முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டம்

என்பிடெல்-ஐஐடி சென்னை, தமிழில் இலவச ஆன்லைன் சீராக்கத் திட்டத்தை வழங்க சென்னை டிஸ்லெக்சியா சங்கத்துடன் இணைந்து செயல்படுகிறது


தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டம் ஐஐடி சென்னை, தமிழ்வழியில் கல்வி பயிலும் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான சீராக்கத் திட்டத்தை சென்னை டிஸ்லெக்சியா சங்கத்துடன் இணைந்து அளிக்கிறது. என்பிடெல் மூலம் எவ்வித கட்டணமும் இன்றி முற்றிலும் இலவசமாக ஆன்லைன் வழியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

டிஸ்லெக்சியா எனப்படும் கற்றல் குறைபாடு காரணமாக சிரமப்படும் குழந்தைகளைத் தொடக்க நிலையிலேயே சரியான நேரத்தில் கண்டறிந்து, அவர்களுக்கான தேவைகளின் அடிப்படையில் உரிய தீர்வுகளை வழங்கினால், ஆக்கப்பூர்வமான இளைஞர்களாக அவர்களை உருவாக்க முடியும். மொழி அடிப்படையிலான செயலாக்கத்தில் கடினமான டிஸ்லெக்சியா, ஆங்கிலத்தில் மட்டுமின்றி பிற மொழிகளிலும் நடைமுறைப்படுத்துவது சிரமமாகவே இருந்து வருகிறது 

எனவே, தமிழ்வழி தொடக்கப் பள்ளிகளில் படித்துவரும் டிஸ்லெக்சியா-வால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அடையாளம் காணவும், தீர்வு வழங்கவும் எம்டிஏ ‘தமிழ் வழிப் பயிற்சி’யை வடிவமைத்து மேம்படுத்தி உள்ளது.

'தமிழ் வழிப் பயிற்சி'த் திட்டத்தை ஐஐடி சென்னை இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, சென்னை டிஸ்லெக்சியா சங்கத் தலைவர் திரு.டி.சந்திரசேகர் ஆகியோர் வெள்ளிக்கிழமை (2 செப்டம்பர் 2022) தொடங்கி வைத்தனர்.  ஐஐடி சென்னை  டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா, என்பிடெல்-ஐஐடி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ், பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி, பேராசிரியர் ஆர்.நாகராஜன் மற்றும் இதில் தொடர்பு உடையவர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, "பரந்த சமுதாயத்திற்கு ஐஐடி சென்னையின்  தொடர்பு குறித்த கேள்விக்கு இந்த முன்முயற்சி சக்திவாய்ந்த ஒரு பதிலாக இருக்கும். என்பிடெல் மூலமாக இந்த கல்வி நிறுவனம் தொழில்நுட்ப உதவியை வழங்குவது மட்டுமின்றி, அதன் முன்னாள் மாணவர்கள் (திரு.சந்திரசேகர்) தலைமையில் இந்த முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஏஐ4பாரத்-ல் உருவாக்கப்பட்டு உள்ளதைப் போன்று செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர மொழி அடிப்படையில் பிற மொழிகளிலும் இந்த முன்முயற்சியை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு மொழிகளிலும் இதனை கிடைக்கச் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

'தமிழ் வழிப் பயிற்சி'யின் தாக்கம் குறித்து எடுத்துரைத்த, சென்னை டிஸ்லெக்சியா சங்கத் தலைவர் திரு. டி.சந்திரசேகர் கூறும்போது, "புள்ளிவிவரப்படி, 10 முதல் 15 விழுக்காடு அளவுக்கு குழந்தைகள் டிஸ்லெக்சியாவின் தாக்கம் காரணமாக பாதிக்கப்படுகின்றனர். பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் பரிசோதனை செய்வதும், அதனை மதிப்பீடு செய்து அதற்குரிய சீராக்கத்தை மேற்கொள்வதும் அவசியமாகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள இதுபோன்ற பள்ளிகளில் முன்கூட்டியே கண்டறிந்து சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுக்கும்" என்றார்.

பள்ளி மட்டத்திலேயே இதனைப் புரிந்து கொண்டு அதிகபட்ச முக்கியத்துவம் அளித்து சரிசெய்ய வேண்டியது அவசியம். அக்கறை கொண்ட பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த ஒட்டுமொத்த செயல்முறையில் முக்கிய பங்களிப்பு உண்டு. டிஸ்லெக்சியாவின் அடிப்படைகள், வகுப்பறைகளுக்குள் டிஸ்லெக்சியா உள்ள குழந்தைகளுக்கு எவ்வாறு அதனை செயல்படுத்துவது என்பதற்கான அடிப்படை நிலைப்பாடுகள் போன்றவற்றை  சென்னை டிஸ்லெக்சியா சங்கம்  ஆசிரியர்களுக்கு வெற்றிகரமாகப்  பயிற்சியளித்து வருகிறது.

சீராக்கக் கற்றல் முறை என்பது பிரத்யேக கல்வி முறைகளைக் கொண்டு கற்பிக்கப்படும் கட்டமைக்கப்பட்ட பல்வகைத் திட்டமாகும். குழந்தைகளின் தேவைகள் மற்றும் சிரமங்களைப் புரிந்து அதனை சமாளிப்பதற்கான உத்திகளை இத்திட்டம் வழங்குகிறது. செனானை டிஸ்லெக்சியா சங்கத்தைப்  பொறுத்தவரை ஆர்டன்-கில்லிங்ஹாம் என்ற அடிப்படையைக் கொண்ட சீராக்கப் பயிற்சி முறையை செயல்படுத்துவதுடன், பல்வகை நுண்ணறிவு அணுகுமுறைகளை தடை ஏதுமின்றி ஒருங்கிணைத்து வருகிறது

இதுபோன்ற குழந்தைகளுக்குத் தேவையான சீராக்கத்தை வழங்கும் வகையில்தான், 'தமிழ் வழிப் பயிற்சி' என்ற முழுமையான தொகுப்பை எம்.டி.ஏ. வடிவமைத்து மேம்படுத்தி உள்ளது. தமிழ் வழிக் கல்வி நடைபெறும் தொடக்கப் பள்ளி வகுப்புகளில்  பரிசோதனைக் கருவி மற்றும் டிஸ்லெக்சியா உள்ள குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் கற்பிக்கக் கூடிய உத்திகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் ஆகியவற்றை இந்தத் தொகுப்பு உள்ளடக்கியதாகும்.

'தமிழ் வழிப் பயிற்சி'யின் தனித்துவ அம்சங்கள் வருமாறு:

டிஸ்லெக்சியா, குழந்தை வளர்ச்சி, பரிசோதனை, வாசித்தல், சொற்கள் உச்சரிப்பு, எழுதுதல், கணிதம், படிக்கும் திறன், பல்வகை நுண்ணறிவுகள் பற்றிய அடிப்படைத் தொகுதிகள் என அனைத்தையும் உள்ளடக்கியது

சுய-வேகம், ஆன்லைன்

தொகுதிகள், சிறு பகுதிகளாகப் பிரித்தல்

ஒவ்வொரு தொகுப்புக்கும் வீடியோக்கள்

பயனுள்ள கற்றலுக்கு உதவும் தொகுதி-முடிவு குறுகிய வினாடிவினா

பகுப்பாய்வு மற்றும் வினாடி வினாவுடன் 7 பரிசோதனை ஆய்வுகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்