முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரூர் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக பட்டதாரிப் பெண் கைது.

கரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் வேலைக்கு பணம் வாங்கி  மோசடியில் ஈடுபட்டதாக பட்டதாரி பெண் கைது.


அவர் காவலர் உள்பட 5 நபர்களை திருமணம் செய்து ஏமாற்றியது காவல்துறை விசாரணையில் தெரிய வந்த காரணமாக நடவடிக்கை கரூர் ஆதிமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சபரி (வயது 28). பி.காம் பட்டதாரியானவர் இவரது பெற்றோர் கரூரில் தேனீர் கடை நடத்தி வருகின்றனர்.  ஆடம்பர வாழக்கை வாழ  ஆர்வம் கொண்ட சபரி, மற்றவர்களை ஏமாற்றி பணம் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். புதுப்புது வழிகளில் பெயர் மாற்றம் செய்து ஏமாற்றுவது என்பது குறித்து. இவரது செயல்பாடுகள் பெற்றோருக்கு பிடிக்காததால், அவர்களைப் பிரிந்து ராமநாதபுரம் பகுதியில் ஒரு விடுதி அறையில் தங்கியிருந்தார்.

அப்போது, அவருக்கு ராஜேஸ் என்ற பணியிலிருந்த காவலருடன் பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் அவர் மூலம் தான் ஆடம்பரமாக வாழ  நினைத்த சபரி, அவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் மூலம் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, தனது கணவருக்கு மேலிடத்தில் நல்ல செல்வாக்குள்ளது எனக்கூறி தொடர்ந்து மோசடிச் செயல்களில் ஈடுபடத் துவங்கியதாக தெரிகிறது. கரூர், ராமநாதபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் கோடி கணக்கில் பணம் மோசடியில் ஈடுபட்டவர்,


பல காவலர்களிடமிருந்தும் பணத்தை அபகரித்துக் கொண்டு அணைவரிடமிருந்தும் விலகி விட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, மோசடி செய்த பணத்தில் கரூர் மணவாடி பகுதியில் வீடு வாங்கியதாகவும் கூறப்படும் நிலையில், மோசடி தொடர்பான புகாரில் இராமநாதபுரம் காவல்துறை சௌரியை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்தவர், அதே பகுதியைச் சேர்ந்த சதீஸ் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் கூறப்படுவதில் அவரிடமும் சில மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்தியவர், அவரையும்  விட்டு கரூருக்கு வந்து காந்திகிராமம் பகுதியில் குடியேறி  தனது கைவரிசையை காட்ட ஆரம்பித்தவர், வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றுவதாகக் கூறி பலரிடம் கடன் வாங்கித் தருவதாகவும், வேலை வாங்கித் தருவதாகவும் மீண்டும் மோசடியில் ஈடுபடத்துவங்கியதாகவும்.

மேலும் கரூரில் உள்ள ஒரு முக்கிய நபரின் உறவினர் எனக் கூறி, பலரிடம் வேலை வாங்கித் தருவதாக ரூபாய்.20 லட்சம் வரையிலும் மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளதாகவும் தற்போது பணம் கொடுத்து ஏமாந்தவர்களுக்குத் தெரிய வரவே அவர்கள், நேற்றுமுன்தினம் இரவு காந்திகிராமம் வீட்டில் வைத்து அவரைப் பிடித்து கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அவரிடம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேவராஜ், பசுபதிபாளையம் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்ட பின்னர், அவரை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இதுசம்பந்தப்பட்ட வழக்கு மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது. காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமாறன் தலைமையிலான குழுவினர் நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், பலரிடம் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்ததும், ஐந்துக்கும் மேற்பட்டோரைத் திருமணம் செய்து ஏமாற்றியதும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை, யார் யாரிடம் சௌரி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு   ஆதரவாக செயல்பட்ட நபர்கள் யார், எத்தனை பேரை இவர் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் என்பது குறித்தும் இவரை மோசடி செய்த நபர்கள் யார்? யார்?  என்பது குறித்து அவரிடம் தொடர்ந்து காவல் விசாரணை மேற்கொண்டனர். நீதிமன்ற விசாரணை முடிவில் இவர் செய்த குற்றம் உறுதியாக குற்றப்பத்திரிகையை தாக்கலாகும் போது தான் உண்மை தெரிய வரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த