முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரூர் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக பட்டதாரிப் பெண் கைது.

கரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் வேலைக்கு பணம் வாங்கி  மோசடியில் ஈடுபட்டதாக பட்டதாரி பெண் கைது.


அவர் காவலர் உள்பட 5 நபர்களை திருமணம் செய்து ஏமாற்றியது காவல்துறை விசாரணையில் தெரிய வந்த காரணமாக நடவடிக்கை கரூர் ஆதிமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சபரி (வயது 28). பி.காம் பட்டதாரியானவர் இவரது பெற்றோர் கரூரில் தேனீர் கடை நடத்தி வருகின்றனர்.  ஆடம்பர வாழக்கை வாழ  ஆர்வம் கொண்ட சபரி, மற்றவர்களை ஏமாற்றி பணம் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். புதுப்புது வழிகளில் பெயர் மாற்றம் செய்து ஏமாற்றுவது என்பது குறித்து. இவரது செயல்பாடுகள் பெற்றோருக்கு பிடிக்காததால், அவர்களைப் பிரிந்து ராமநாதபுரம் பகுதியில் ஒரு விடுதி அறையில் தங்கியிருந்தார்.

அப்போது, அவருக்கு ராஜேஸ் என்ற பணியிலிருந்த காவலருடன் பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் அவர் மூலம் தான் ஆடம்பரமாக வாழ  நினைத்த சபரி, அவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் மூலம் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, தனது கணவருக்கு மேலிடத்தில் நல்ல செல்வாக்குள்ளது எனக்கூறி தொடர்ந்து மோசடிச் செயல்களில் ஈடுபடத் துவங்கியதாக தெரிகிறது. கரூர், ராமநாதபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் கோடி கணக்கில் பணம் மோசடியில் ஈடுபட்டவர்,


பல காவலர்களிடமிருந்தும் பணத்தை அபகரித்துக் கொண்டு அணைவரிடமிருந்தும் விலகி விட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, மோசடி செய்த பணத்தில் கரூர் மணவாடி பகுதியில் வீடு வாங்கியதாகவும் கூறப்படும் நிலையில், மோசடி தொடர்பான புகாரில் இராமநாதபுரம் காவல்துறை சௌரியை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்தவர், அதே பகுதியைச் சேர்ந்த சதீஸ் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் கூறப்படுவதில் அவரிடமும் சில மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்தியவர், அவரையும்  விட்டு கரூருக்கு வந்து காந்திகிராமம் பகுதியில் குடியேறி  தனது கைவரிசையை காட்ட ஆரம்பித்தவர், வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றுவதாகக் கூறி பலரிடம் கடன் வாங்கித் தருவதாகவும், வேலை வாங்கித் தருவதாகவும் மீண்டும் மோசடியில் ஈடுபடத்துவங்கியதாகவும்.

மேலும் கரூரில் உள்ள ஒரு முக்கிய நபரின் உறவினர் எனக் கூறி, பலரிடம் வேலை வாங்கித் தருவதாக ரூபாய்.20 லட்சம் வரையிலும் மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளதாகவும் தற்போது பணம் கொடுத்து ஏமாந்தவர்களுக்குத் தெரிய வரவே அவர்கள், நேற்றுமுன்தினம் இரவு காந்திகிராமம் வீட்டில் வைத்து அவரைப் பிடித்து கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அவரிடம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேவராஜ், பசுபதிபாளையம் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்ட பின்னர், அவரை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இதுசம்பந்தப்பட்ட வழக்கு மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது. காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமாறன் தலைமையிலான குழுவினர் நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், பலரிடம் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்ததும், ஐந்துக்கும் மேற்பட்டோரைத் திருமணம் செய்து ஏமாற்றியதும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை, யார் யாரிடம் சௌரி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு   ஆதரவாக செயல்பட்ட நபர்கள் யார், எத்தனை பேரை இவர் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் என்பது குறித்தும் இவரை மோசடி செய்த நபர்கள் யார்? யார்?  என்பது குறித்து அவரிடம் தொடர்ந்து காவல் விசாரணை மேற்கொண்டனர். நீதிமன்ற விசாரணை முடிவில் இவர் செய்த குற்றம் உறுதியாக குற்றப்பத்திரிகையை தாக்கலாகும் போது தான் உண்மை தெரிய வரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...