முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீதிமன்ற வளாகத்தில் கடன் வசூலுக்கு குன்டர்களை அனுப்பிய டிவிஎஸ் பைனான்ஸ் சார்பில் வாகனம் திருடியவர் மீது வழக்கு

நீதிமன்ற வளாகத்தில் கடன் வசூலுக்கு குன்டர்களை அனுப்பிய டிவிஎஸ் பைனான்ஸ்  சார்பில் வாகனம் திருடியவர் மீது வழக்கு .   


புதுக்கோட்டையில் கடந்த 45 ஆண்டுகளாக இருந்த அரசு பொது அலுவலக வளாகம் தற்போது     ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகமாக மாற்றப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதன் மூலம், ஒழுங்குபடுத்தப்பட்டு பல சுழலும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் பகுதியாகும்.

சுமார் 22 ஏக்கர் பரப்பளவிலான இந்த வளாகம் புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.       இங்கு புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கமும் நீதிமன்றங்களுக்கு மத்தியில் செயல்படுகிறது.  இங்கு வழக்கறிஞர் தொழில் நடத்தும் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர். புதுக்கோட்டை தெற்கு இரண்டாம் வீதியிலுள்ள சட்ட அலுவலகத்தைச் சார்ந்த வழக்கறிஞர் சத்யா என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திலிருந்த சமயம் பார்த்து, ஒரு மாதம் தவணைத் தொகை தாமதமான நிலையில், முறையான பறிமுதல் உத்தரவு இல்லாமல் குண்டர்களை ஏவி வாகனத்தைத் திருடி எடுத்த டிவிஎஸ் பைனான்ஸ் நிறுவனத்தின் ஏவல் பணியாளரான  அருன் என்பவர் மீது வழக்கறிஞர் சத்யா சார்பில் புதுக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில்


வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகனமும் எடுத்துச் சென்ற நபரிடமிருந்து உடனடியாக மீட்கப்பட்டது. துனிச்சலாக  நீதிமன்ற வளாகத்தில் வந்து இந்தச் செயலை எந்தவிதமான நீதிமன்றத்திலும் அனுமதி மற்றும் உத்தரவுகளை பெறாமல் அதிலிருந்த பணம் மற்றும் பொருட்களுடன் தூக்கிச் சென்ற நபர் குறித்து மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்னர் தான் புதுக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோல் பல இடங்களில் இவர்கள் கைவரிசை காட்டிய நிலையில் இது முதல் முன்னுதாரணமாக உள்ள வழக்காகப் பார்க்கப்படுகிறது. அது குறித்து பல மூத்த வழக்கறிஞர்கள் சார்பில் பேசப்படுகிறது. இதுபோன்ற தவறு இனிமேல் எங்கும் நடக்காமல் தடுக்க இது நல்ல பொது நீதியாகும். இதுபோன்ற வட மாநிலத்தில் கடன் வசூலுக்கு குண்டர்களை ஏவிய ஐசிஐசிஐ வங்கிக்கு ரூபாய் .55 லட்சம் அபராதம்.

இந்தியாவின்  பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி, கலெக்ஷன் ஏஜெண்டுகள் என்ற பெயரில் குண்டர்களை வைத்து கடன் வாங்கியவர்களை மிரட்டி பணம் வசூல் செய்ததற்காக டெல்லி நுகர்வோர் ஆணையம் ரூ.55 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி உட்பட அனைத்து வங்கிகளும் டூ-வீலர் லோன், கார் கடன், தனிநபர் கடன், நகைக் கடன், வியாபார கடன், கிரடிட் கார்டு என பலவகை கடன் திட்டங்களை வைத்துள்ளன. இவற்றை புரமோட் செய்வதற்காக ஏஜென்டுகளை வைத்துள்ளனர். இந்த ஏஜென்டுகள் நம்மை போனிலும், நேரிலும் தொடர்பு கொண்டு லோன் வாங்குமாறு அனத்துவார்கள். நமக்குத் தேவை இல்லையென்று கூறினாலும் விட மாட்டார்கள். அவர்களின் தொல்லை தாங்க முடியாமல் சரி என்று கூறி விட்டால், அவர்களுக்கு தேவையான ஆவணங்களை வாங்கிக் கொண்டு லோனை தலையில் கட்டி விடுவார்கள்.




அதன் பின்னர் தான் தலைவலியே ஆரம்பிக்கும். சரியாக தவணையை கட்டிவிட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் நடுத்தர குடும்பத்தினருக்கு அப்படி முடியாமல் போய் விடுமே. இதனால் பணம் கட்டமுடியாமல் போய்விட்டால் லோன் வாங்குவதற்கு முன்னர் நம்மை தூங்க விடாத வங்கியினர், பணத்தை வசூல் செய்வதிலும் அதைவிட கொடுமையான செயல்களில் ஈடுபடுவார்கள். கடன்களை வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தாத பட்சத்தில், அவற்றை வசூலிக்க ஏஜென்டுகளை வைத்துள்ளனர். ஆனால் இந்த ஏஜென்டுள் பெரும்பாலும் குண்டர் படையினர் தான். கடன் வாங்கியவர்களை தொலைபேசியிலும், நேரிலும் போய் மிரட்டுவது, வீட்டுக்கு வெளியில் நின்று அசிங்கமாக திட்டுவது, அதையும் தாண்டி அடித்து உதைப்பது என அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்






பெரும்பாலான ஏஜென்டுகள். வசூலிக்கும் கடன் தொகையில் இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வங்கி கமிஷனாகத் தந்துவிடும். இதனால் கடன் வாங்கிய நபரை பாடாய் படுத்தி பணத்தை வசூலிப்பதில் இந்த ஏஜென்ட் எனப்படும் குண்டர்கள் வேகம் காட்டுவார்கள். இவர்களுக்கு பயந்து சில தற்கொலைகளும் கூட நடந்துவிட்ட நிலையில், இவர்களை அடக்குவார் இல்லை. இதுகுறித்து நீதிமன்றங்களும், ரிசர்வ் வங்கியும் வங்கி நிர்வாகங்களை கடுமையாக கண்டித்தும் பயனில்லை. வங்கி நிர்வாகங்களும், அவர்கள் வைத்துள்ள கூலிப் படையினரும் திருந்தியபாடில்லை. இதற்கு சமீபத்திய உதாரணம்

தபன் போஸ். டெல்லியைச் சேர்ந்த இவர் ஐசிஐசிஐ வங்கி மூலம் கார் லோன் வாங்கியிருந்தார். சரியாக மாத தவணையை கட்டி வந்த அவருக்கு பண நெருக்கடியால் மூன்று மாதங்கள் தொடர்ந்து பணத்தை கட்ட முடியாமல் போனது. தொடர்ந்து 3 மாதங்கள் அவர் கொடுத்த காசோலை வங்கியில் பணமில்லாத காரணத்தால் ரிட்டர்ன் ஆகிவிட்டது. இதனால் ஐசிஐசிஐ வங்கி நியமித்த ஏஜெண்டுகள், போஸின் காரை குறி வைத்து விரட்டினர். அதில் இருப்பது யார் என்று கூட பார்க்காமல் இரும்புக் கம்பிகளால் தாக்கினர். இதில் காரை ஓட்டிச் சென்ற போஸின் உறவினர் வினோத் குமார் தலையில் படுகாயமடைந்தார். அவரை இழுத்து ரோட்டில் போட்டுவிட்டு காரை பறிமுதல் செய்து கொண்டு போய்விட்டனர். (அப்போது காரில் தபன் போஸே இல்லை) வினோத்குமார் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தபன் போஸ் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் ஜே.டி.கபூர் ஐசிஐசி வங்கியின் செயலை கடுமையாக கண்டித்தார். அவர் பிறப்பித்த உத்தரவில், வங்கி கலெக்சன் ஏஜெண்டுகளால் தாக்கப்பட்டு மூளை பாதிக்கப்பட்ட வினோத் குமாரின் மருத்துவ செலவுக்காக ஐசிஐசிஐ வங்கி அவருக்கு ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும். அடியாட்களை வைத்து பொதுமக்களை மிரட்டி, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த காரணத்திற்காக நுகர்வோர் ஆணைய மேம்பாட்டு நிதிக்கு ரூ.50 லட்சம் அபராதமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.



கடன்களை வசூல் செய்வதற்கு அடியாட்களை வைத்து கடன் வாங்கியவர்களை மிரட்ட கூடாது என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கியும், உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளன. ஆனால் அதையும் மீறி இந்த செயல் நடந்ததால் ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.55 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் கலெக்சன் ஏஜெண்டுகளால் சமீபத்தில் கூட சென்னையில் ஒரு அப்பாவி வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது நினைவிருக்கலாம். அதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் உண்டு தனியார் நிதி நிறுவனங்கள், தவணை கட்ட தவறும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை, விதிமுறை மீறி, அடியாட்களை ஏவி, அடாவடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.தமிழகத்தில், ஆறு கோடி மக்கள் தொகை உள்ள நிலையில், இண்டு சக்கர, நான்கு சக்கர வாகனம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகன பயன்பாடு மிகுதியை குறி வைத்து, தனியார் நிதி நிறுவனங்கள் குறைந்த வட்டி விகித ஆசைகாட்டி, கவர்ச்சிகர விளம்பரம் மூலம், எளிதில் கடனுதவி அளிக்கின்றன.


இரு சக்கர, நான்கு சக்கர வாகனம் வாங்கும் ஆவலில், நிதி நிறுவனங்கள் நீட்டுகிற, 64 பக்கங்களில், நிறுவனங்கள் சுட்டிக்காட்டும் இடங்களில் கையெழுத்திடுகின்றனர்.வாகன கடன் வாங்குபவர்கள் முதலில், பிராசஸிங் ஃபீஸ், 3 சதவீதம் (அதாவது, ஒரு லட்ச ரூபாய்க்கு 3,000 ரூபாய்) வாகன மற்றும் கடன் பெறுபவர்கள் மீதான இன்சூரன்ஸ், 2,500 ரூபாய் வரை செலுத்திட வேண்டும். கடன் கொடுக்கப்பட்ட தேதியில் இருந்து, மாதம் தோறும், அதே தேதியில் தவணை செலுத்திட வேண்டும்.

ஒரு நாள் தவணை செலுத்த தவறினாலோ அல்லது, "செக் பவுன்ஸ்' ஆனால், 500 ரூபாய் தண்டம் கட்ட வேண்டும்.இதோடு விட்டு விடுவோமோ என்கிற ரீதியில் கட்ட தவறிய தவணை தொகைக்கு, நான்கு சதவீதம் வரை வட்டி விதிக்கப்படுகிறது. இவ்வாறு, 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்குபவர், அதை கட்டி முடிக்கும் போது, வட்டிக்கு வட்டி போட்டு, குறைந்தது, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகம் செலுத்த வேண்டி உள்ளது.ரிசர்வ் பேங்க் வகுத்த நெறிமுறையை பல தனியார் நிதி நிறுவனங்கள் மீறுகின்றன. நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர், வாடிக்கையாளர் ஒப்புதலுடன் வாகனம் பறிமுதல் செய்திட வேண்டும். மேலும், நீதிமன்றம், உள்ளூர் போலீஸ், ஆர்.டி.ஓ., உத்தரவுப்படி, முறையான ஆவணங்களை கொண்டு ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.விதிமுறை மீறி பல தனியார் நிதி நிறுவனங்கள், உள்ளூர் ரவுடிகளை வேலைக்கு அமர்த்தி, கடன் கட்ட தவறிய, கால அவகாசம் கேட்கும் வாடிக்கையாளர்களை மிரட்டி, அடாவடியாக வாகனங்களை பறிமுதல் செய்கின்றன. பறிமுதல் செய்த வாகனம், "யார்டில்' போட்டதற்காக, 1,500 ரூபாய் வரை, செலுத்திட வற்புறுத்துகின்றனர். 


இதுகுறித்து பலர் உண்மை சட்டம் அறியாமல் இருப்பதன் காரணமாக அவர்கள் இது போன்ற தவறுகள் தொடர்ந்து செய்து வருகின்றனர் மேலும் காவல்துறையில் பணியாற்றிய பின்னர் ஓய்வுபெற்ற ஏட்டுக்கள்,சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் இந்த வாகனம் பறிமுதல் செய்யும் குழுவில் வேலைக்குச் சேர்ந்து அதன் பின்னர் சட்ட விதிகளின் படி நடக்காமல் மீறுவது நாம் கண்ட உண்மை!. அதனால் இதுபோன்ற தவறுகள் காவல்நிலையத்தில் புகார்கள் வந்தால் அதை கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் தான் தற்போது புதுக்கோட்டை வழக்கறிஞர் சத்யா வழக்கு  அணைவராலும் பேசப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...