பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் மதுரையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முன்னால் முதல்வர் அறிஞர் டாக்டர் சி.என்.அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு
பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வரை உள்ள வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் மதுரையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், குழந்தைகள் உணவின்றி பசியுடன் வகுப்பிற்கு வருவதனால், குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைப்பது, குழந்தைகளிடையே இரத்த சோகை - இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைப்பது, மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் மற்றும் பள்ளித் தக்கவைப்பை அதிகரிப்பது, வேலை செய்யும் பெற்றோரை ஆதரிப்பது மற்றும் அவர்களின் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்திட வகை செய்தல். ஊட்டச்சத்து குறைபாடுள்ள பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவதன் மூலம் கல்வித்தரத்தை மேம்படுத்துதல். பள்ளி பயிலும் மாணவ, மாணவியர் கல்வி இடைநிறுத்தம் செய்வதை தடுத்திடுதல். போன்ற காரணங்களால் முன்னால் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் முதலில் ஊரகப் பகுதிகளில் 01.07.1982 ஆம் தேதியன்றும் நகர்புறங்களில் 15.09.1982 ஆம் தேதியன்றும் உருவாக்கப்பட்டது தான் சத்துணவுத் திட்டமாகும் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகள், உள்ளாட்சி பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலம் மற்றும் உண்டு உறைவிடப்பள்ளிகள், தேசிய தொழிலாளர் திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்காகச் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்திற்கான நிதி மாநில மற்றும் மத்திய அரசுகளால் ஒதுக்கீடு மூலம் செயல் படுத்தப்படுகிறது. திட்டத்திற்கென மாநில அரசால் உணவூட்டு மானியங்கள், சமையலறை பழுதுபார்ப்புப் பணிகள், புதிய சமையலறையுடன் கூடிய இருப்பறை கட்டிடங்கள் கட்டுதல், எரிவாயு இணைப்பு வழங்குதல், சத்துணவு மையங்களுக்கு தேவையான சமையல் உபகரணங்கள் வழங்குதல் ஆகியவற்றிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மத்திய அரசால் தேசிய திட்டம், கண்காணிப்பு, மேலாண்மை மற்றும் மதிப்பீடுகள் திட்டத்தின் கீழ் உட்கட்டமைப்பு வசதிகள், திட்டத்தினை பொதுமக்களிடம் கொண்டு செல்ல ஏதுவாக விளம்பரங்கள் மேற்கொள்ளுதல், சத்துணவு பணியாளர்களுக்கு அவ்வப்போது புத்தாக்க பயிற்சிகள் வழங்குதல் ஆகிய பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சத்துணவு மையங்கள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் பொருட்டு மாவட்ட அளவிலான, வட்டார அளவிலான அலுவலர்களுக்கு ஆய்வுப்பணி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சத்துணவுத்திட்டத்திற்காக கிராம அளவிலான குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுக் குழு, வட்டார, கிராம அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு சத்துணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையின் காரணத்தை விளக்கி,க் காண்பதற்கு முன் கடந்த கால வரலாற்றைப் பார்க்கலாம் அப்போதைய சென்னை மாநகராட்சித் தலைவரும், நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான சர் பிட்டி தியாகராயர், பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களின் வலிமையை 'பெரிய அளவில்' பாதித்தது என்றார். அப்போது பள்ளியில் 165 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். இத்திட்டத்தில் மேலும் நான்கு பள்ளிகள் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐந்து பள்ளிகளின் மொத்த மாணவர் சேர்க்கை 1922-23 ஆம் ஆண்டில் 811 ஆக இருந்தது 1924-25 ஆம் ஆண்டில் 1,671 ஆக உயர்ந்தது. இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் 1957 ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் காலம்சென்ற கே.காமராஜர் , மாநிலம் முழுவதுமுள்ள அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும் ஆண்டுக்கு 200 நாட்கள் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 1982-ஆம் ஆண்டு தமிழக முதல்வரான டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன், தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சத்தான உணவை உறுதி செய்யும் திட்டத்தை அறிவித்தார்.2 முதல் 5 வயது மற்றும் 5 முதல் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜூலை மாதம் 1982 ஆம் ஆண்டு முதல் காப்பீடு வழங்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 1982 ஆம் ஆண்டில், இந்தத் திட்டம் நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 1984 ஆம் ஆண்டில், 10 முதல் 15 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நீட்டிக்கப்பட்டது. .1989-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய தமிழக முதல்வர் காலம்சென்ற கலைஞர் மு. கருணாநிதியால், பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அவித்து வழங்கும் முட்டைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 2007-ஆம் ஆண்டு அதை வாரத்தில் மூன்று நாட்களும் வழங்கப்பட்டது. 2010-ஆம் ஆண்டில், வாரத்தில் ஐந்து நாட்கள் அவித்த முட்டையும், முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழமும் வழங்கப்பட்டது. இதனால் சுமார் 5.7 மில்லியன் மாணவர்கள் பயனடைந்தனர். 2013-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் காலம்சென்ற செல்வி. ஜெ.ஜெயலலிதா குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப மசாலா முட்டைகளுடன் பலவகையான கலவை உணவுகளைச் சேர்த்தார்.
சத்துணவுத் திட்டம் தற்போது 43,243 மதிய உணவு மையங்களில் செயல்படுத்தப்பட்டு, தினமும் 48.57 லட்சம் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இது 5 முதல் 9 வயதுக்குட்பட்ட ஆரம்பப் பிரிவினருக்கும், 10 முதல் 15 வயதுக்குட்பட்ட உயர் தொடக்கப் பிரிவினருக்கும் வாரத்தில் ஐந்து நாட்கள், மொத்தமாக ஒரு வருடத்தில் 210 நாட்களுக்கு, சூடான சமைத்த சத்தான உணவு வழங்கப்படுகிறது.
காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய 16 மாவட்டங்களில் உள்ள தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளிகளில் சேர்ந்த குழந்தைகளுக்கும் ஒரு வருடத்தில் 312 நாட்களுக்கு, சூடான சமைத்த சத்தான பல்வேறு உணவு வழங்கப்படுகிறது. இச் சூழலில் தற்போது காலை உணவு வழங்கும் திட்டம் முதல்வர் துவங்கி வைத்தார்.
கருத்துகள்