முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முடிசூடா மன்னர்கள் மருது சகோதரர் 221 வது குருபூஜை அரசு விழா

முடிசூடா மன்னர்கள் மருது சகோதரர் 221 வது குருபூஜை விழாவை



முன்னிட்டு இன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஆண்டுதோறும் போல அரசு விழா      அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி 1801 ஆம் ஆண்டில் துவங்கி ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஜெனரல் ஆக்னியூ தலைமையில் மருது பாண்டியர் சகோதரர்கள்,  அவர்களது போர்ப்படையில் பணியாற்றிய தளபதிகள், மருது பாண்டியர்களின் உறவினர்களின்  ஆண் வாரிசுகளான 10, 12 வயதே நிரம்பியபாலகர்களைத் தூக்கிலிட்ட கொடுமை உலக வரலாற்றில் ஒப்பீடு சொல்லவியலாத நிகழ்வுகளாகும். இந்நிகழ்வுகளை நேரில் கண்ட ஆங்கில ராணுவ அதிகாரி வெல்ஸ், ராணுவச் சட்டப்படி அவற்றைப் பொது வெளியில் தெரிவிக்க இயலவில்லை.

எனவே, லண்டன் சென்ற பின் ஜே.கோர்லே என்கிற எழுத்தாளர் மூலமாக Mahradu, an Indian Story of the Beginning of the Nineteenth Century: With Some Observations (1813) என்ற நூல் மூலம் விவரிக்கிறார்.
சிவகங்கைச் சமஸ்தானத்தில்  திருப்பத்தூர் கோட்டை அருகில் நடைபெற்ற கோரமுகம் காட்டிய படு கொலைகளை ஆங்கிலேயக் ராணுவ அதிகாரியாலேயே பொறுக்க முடியவில்லைஎன்றால், எத்தகைய கொடூரமான கொடுமைகள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன

என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். கோர்லே 10, 12 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் இராணுவ அதிகாரி தெரிவித்த செய்திகளைத் தானே அச்சிட்டு வெளியிட்டுள்ளார் என்றால், இவை குறித்த செய்திகள் வெளிவரக் கூடாது என்பதில் எத்தகைய அச்சுறுத்தலும், அபாயகரமான சூழ்நிலைகளும் நிலவியிருக்க வேண்டும் என்பதை நாம் இப்போது அனுமானிக்கலாம்.
மன்னர்கள் 
மருது பாண்டிய சகோதரர்களும், அவர்களது உறவு ஆண் வாரிசுகளும், தளபதிகளும், போராளிகளும் சிவகங்கை– திருப்பத்தூர் பகுதிகளில் கண்ணில்பட்டவுடன் உரிய விசாரணையும் மேலிட ஆணையுமின்றி அழித்தொழிப்பதற்கு ஆங்கிலேயர்களும் இங்குள்ள துரோகிகளும் இணைந்து திட்டமிட்டது தான் காரணம்.

இந்தக் கொடூரங்களால் கிடைத்த பயனை எதிரிகளும் துரோகிகளும் பங்கிட்டுக்கொண்ட நிகழ்வுகள் வரலாற்றில் தெளிவாகவே பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.
மைசூர் பகுதியில் ஆங்கிலேயருக்கு எதிரான போரில் மன்னர் ஹைதரலியின் படைத் தளபதி திப்பு சுல்தான் 1799 ஆம் ஆண்டில் மரணமடைந்தநிலையில், ஆங்கிலேயருடைய முழுக் கவனமும் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி  ஆதிக்கத்திற்கு அடிபணியாத இராஜ்ஜியங்கள், பாளையங்கள் மீது பாய்ந்தது. படிப்படியாக வாரிசுரிமை, வரிபாக்கி, ராணுவ உதவி என சுதேசி மன்னர்களிடமும் பாளையக்காரர்களிடமும் பிரச்சினைகளை உருவாக்குவதும், அந்தப் பிரச்சினைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அடிபணியாத அல்லது இசைவு தராதவர்களின் ராஜ்ஜியங்களையும் பாளையங்களையும் ராணுவ பலத்தின் மூலம் ஆக்கிரமித்துக் கைவசப்படுத்தினர். அப்பகுதிகளுக்குப் ‘பொம்மை ராஜா’க்களையும் போலி ஜமீன்தார்களையும், பாளையக்காரர்களையும் உருவாக்கும் திட்டப்படி ஆங்கிலேயர்கள் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார்கள்.

இந்த இருண்ட அரசியல் சூழ்நிலையில்தான் ஆங்கிலேயரின் ராணுவ பலத்துக்கும் நடவடிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க ஆயுதம் தாங்கிய மக்கள் புரட்சிக்கு மருது பாண்டியர்கள் திட்டமிட்டார்கள். இதற்கான யுத்தக் கூட்டணியும் அமைத்திருந்தார்கள். இந்த விவரங்களையும் நடவடிக்கைகளையும் ஆங்கிலேயர்கள் ஒற்றர்கள் மூலம் அறிந்துகொண்டார்கள். திப்பு சுல்தான் போர்க்களத்தில் இறந்துவிட்டமையாலும் இங்கிலாந்துக்கும்  பிரான்ஸுக்கும் தொடர்ந்து போர் நடந்துகொண்டிருந்ததாலும் ராணுவ உதவி கிடைக்க வாய்ப்பில்லை என்பதைத் தீர்க்கமாக அறிந்து தான் ஆயுதம் ஏந்திய மக்கள் புரட்சிக்கு மன்னர்கள் மருது பாண்டியர்கள் திட்டமிட்டார்கள்.



அதன் முதல் வெளிப்பாடாக சின்ன மருது பாண்டியர் தலைமையில் திருச்சிராப்பள்ளி ஆர்க்காடு நவாப் கோட்டைக்கும் திருவரங்கம் கோயிலுக்கும் சென்று ஆங்கிலேயருக்கு எதிரான போர்ப் பிரகடனத்தை 1801 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் தேதியன்று பகிரங்கமாக மக்கள் பார்வைக்கு  ஒட்டினர். இந்தச் செய்தி அறிந்த ஆங்கிலேய ராணுவம் சிவகங்கைப் பகுதியை முற்றுகையிட்டது. இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதன்முதலாக ஆங்கிலேயருக்கு எதிரான போர்ப் பிரகடனத்தை வெளியிட்டு, ஆங்கிலேயப் படைகளைப் போர்க்களத்தில் சந்தித்தவர்கள் மட்டுமல்ல, தங்களது உறவினர்களின்  ஆண் வாரிசுகளையே முழுமையாக இந்த மண்ணின் விடுதலைக்காகத் தியாகம் செய்தவர்கள் சின்ன மருது மகன் துரைச்சாமி சிறுவயதில் பினாங்குத் தீவுக்கு நாடுகட்தப்பட்ட நிகழ்வும். ஆனால், இந்த நிகழ்வுக்கு 50 ஆண்டுகள் கழித்து 1857 ஆம் ஆண்டில் நடைபெற்ற சிப்பாய்க் கழகம் என எழுச்சியை முதல் சுதந்திரப் போராட்டம் எனப் பதிவுசெய்திருப்பது வரலாற்றுப் பிழையாகும்.
தென்னகத்தில் நடைபெற்ற இந்தப் போர்க்களங்கள்தான் இந்தியத் திரு நாட்டின் முதல் சுதந்திரப் போராட்டமாக இருக்க முடியும். அதற்கான சான்றுகள் பல உண்டு. இந்த வரலாற்றுப் பிழையைத் திருத்திக்கொண்டு இந்தத் தென்னாட்டுப் போர்க்களங்கள்தான் முதல் சுதந்திரப் போராட்டம் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும். ஆங்கிலேய ஆதரவாளர்களின் கொடுமையும் கொடூரமும் நிறைந்த இந்தப் படுகொலைகள் நடைபெற்ற சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முதல் சுதந்திரப் போராட்ட வீர மரணங்கள் குறித்த நினைவிடங்களை உள்ளடக்கிய அருங்காட்சியகம் தொல்லியல் துறை மூலம் உருவாக்கப்பட வேண்டும்.

இந்த முயற்சிகளின் முன்னெடுப்பாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மருது பாண்டியர்களுக்குச் சென்னையில் சிலை வைப்பதாக அறிவித்துள்ளார். தென்னகத்தின் இந்தப் போர்க்களங்கள்தான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என அறிவிக்கவும், அது தொடர்பான அருங்காட்சியகம் அமைப்பதற்கும் மத்திய அரசின் உரிய ஒத்துழைப்புடன் முதல்வர் செய்து முடிப்பதன் மூலம் நமது பெருமை, புகழ், வீரத்தை உலகம் மீண்டும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.மன்னர்கள்
மருது பாண்டியர்களுக்கும், ஆங்கிலேயருக்கும் எதிரான அனைத்து தென்னகத்துப் போர்க்களங்களில் போராடி, உயிர் துறந்த, தூக்கிலிடப்பட்ட, நாடுகடத்தப்பட்ட முதல் சுதந்திரப் போராட்ட தீரர்களுக்கும் இந்தச் சிவந்த மண்ணில் உருவாக்கப்படவுள்ள நினைவாலயம் காலம் கடந்தும் இந்த வரலாற்றின் அணையா விளக்காக என்றும் ஒளி பரப்பிக்கொண்டேயிருக்கும்.       
  நினைவு நாள்  இன்று  நடைபெற்றதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வருவாய் மட்டும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் இராமச்சந்திரன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் திருப்பத்தூர் "மருது சகோதரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்". மருது பாண்டியர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தொடர்ந்து திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நினைவிடத்தில்  ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர்  மதுசூதன் ரெட்டி, விழா நடைபெறும் வளாகத்தில் காலையில் தேசியக் கொடியேற்றி  வைத்தார்.

நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர், தமிழரசி மற்றும்  உள்ளாட்சி  பிரதிநிதிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் சிவகங்கை மாவட்ட செய்தி துறை அதிகாரிகள் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் . சண்முக சுந்தரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜ செல்வன் மற்றும் வாரிசுதாரர்கள் சார்பில் த.ராமசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர். அனைத்து அரசியல் கட்சிகளின் சார்ந்த பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தினர்.மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் குருபூஜையை முன்னிட்டு, திருப்பத்தூரில் அமைந்துள்ள நினைவிடத்தில் அமமுக  பொதுச்செயலாளர்  டிடிவிதினகரன் அஞ்சலி செலுத்தினார்.

மருதுபாண்டியர் நினைவிடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது, முன்னால் சட்ட மன்ற உறுப்பினர்  குணசேகரன், கண்ணகி, சாத்தையா, பிஎல்.ராமச்சந்திரன் ,காளிமுத்து மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் இராம.அருணகிரி, வக்கில் பி. கணேசன்,எஸ்.ரமேஷ் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,