முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகன் குருபூஜை விழா பாதுகாப்புப் பணியில் 10 ஆயிரம் காவலர்கள்

பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகன் குருபூஜை விழாவில் 10,000 காவலர்கள் 


பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிலை. தடை விதிக்கப்பட்ட இடங்கள், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் சம்பந்தப்பட்ட காவல்நிலையங்கள் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.   


     காவல் துறை பிறப்பித்த உத்தரவுகளை மீறி நடந்து கொள்பவர்களையும் வாகனங்களையும் கண்காணிப்புக் காணொளி காட்சிப்பதிவு கருவிகளின் பதிவுகள் மூலம் ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பசும்பொன்னில் 13 ட்ரோன் கண்காணிப்புக் கருவிகள் , 92 நிரந்தர காட்சிப்பதிவு  சாதனங்கள் மூலம் கண்காணிப்புப் பணிக்காக பயன்படுத்தப்படுகிறது.             



   2014 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, தனது சொந்த நிதி மூலம் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் ஒன்றை செய்து வழங்கி இருந்தார். பாதுகாப்புக் கருதி அந்தத் தங்க கவசம் மதுரையிலுள்ள வங்கியில் இதுவரை அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவாலயப் பொறுப்பாளர்கள் இருவரின் கூட்டுப் பொருப்பில் கையெழுத்திட்டு பாதுகாப்புடன்

எடுத்து விழா முடிந்து திரும்ப வைத்துப் பயன்படுத்தப்பட்ட நிலையில் அதிமுக தற்போது முதலில் இரண்டு பிரிவுகளாகவும் மீண்டும் இரண்டு பிரிவாகவும் பிரிந்து செயல்படுகிறது. இந்த நிலையில் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும்  ஓ.பன்னீர்செல்வம்  இருவர் சார்பிலும் தங்களிடம் தங்கக் கவசத்தைக் கொடுக்குமாறு சென்னை  உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவில் இராமநாதபுரம் வருவாய



கோட்டாட்சியரிடம் ஒப்படைத்து மீண்டும் வங்கியில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தி இருந்ததையடுத்து வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் மதுரை வருவாய்த்துறை அதிகாரி சக்திவேல் மற்றும் தேவர் நினைவாலயம் சார்பில் கூட்டுப் பொறுப்பில் தங்கக் கவசம் பெற்று





பசும்பொன்னில் ராமநாதபுரம் பொறுப்பு வருவாய்த்துறை அதிகாரி ராஜசேகரன் மற்றும் தேவர் நினைவில்லம் சார்பில்  அதை வாங்கினர். தொடர்ந்து தேவர் நினைவிடத்தில் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. இதனையடுத்து நினைவிடத்தில் பூஜைகள் செய்யப்பட்டு ஆயுதம் ஏந்திய காவல்துறை  பாதுகாப்பு போடப்பட்டது.





தற்போது இன்று முதல் அரசியல் விழாவும் மற்றும் ஆன்மீக விழாவும் சிறப்பாக நடக்கிறது அதேபோல சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நேற்று முன்தினம் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 221-வது குருபூஜை விழாவிற்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களில் பலர் போக்குவரத்து விதிமுறைகளை   மீறியதாக 247 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு ரூ.3 லட்சத்து 66 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இதே போல் நாளை(ஞாயிற்றுக்கிழமை) தேவர் திருமகன்  குருபூஜைக்குச் செல்பவர்கள் கட்டாயம் விதிமுறைகளை பின்பற்றி செல்ல வேண்டும். அவ்வாறு  செல்லாமல் விதிமுறைகளை மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.      குருபூஜைக்கு ஆளும் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வருகை

பசும்பொன் தேவர் திருமகனார் அவர்களின் 115 வது பிறந்தநாள் விழா மற்றும் 60 வது  குருபூஜைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 

வராததால்  பசும்பொன்னுக்கு மகன்  உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றப் பேரவை உறுப்பினராக வருகிறார். அவர்களுக்கு சிவகங்கை மாவட்ட திமுக  சார்பில், திருப்புவனத்தில் மதியம்  1.00 மணி அளவில் திமுக வரவேற்பு அளிக்கிறது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட , ஒன்றிய, நகர, பேரூர்  நிர்வாகிகள்,   தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் திமுக தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அமைச்சர் பெரிய கருப்பன் கேட்டுக்கொண்டுள்ளார்     

தேவர் குருபூஜை  விழாவை முன்னிட்டு, மதுரை மாநகரில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று லாரிகள் மற்றும் கனகர வாகனங்கள் காலை 6 மணிமுதல் இரவு 10.30 மணி வரை நகருக்குள் கோரிப்பாளையம் தேவர் சிலை நோக்கி நுழையத் தடை செய்யப்படுகிறது.விழாவிற்கு வரும் வாகனங்களைத் தவிர, மற்ற வாகனங்கள் தேவர் சிலை நோக்கிவரும் சாலைகளில் செல்வதற்கு அனுமதியில்லை. நத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு ஆகிய பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் பாண்டியன் ஹோட்டல் சந்திப்பில் திரும்பி மாற்று பாதையாக கக்கன்சிலை, ராஜா முத்தையா மன்றம், கே.கே.நகர், ஆவின் சந்திப்பு, அண்ணாநகர் மெயின் ரோடு, பி.டி.ஆர். பாலம், காமராஜர் சாலை வழியாகச் செல்லவேண்டும். மாட்டுத்தாவணி, ஆவின் சந்திப்பு ஆகிய பகுதிகளிலிருந்து நத்தம் ரோட்டிற்கு வரும் வாகனங்கள், ராஜாமுத்தையா மன்றம், அவுட் போஸ்ட், பாண்டியன் ஹோட்டல், தாமரைத்தொட்டி, புது நத்தம் ரோடு வழியாக செல்லவேண்டும். வடக்குவெளி வீதியிலிருந்து யானைக்கல், புதுப்பாலம் வரும் வாகனங்கள், பாலம் ஸ்டேசன் ரோடு, எம்.எம். லாட்ஜ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கான்சாபுரம் ரோடு, அரசன் ஸ்வீட்ஸ், பெரியார் மாளிகை வழியாகச் செல்ல வேண்டும். அதே போல், மேலமடைபகுதியிலிருந்து கோரிப்பாளையம் நோக்கி நகருக்குள் வரும் வாகனங்கள், ஆவின் சந்திப்பிலிருந்து குருவிக்காரன் சாலை வழியாக நகருக்குள் செல்லவேண்டும். குறிப்பாக, தேவர் ஜெயந்தி விழாவிற்காக பசும்பொன் செல்லக்கூடிய பிறமாவட்ட வாகனங்கள், நகருக்குள் செல்ல காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வாகனங்களைத் தவிர இதர வாகனங்கள் நகருக்குள் வராமல் சுற்றுச்சாலை வழியாகச் செல்லவேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...