மலேசியாவின் முன்னாள் அமைச்சரும், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட டத்தோ சாமிவேலு வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்
மறைந்த டத்தோ சாமிவேலு மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராகப் பதவி வகித்தவர். நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்த் தலைமையில் மலேசியாவிற்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த சென்றபோது மிகவும் உதவியாக இருந்தவர் மறைந்த டத்தோ சாமிவேலு. . பழகுவதற்கு இனிமையானவர். தமிழர்களை மிகவும் மதிக்க கூடியவர். அவருடைய மறைவு உண்மையில் ஈடு செய்ய முடியாத இழப்பு.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும்ஷபல சமூக மற்றும் அரசியல் பிரமுகர்கள் தெரிவித்துள்ள நிலையில்.
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வேண்டுகிறோம். மேலும் பிரதமர் அலுவலகம் சார்பில்
மலேசியாவின் முன்னாள் கேபினெட் அமைச்சர் துன் டாக்டர் எஸ். சாமி வேலுவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
மலேசியாவின் முன்னாள் கேபினெட் அமைச்சரும், முதலாவது வெளிநாடு வாழ் இந்திய சம்மான் விருது பெற்றவருமான, துன் டாக்டர் எஸ். சாமி வேலுவின் மறைவு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
மலேசியாவின் முன்னாள் கேபினெட் அமைச்சரும், மலேசியாவின் முதல் வெளிநாடு வாழ் இந்திய சம்மான் விருது பெற்றவருமான துன் டாக்டர் எஸ்.சாமி வேலுவின் மறைவுவால் மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி." எனக் கூறியுள்ளார். மேலும்
"மலேசிய இந்திய காங்கிரசின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவரும், 29 ஆண்டுகள் அந்நாட்டின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்த மூத்த தலைவருமான துன் எஸ். சாமிவேலு அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது.
"மலேசிய இந்திய காங்கிரசின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவரும், 29 ஆண்டுகள் அந்நாட்டின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்த மூத்த தலைவருமான துன் எஸ். சாமிவேலு அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் மலேசிய வாழ் இந்தியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்