முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் 52வது பட்டமளிப்பு விழா மற்றும் நூற்றாண்டு விழா

இந்தியக் குடியரசுத் தலைவர் பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் 52வது பட்டமளிப்பு விழா மற்றும் நூற்றாண்டு விழா நிறைவு விழாவில் கலந்து கொண்டார்


இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மூ சண்டிகரில் இன்று (09-10-2022) பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் (பிஇசி)யின் 52வது பட்டமளிப்பு விழா மற்றும் நூற்றாண்டு விழா நிறைவு விழாவில் கலந்து கொண்டார் சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், 1921ஆம் ஆண்டு லாகூரில் நிறுவப்பட்ட பிஇசி, ஆராய்ச்சிக்கான முன்னணி நிறுவனமாக உருவெடுத்து, உலகளாவிய தொழில்நுட்ப மாற்றத்திற்கு வழி வகுத்துள்ளது என்றார்.


பஞ்சாப் பொறியியல் கல்லூரி நாட்டின் முதன்மையான நிறுவனம் மற்றும் இந்தப் பகுதியில் தொழில்நுட்ப கல்வியின் முன்னோடியாக விளங்குகிறது என்றார்.

தேசியக் கல்விக் கொள்கை- 2020 தெளிவு படுத்துவது என்னவெனில், ஒரு நல்ல கல்வி நிறுவனம் என்பது ஒவ்வொரு மாணவரையும் வரவேற்று, கவனம் செலுத்தப்பட்டு, நல்ல உள்கட்டமைப்பு மற்றும் தேவையான வளங்களைக் கொண்ட ஊக்கமளிக்கும் சூழல் நிலவ வேண்டும் என்பதாகும்.


பிஇசிக்கு இந்த அனைத்து தரமும் இருப்பது குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைந்தார். இந்த கல்லூரி தொடர்ந்து சிறந்து விளங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தொழில்நுட்பம், தொழில், குடியுரிமைச் சேவைகள், கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் நாட்டிற்கு பிஇசி பல மேதைகளை வழங்கியுள்ளது என்பதை குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

அவர்களில் சிலர்: இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர். சதீஷ் தவான், புகழ்பெற்ற கல்வியாளர் மற்றும் ஐஐடி, புதுதில்லியின் நிறுவனர்-இயக்குனர், பேராசிரியர் ஆர்.என். டோக்ரா,

ஏவுகணை தொழில்நுட்பம் மற்றும் வியூக அமைப்பின் நிபுணர் டாக்டர். சதீஷ் குமார், அறிவியலுக்காக சுய தியாகத்தின் உத்வேகம் மிகுந்த வரலாற்றை உருவாக்கிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பிஇசியின் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் துறையின் முன்னாள் மாணவியாகும் என்று அவர் கூறினார்.

பிஇசியில் ஜியோஸ்பேஷியல் டெக்னாலஜி துறையில் கல்பனா சாவ்லா என்று இருக்கை நிறுவப்பட்டிருப்பதைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் கூறினார். நாட்டின் முன்னேற்றத்திற்கு அதிக உத்வேகம் அளிக்க தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பெண் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றார்.

பட்டம் பெற்ற மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, வரம்புகள் இல்லாத வாய்ப்புகள் மற்றும் சாத்தியக்கூறுகள் நிறைந்த உலகில் நீங்கள் அடியெடுத்து வைக்கின்றீர்கள். நீங்கள் வாய்ப்புகளை சாதகமாக்கி வெற்றியடைந்து, சாத்தியங்களை நிச்சயமானதாகவும் மாற்றும் திறன் கொண்டவர்கள் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதைத் தேர்ந்தெடுத்தாலும் தாய்நாட்டிற்கான உங்கள் கடமைகளை ஒருபோதும் மறக்க வேண்டாம் என்றும் நாளைய இந்தியாவை உருவாக்குபவர்கள் நீங்களே என்றும் கூறினார்.

இந்த சிறப்புமிக்க கல்வி நிறுவனத்தில் பெற்ற அறிவை நீங்கள் மனிதகுல சேவையிலும் பயன்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன் என்றார்.

மகாத்மா காந்தியின் 'சர்வோதயா' குறித்த உறுதிப்பாட்டை மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட முன்னுரிமைகளில் வைத்திருக்கும்படி குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார்.

தேசத் தந்தையின் தத்துவங்களை நடைமுறைப்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின், குறிப்பாக இளைஞர்களின் தார்மீகக் கடமை என்றும் அவர் கூறினார்.

பிஇசி-யின் பட்டமளிப்பு விழாவிற்கு சற்று முன்பாக, சண்டிகர் யூனியன் பிரதேச சட்டமன்ற தலைமைச் செயலகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...