சொத்தின் வில்லங்கச் சான்றிதழ் விபரங்களை, மக்கள் இலவசமாகப் பார்க்கும் வசதியைப் பயன்படுத்த,
பதிவுத்துறை புதிய கட்டுப்பாடுகள் சில விதித்துள்ளது.
தமிழகத்தில், நஞ்சை புஞ்சை மானாவாரி மற்றும் தரிசு நத்தம் மனை ஆகிய நிலங்கள் வாங்குவோர் அதன் முந்தைய பரிமாற்றங்களை அறிய வில்லங்கச் சான்று தேவை வில்லங்கச் சான்றை, 'ஆன்லைன்' முறையில் இலவசமாக அறியும் வசதியை, 2013 ஆம் ஆண்டில் காலஞ்சென்ற முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா துவக்கி வைத்தார். அதனால், பத்திரப்பதிவு விபரங்களை, மக்கள் எளிதாகப் பார்க்க முடிந்தது. பதிவு பணியில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு நோக்கில் இது பேருதவியானது.
இந்த நிலையில், ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தி வில்லங்கச் சான்று பெறும் வசதி, 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்., 2ஆம் தேதியில், அமலானது. அப்போது, இலவசமாக வில்லங்கச் சான்றிதழ் விபரம் பார்க்கும் சேவை தொடரும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் பத்திரப்பதிவு இணையதள சர்வர் பிரச்னைகளை சரி செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இலவசமாக வில்லங்க விபரம் பார்க்கும் சேவையை பதிவுத்துறை அதிகாரிகள் முடக்கினர். உள்நுழைவு பதிவு செய்து, வில்லங்க விபரங்களை பார்க்கலாம் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. உள்நுழைவு ஐடி உருவாக்குதல், பயன்படுத்துதலில் தற்போது சிக்கல் இருப்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். பதிவுத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை, வெளிப்படைத் தன்மை குறித்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் பலர் கூறுகின்றனர்.
பொதுமக்கள் தங்கள் பெயரில் முறையான, 'லாக் இன்' எனப்படும் உள்நுழைவு பதிவு செய்து, வில்லங்க விபரங்களை பார்க்கலாமென பதிவுத்துறை அறிவித்துள்ளது.
ஒரு நபர் தன் பெயரில் உள்நுழைவு, 'ஐடி' உருவாக்கினால், அதை குறிப்பிட்ட காலத்துக்குத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. புதிதாக, 'ஐடி' உருவாக்குவதிலும் பல சிக்கல்கள் உள்ளன. பத்திரப்பதிவு பணிகள் சட்டப்படி முறையாக நடக்கிறது என்றால், அந்த விபரங்களை இரகசியமாக வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த விஷயத்தில், பதிவுத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை, அரசு நிர்வாகத்தில் வெளிப்படைதீ தன்மைக்கு, 'வேட்டு' வைக்கும் வகையில் ஊழல் மிகுந்த நிலையில் உள்ளது.
கருத்துகள்