காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லோ மைனோ, இத்தாலியிலுள்ள அவரது வீட்டில் காலமானார்.
அவருக்கு வயது 90.கடந்த சில மாதங்களாக வயது முதுமை காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவரைப் பார்ப்பதற்காக சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்காவதேரா ஆகியோர் கடந்த 23 ஆம் தேதி டெல்லியிலிருந்து இத்தாலி சென்றனர்.
இந்த நிலையில், தற்போது அவர் இத்தாலியிலுள்ள அவரது வீட்டில் காலமானார். இத்தகவலை காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் தாயார் மறைவை யொட்டி இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் தமிழகத்தின் முதலமைச்சர்
ஆகியோர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது,
“திருமதி.சோனியா காந்தியின் தாயார் திருமதி.பாவ்லா மைனோவின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணம் முழுவதும் அவரது குடும்பத்துடன் உள்ளன”
கருத்துகள்