சண்டிநகர் விமானப்படை நிலையத்தில் உள்ள கருட் ரெஜிமென்டல் பயிற்சி மையத்தில் மரூன் பெரெட் பாரம்பரிய அணிவகுப்பு
விமானப்படை சிறப்புப் படை கமாண்டோக்களின் பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததைக் குறிக்கும் வகையில், மரூன் பெரட் எனப்படும் சர்வதேச அடையாள பாரம்பரிய அணிவகுப்பு சண்டி நகர் விமானப்படை நிலையத்தில் உள்ள கருட் ரெஜிமென்டல் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
ஏர் வைஸ் மார்ஷல் ராகேஷ் சின்ஹா இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு,அணிவகுப்பை ஆய்வு செய்தார். கருட் ரெஜிமென்ட் பயிற்சி மையத்தின் கமாண்டன்ட் விங் கமாண்டர் திரிலோக் சர்மா அவரை வரவேற்றார்.
இளம் கமாண்டோக்களிடம் உரையாற்றிய ராகேஷ் சின்ஹா, மாறிவரும் பாதுகாப்பு சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிறப்புப் படைகளின் திறன்களைப் பயிற்றுவித்தல், மேம்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். வெற்றி பெற்ற கருட் பயிற்சியாளர்களுக்கு அவர் மரூன் பெரட், திறமைக்கான கருட் பட்டைகளை அவர் வழங்கினார்
மேலும் திறமையான தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு கோப்பைகளை வழங்கினார். சிறந்த ஆல்ரவுண்டர் கோப்பை எல்ஏசி ஜோன்டேல் எஸ் பாலாசாஹேப்புக்கு வழங்கப்பட்டது.
கருத்துகள்