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையிலும், இடஒதுக்கீடு மற்றும் சிறப்பு இட ஒதுக்கீடுகளின் அடிப்படையிலும்  வரிசைப்படுத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். என் அமைச்சர் தெரிவித்தார். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டக் கல்லூரி துவக்க விழா இன்று நடைபெற்றது.  காரைக்குடியில் சட்டக் கல்லூரி தொடங்கிய நிலையில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். 3 ஆண்டுகள் சட்டப்படிப்பில் முதலாமாண்டில் 80 மாணவர்கள், 5 ஆண்டுகள் சட்டப்படிப்பில் முதலாமாண்டில் 80 மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. தனி அலுவலராக திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் ராமபிரான் ரஞ்சித்சிங்கை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டது. காரைக்குடியில் சட்டக்கல்லூரி துவக்க விழாவானது அழகப்பா அரசினர் பொறியியல் கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றதில் அமைச்சர்கள் ரகுபதி, பெரிய கருப்பன், முன்னால் அமைச்சரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ள ப.சிதம்பரம், அவரது மனைவியும் மூத்த வழக்கறிஞருமான நளினி சிதம்பரம், சிவகங்கை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், காரைக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.மாங்குடி, ஆகியோர் குத்துவிளக்கேற்றினர் காரைக்குடியில் அரசு சட்டக்கல்லூரி துவக்க விழாவில்  மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதனரெட்டி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர், முன்னால் அமைச்சர் தமிழரசி சட்டத்துறைச் செயலாளர் கார்த்திகேயன், சட்டத்துறை முதல் பெண் இயக்குனர் டாக்டர். விஜய லெட்சுமி, உள்ளிட்ட அதிகாரிகள், மாணவர்கள், கட்சிகளின் பிரதிநிதிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...