காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியின் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை
தொடர்ந்து 150 நாட்கள் 3500 கிலோமீட்டர் இந்தியாவை ஒருங்கிணைக்கும் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை
எனும் நடை பயணத்திற்கான முன்னெற்பாடுகளை சில தினங்களுக்கு முன்பே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் முன்னால் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த முன்னால் தலைவர்கள், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் செய்தனர். கன்னியாகுமரியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் இராகுல் காந்தி புறப்படும் நடைப்பயணம் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீரைச் சென்றடைகிறது.
அதில் பங்கேற்க இராகுல் காந்தி டெல்லியிலிருந்து விமானத்தில் நேற்றிரவு சென்னை வந்த நிலையில் விமான நிலையத்தில் அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் உற்சாகமாக வரவேற்பளிக்கப்பட்டது.
வெளியிட்டு அதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, வெறுப்பு அரசியல் மற்றும் பிரிவினைவாத அரசியலுக்காக என் தந்தையை இழந்தேன். ஆனால் எனது நாட்டை இழக்க மாட்டேன். வெறுப்புணர்வை அன்பு வெல்லும். பயத்தை நம்பிக்கை வீழ்த்தும். இரண்டும் இருந்தால் எந்த பிரச்சினையையும் சமாளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்ற ராகுல்காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி சென்றார். மாலை 4 மணிககு விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட்டு காந்தி மண்டபத்தின் நுழைவுவாயிலில் யாத்திரையைத் தொடங்குகினார். அவரது யாத்திரையை தேசிய கொடி அசைத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார்.
கருத்துகள்