முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகன் குருபூஜை விழா பாதுகாப்புப் பணியில் 10 ஆயிரம் காவலர்கள்

பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகன் குருபூஜை விழாவில் 10,000 காவலர்கள் 


பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிலை. தடை விதிக்கப்பட்ட இடங்கள், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் சம்பந்தப்பட்ட காவல்நிலையங்கள் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.   


     காவல் துறை பிறப்பித்த உத்தரவுகளை மீறி நடந்து கொள்பவர்களையும் வாகனங்களையும் கண்காணிப்புக் காணொளி காட்சிப்பதிவு கருவிகளின் பதிவுகள் மூலம் ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பசும்பொன்னில் 13 ட்ரோன் கண்காணிப்புக் கருவிகள் , 92 நிரந்தர காட்சிப்பதிவு  சாதனங்கள் மூலம் கண்காணிப்புப் பணிக்காக பயன்படுத்தப்படுகிறது.             



   2014 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, தனது சொந்த நிதி மூலம் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் ஒன்றை செய்து வழங்கி இருந்தார். பாதுகாப்புக் கருதி அந்தத் தங்க கவசம் மதுரையிலுள்ள வங்கியில் இதுவரை அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவாலயப் பொறுப்பாளர்கள் இருவரின் கூட்டுப் பொருப்பில் கையெழுத்திட்டு பாதுகாப்புடன்

எடுத்து விழா முடிந்து திரும்ப வைத்துப் பயன்படுத்தப்பட்ட நிலையில் அதிமுக தற்போது முதலில் இரண்டு பிரிவுகளாகவும் மீண்டும் இரண்டு பிரிவாகவும் பிரிந்து செயல்படுகிறது. இந்த நிலையில் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும்  ஓ.பன்னீர்செல்வம்  இருவர் சார்பிலும் தங்களிடம் தங்கக் கவசத்தைக் கொடுக்குமாறு சென்னை  உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவில் இராமநாதபுரம் வருவாய



கோட்டாட்சியரிடம் ஒப்படைத்து மீண்டும் வங்கியில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தி இருந்ததையடுத்து வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் மதுரை வருவாய்த்துறை அதிகாரி சக்திவேல் மற்றும் தேவர் நினைவாலயம் சார்பில் கூட்டுப் பொறுப்பில் தங்கக் கவசம் பெற்று





பசும்பொன்னில் ராமநாதபுரம் பொறுப்பு வருவாய்த்துறை அதிகாரி ராஜசேகரன் மற்றும் தேவர் நினைவில்லம் சார்பில்  அதை வாங்கினர். தொடர்ந்து தேவர் நினைவிடத்தில் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. இதனையடுத்து நினைவிடத்தில் பூஜைகள் செய்யப்பட்டு ஆயுதம் ஏந்திய காவல்துறை  பாதுகாப்பு போடப்பட்டது.





தற்போது இன்று முதல் அரசியல் விழாவும் மற்றும் ஆன்மீக விழாவும் சிறப்பாக நடக்கிறது அதேபோல சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நேற்று முன்தினம் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 221-வது குருபூஜை விழாவிற்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களில் பலர் போக்குவரத்து விதிமுறைகளை   மீறியதாக 247 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு ரூ.3 லட்சத்து 66 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இதே போல் நாளை(ஞாயிற்றுக்கிழமை) தேவர் திருமகன்  குருபூஜைக்குச் செல்பவர்கள் கட்டாயம் விதிமுறைகளை பின்பற்றி செல்ல வேண்டும். அவ்வாறு  செல்லாமல் விதிமுறைகளை மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.      குருபூஜைக்கு ஆளும் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வருகை

பசும்பொன் தேவர் திருமகனார் அவர்களின் 115 வது பிறந்தநாள் விழா மற்றும் 60 வது  குருபூஜைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 

வராததால்  பசும்பொன்னுக்கு மகன்  உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றப் பேரவை உறுப்பினராக வருகிறார். அவர்களுக்கு சிவகங்கை மாவட்ட திமுக  சார்பில், திருப்புவனத்தில் மதியம்  1.00 மணி அளவில் திமுக வரவேற்பு அளிக்கிறது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட , ஒன்றிய, நகர, பேரூர்  நிர்வாகிகள்,   தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் திமுக தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அமைச்சர் பெரிய கருப்பன் கேட்டுக்கொண்டுள்ளார்     

தேவர் குருபூஜை  விழாவை முன்னிட்டு, மதுரை மாநகரில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று லாரிகள் மற்றும் கனகர வாகனங்கள் காலை 6 மணிமுதல் இரவு 10.30 மணி வரை நகருக்குள் கோரிப்பாளையம் தேவர் சிலை நோக்கி நுழையத் தடை செய்யப்படுகிறது.விழாவிற்கு வரும் வாகனங்களைத் தவிர, மற்ற வாகனங்கள் தேவர் சிலை நோக்கிவரும் சாலைகளில் செல்வதற்கு அனுமதியில்லை. நத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு ஆகிய பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் பாண்டியன் ஹோட்டல் சந்திப்பில் திரும்பி மாற்று பாதையாக கக்கன்சிலை, ராஜா முத்தையா மன்றம், கே.கே.நகர், ஆவின் சந்திப்பு, அண்ணாநகர் மெயின் ரோடு, பி.டி.ஆர். பாலம், காமராஜர் சாலை வழியாகச் செல்லவேண்டும். மாட்டுத்தாவணி, ஆவின் சந்திப்பு ஆகிய பகுதிகளிலிருந்து நத்தம் ரோட்டிற்கு வரும் வாகனங்கள், ராஜாமுத்தையா மன்றம், அவுட் போஸ்ட், பாண்டியன் ஹோட்டல், தாமரைத்தொட்டி, புது நத்தம் ரோடு வழியாக செல்லவேண்டும். வடக்குவெளி வீதியிலிருந்து யானைக்கல், புதுப்பாலம் வரும் வாகனங்கள், பாலம் ஸ்டேசன் ரோடு, எம்.எம். லாட்ஜ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கான்சாபுரம் ரோடு, அரசன் ஸ்வீட்ஸ், பெரியார் மாளிகை வழியாகச் செல்ல வேண்டும். அதே போல், மேலமடைபகுதியிலிருந்து கோரிப்பாளையம் நோக்கி நகருக்குள் வரும் வாகனங்கள், ஆவின் சந்திப்பிலிருந்து குருவிக்காரன் சாலை வழியாக நகருக்குள் செல்லவேண்டும். குறிப்பாக, தேவர் ஜெயந்தி விழாவிற்காக பசும்பொன் செல்லக்கூடிய பிறமாவட்ட வாகனங்கள், நகருக்குள் செல்ல காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வாகனங்களைத் தவிர இதர வாகனங்கள் நகருக்குள் வராமல் சுற்றுச்சாலை வழியாகச் செல்லவேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்