வருமானவரி பற்றிய பயிலரங்கு
16 செப்டம்பர் 2022 – ஸ்ரீபெரும்புதூர் – ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம், சென்னை மண்டல வருமானவரி ஆணையமும் இணைந்து ஒருநாள் “வருமானவரி பிடித்தம் மற்றும் வரவு” பற்றிய (பயிலரங்கு) ஒன்றை நடத்தியது.
திரு.எம். அர்ஜுன் மானிக், வருமானவரி இணை ஆணையர் முதன்மை உரையாற்ற, ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் சிப்நாத் தேவ் அவர்கள் அனைவரையும் வரவேற்று வாழ்த்தி பேசினார். வருமானவரி ஆணையர் திரு.டி.வி.சுப்பாராவ் அவர்கள் நோக்கவுரையாற்ற வருமானவரி தாக்கல் செய்வதன் அவசியத்தையும், அதன் பலன்களையும் தாக்கல் செய்யாத்தால் வரும் சிக்கல்களையும் உதாரணத்துடன் நேர்த்தியாக விளக்கினார்.
சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களின் மத்திய அரசின் அலுவலகங்களில் பணியாற்றும் 43 பணியாளர்கள் கலந்து கொண்ட இப்பயிற்சி பயிலரங்கில் வருமானவரி அலுவலர்திரு.ராஜாராமன் மற்றும் வரி செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் மற்றும் முனைவர் ஆடிட்டர் திரு.அபிஷேக் முரளி ஆகியோர் வருமானவரி தாக்கல் பற்றிய நுட்பமான, மிக நுணுக்கமான விஷயங்களை விளக்கினார். மேலும்
மோசடிப் பேர்வழிகளிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமிழ்நாடு & புதுச்சேரி பிராந்திய வருமான வரித்துறை மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது
பண மோசடி செய்வதை நோக்கமாகக் கொண்டு அங்கீகரிக்கப்படாத மின்னஞ்சல் முகவரியிலிருந்து தவறான கடிதங்கள் / மின்னஞ்சல் அனுப்பி மக்களை ஏமாற்ற நேர்மையற்ற சக்திகள் முயற்சி செய்வது வருமானவரித்துறையின் கவனத்திற்கு வந்துள்ளது. இதே போல் தொலைபேசி அழைப்புகளும் வருவதாக தெரிகிறது.
உங்களின் சொந்தக் கணக்கிலிருந்து ஏதாவது தொகையோ அல்லது வரியோ அல்லது வேறு ஏதாவது ஒரு வகையில் பணம் செலுத்துவது பற்றி மின்னஞ்சல் / கடிதம் / தொலைபேசி அழைப்புகள் வரப்பெற்றால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறையின் அங்கீகரிக்கப்பட்ட www.tnincometax.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள துறையின் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண் மூலம் சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மக்களை வருமானவரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தத் துறையின் அதிகாரபூர்வ கடிதப் போக்குவரத்து அனைத்தும் DIN எனப்படும் ஆவண அடையாள எண்ணினை கொண்டிருக்கும் என்றும் அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே அனுப்பப்படும் என்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. எனவே, மோசடி பேர்வழிகளின் முயற்சிகளுக்கு இரையாக வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வரியை செலுத்துவதற்கு எந்த ஞஇணைய இணைப்பையும் வருமான வரித்துறை வழங்குவதில்லை. உரிய செலானில் இணையம் அல்லது வங்கி மூலம் மட்டுமே வரிசெலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இத்தகைய மோசடி பேர்வழிகளின் முயற்சிகளையும், மோசடியான மின்னஞ்சல் தகவல்களையும், புறக்கணிக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையர் திரு வி வித்யாதர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்