முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தடைசெய்யப்பட்ட சட்டப்பிரிவைக் கொண்டு இனி எந்தப் புகாரையோ மற்றும் கைது நடவடிக்கையோ எடுக்கக் கூடாதென உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தகவல் தொழில் நுட்பச் சட்டப்பிரிவு 66- A ன் கீழ் கணிப்பொறியின்,



தொழில்நுட்ப சாதனங்கள் வாயிலாக மற்றவர்களைத் தாக்கிப் பேசுவதும், அச்சுறுத்தும் பதிவுகள் மற்றும் பொய்யான தகவல்களைப் பதிவிடுவது  குற்றமாகும், மேலும்  மீறுவோருக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனையும், குறிப்பிட்ட தொகையை அபராதமாகவும் விதிக்கப்படும்.

2015-ஆம் ஆண்டு இந்தப் பிரிவுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்ததற்குக் காரணம், நாட்டின் பாதுகாப்பையோ அல்லது சமூகத்தின் அமைதியையோ சீர்குலைக்காத தனிநபரின் கருத்துக்கள் எப்படி தவறாகவும் ஆகும் , மேலும் கருத்து சுதந்திரத்தை உறுதிசெய்யும் சட்டப்பிரிவு 19-க்கு எதிராக இருப்பதால் அது நீக்கப்பட்டது.

குறிப்பாக, இச் சட்டப்பிரிவின் கீழ் பல மாணவர்கள்கள் கைது செய்யப்படுவதாகவும் , இது மக்களின் குரலை ஒடுக்கப் பயன்படுவதாகவும் சட்டக்கல்வி பயிலும் மாணவி ஒருவரால் தொடரப்பட்ட வழக்கில் இத் தீர்ப்பு வழங்கப்பட்டது.ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே தடை செய்யப்பட்ட சட்டப்பிரிவின் கீழ் தற்போதும் வழக்கு பதியப்படுவதாக தான்னார்வ அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு, ``தடைசெய்யப்பட்ட சட்டப்பிரிவைக் கொண்டு இனி எந்தப் புகாரையோ மற்றும் கைது நடவடிக்கையோ எடுக்கக் கூடாது



" எனத் தீர்ப்பு வழங்கியது. மேலும், ``இதை அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குனர்கள் மற்றும் காவல்துறையினரிடம் தெரியப்படுத்த வேண்டும். அதேபோல, தற்போது இதன் கீழ் போட்டப்பட்ட அனைத்து வழக்குகளும் மூன்று வாரங்களுக்குள் திரும்பப் பெற வேண்டும்" என அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் உத்தரவிட்டது.  சட்டப்பிரிவு 66-A ன் கீழ் வழக்குப் பதிவு செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் 2015-ஆம் ஆண்டு அறிவித்ததென்னவோ உண்மைதான். ஆனால், தடைசெய்யப்பட்ட சட்டப்பிரிவுக்கு மாற்றாக சில துணைப் பிரிவுகளின் கீழ் காவல்துறையால் வழக்குகள் பதியப்படுவதாகவும் 

உதாரணத்துக்கு.. அரசின் திட்டம் குறித்து கருத்தைப் பதிவிடும் நபர்கள் மீது சட்டப்பிரிவு 66-A பயன்படுத்துவதற்குப் பதிலாக சட்டப்பிரிவு 153-A ன் கீழ் `கலவரத்தைத் தூண்ட முயற்சி' எனும் அடிப்படையில் வழக்கு பதியப்படும். இப்படி ஒரு சட்டம் மறுக்கும் வாய்பினை, பிற சட்டங்கள் வழியாக காவல்துறையினர் பெற்றுக் கொள்கின்றனர்" என்கின்றனர் உச்சநீதிமன்றத்தின் பல மூத்த வழக்கறிஞர்ள் . அரசு கொண்டு வரும் திட்டத்திற்கும் அதன் கொள்கையின் மீதும் மாற்றுக்கருத்துள்ளவர்கள் அதை வெளிப்படுத்தவே இது போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டதேயன்றி. அரசுக்கு ஆதரவான கருத்தை மட்டுமே வெளிப்படுத்த எந்த சட்ட உரிமைகளும் தேவையில்லை.

பல சமயங்களில் சட்டப்பிரிவு 66-A தவறாகப் பயன்படுத்தப்படுவதால் தான் இந்தப் பிரிவை நீதிமன்றம் நீக்கியுள்ளது. இந்த ஒரு நடவடிக்கை, பேச்சுரிமைக்கு எதிரான செயல்பாடுகளை முற்றுலுமாகக் குறைக்காது. எனினும், காவல்துறையால் தவறாகப் பயன்படுத்துவது குறைய வாய்ப்பிருக்கிறது. இந்தச் சட்டப்பிரிவை அமல்படுத்துவதற்கு முன்பாகவும் காவல்துறை சார்பாக பொய் வழக்குகள் போடப்பட்டன. அதன் பிறகு, கொண்டுவரப்பட்ட இந்த சட்டப்பிரிவால், தனிநபர்கள் மீது அவர்கள் தகவல் தொழில் நுட்பச்சட்டத்தில் குற்ற தண்டனைச்சட்டமான இந்தப் பிரிவு இந்திய அரசியல் சட்டத்திலிருந்து நீக்கப்படுமென்று தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை நீக்க நீதிமன்றத்தில் சட்ட மாணவி ஸ்ரேயா சிங்கால் வழக்குத் தொடர்ந்தார். இச்சட்டம் 2000 ஆம் ஆண்டும் அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டும் திருத்தம் செய்யப்பட்டதற்கிடையில் 2013 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு பொது நல வழக்கிற்காக, இந்த பிரிவிற்காக ஒருவர் கைது செய்யப்படும் போது காவல்துறை ஐ.ஜி அளவிலான உயர் அதிகாரியின் ஆலோசனையின் மூலமே கைது செய்ய வேண்டுமென்றும் திருத்தம் செய்யப்பட்டது. சமூக வளைதளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் விமர்சனங்கள் அவதூராக இருந்தால் தொடர்புடையவரைக் கைது செய்ய வகை செய்யும் இந்தச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது பொது மக்களின் கருத்துச் சுதந்தரத்தைப் பாதிக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  2012 ஆம் ஆண்டு சிவ சேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே இறந்த போது அக்கட்சியினர் கடையடைப்புப் போராட்டம் நடத்தி வன்முறையில் ஈடுபட்டதான நிகழ்வை சமூக வளைதளத்தில் விமர்சித்து ஷாஹீன் தாதா என்ற பெண் எழுதினார். அதை அவளின் தோழி ரினு சீனிவாசன் என்பவர் ஆதரித்தார் என்பதற்காக இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் தற்போது இந்தச் சட்டம் நீக்கப்பட்டு விட்டதால் இவர்களின் வழக்கு நீக்கப்படும். அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில்  381 வழக்குகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 291 வழக்குகளும், உத்தரப்பிரதேசத்தில் 245 வழக்குகளும், ராஜஸ்தானில் 192 வழக்குகளும், ஆந்திரப்பிரதேசத்தில் 38 வழக்குகளும், அஷாமில் 59 வழக்குகளும், டெல்லியில் 28 வழக்குகளும், கர்நாடக மாநிலத்தில் 14 வழக்குகளும், தெலுங்கானாவில் 15 வழக்குகளும், தமிழ்நாட்டில் 7 வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 37 வழக்குகளும் இந்தச் சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் வாதி தரப்பில்  வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.

இந்தப் பிரிவு பேச்சுரிமையைப் பறிப்பதாக கூறித்தான் 2015 ல் உச்ச நீதிமன்றம் இதனை ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.சட்டப் பிரிவு 66ஏ ரத்து செய்யப்படுவதற்கு முன்பு அந்த பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட 229 வழக்குகள் மட்டுமே நிலுவையில் இருந்தன. ரத்து செய்யப்பட்ட பிறகு 1,307 வழக்குகள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் இன்னும் 570 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று என்று சஞ்சய் பாரிக் கூறியதாக அகில இந்திய தனியார் தொலைக்காட்சி . இணைய தளம் தெரிவிக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...