முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் காவல் ஆய்வாளர் திருமலை உள்ளிட்ட காவலர்கள் பணியிடை நீக்கம்

ஸ்டெர்லைட் தனியார் தாமிர ஆலைக்கு எதிராக  தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக. நீதிபதி அருனா


ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை வெளிவந்த பின்னர் சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்த நிலையில் நடவடிக்கையில்  இறங்கிய. காவல்துறை தலைமை இயக்குனர் சம்பந்தப்பட்ட  அதிகாரி மற்றும் காவலர்கள்  பணியிடை நீக்கம் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் அலட்சியமும், துாத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்குக் காரணம்' என நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும்  மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடேஷ், ஆணையம் முன்பாக அளித்த சாட்சியத்தில், இப்பிரச்னைக்கு உயர்நிலைக் குழு அவசியம் என்றும், அதற்கான குழுவில் அரசு சாரா வல்லுனர்கள், புற்றுநோயால் பாதிப்பிற்கு ஆளானவர்கள் பற்றி ஆராய வேண்டும் எனவும், தலைமைச் செயலாளருக்குத் தகவல் அனுப்பியதாகக் கூறியுள்ளார்.

மாவட்ட ஆட்சித்தலைவரின் சாட்சியப்படி, தலைமைச் செயலாளார், இந்தப் பிரச்னையை மேல் நடவடிக்கைக்காக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக உறுதி அளித்துள்ளார்.

உளவுத் துறை ஐ.ஜி., சத்தியமூர்த்தி அளித்த சாட்சியத்தில், கம்யூனிட்ஸ்ட் கட்சி சார்பு அமைப்புகளின் துாண்டுதலின் படி, போராட்டத்தில் மீனவர்கள் பெருமளவு கலந்து கொள்வார்கள் என்ற தகவலை, காவல்துறை டி.ஜி.பி., ராஜேந்திரனிடம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அப்போதய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை, சேலத்தில் சந்தித்து,           மீன்வளத்துறைச் செயலாளர் வாயிலாக மீனவர்கள் சங்கத்தினரை அழைத்து போராட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்க்குமாறு கேட்கலாம் என்ற கருத்தையும், சத்தியமூர்த்தி கூறியுள்ளார். அப்போதய

முதல்வருக்கு உளவுத் துறை தகவல் தெரிவித்தும், சட்டம் ஒழுங்கு நிலை கவனிக்கப்படாமலேயே இருந்தது, வியப்பை ஏற்படுத்துகிறது.

தீவிரமாக கவனித்திருந்தால் முற்றிலுமாக பிரச்னையை, ஆரம்ப கட்டத்திலேயே திறம்பட சமாளித்திருக்கலாம். அவ்வாறு செய்யாதது அலட்சியமாகவும், அசட்டையாகவும் இருந்ததற்கு உன்னத உதாரணமாக உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது காவல் ஆய்வாளராக பணியிலிருந்த திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருமலை தற்போது திருநெல்வேலி  மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையாளராகப் பணியாற்றி வருகிறார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தின் 100 வது நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பிரம்மாண்டமான பேரணியை பொதுமக்கள் நடத்தினர். மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை அடைந்த போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி போராட்டக்கார்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் அப்பாவிப் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழநாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, வன்முறை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அப்போதைய அதிமுக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. இதனையடுத்து, விசாரணை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. ஸ்டெர்லைட் கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவறிவிட்டனர். போராட்டக்காரர்களில் சிலர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கு முன் எவ்வித எச்சரிக்கையும் விடப்படவில்லை. அப்போதைய காவல்துறைத் தலைவர் சைலேஷ்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே இருந்திருந்தும், அப்போதைய காவல்துறைத் துணைத் தலைவர் அவராகவே அதிகாரத்தைக் கையிலெடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் உச்சபட்சமாக பொதுமக்கள் மீது சூப்பாக்கிச்சூடு நடத்திய காவலர் சுடலைக்கண்ணு பற்றியும் அதில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், டிஐஜி கபில்குமார் சரத்கர், டிஎஸ்பி லிங்க திருமாறன் ஆகியோரின் உத்தரவின் பேரில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது என தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ஐஜி சைலேஷ் யாதவ், டிஐஜி கபில்குமார் சரத்கர், காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன், காவல்துறை துணை கண்காணிப்பாளர்  லிங்க திருமாறன், காவல் ஆய்வாளர்கள் திருமலை, ஹரிகரன், பார்த்திபன், எஸ்ஐக்கள் சொர்ணமணி, ரென்னீஸ், காவலர்கள் ராஜா சங்கர், சுடலை கண்ணு, தாண்டவ மூர்த்தி, சதீஷ்குமார், ராஜா, கண்ணன், மதிவாணன் என பல பேர் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர்  மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனையடுத்து, சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் ஆகிய காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது காவல் ஆய்வாளராக இருந்த திருமலை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.  விசாரணைக் கமிஷன்களின் அதிகாரமென்ன. அறிக்கைகளால் பலன் கிடைக்குமா?                            சட்ட வழி உண்டா? ஓய்வு நீதிபதி  ஆறுமுகசாமி மற்றும் நீதிபதிஅருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டு விசாரணை ஆணையங்களின் அறிக்கைகளும் தமிழ்நாடு சட்டமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இரண்டு அறிக்கைகளிலும் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள், முன்வைக்கப்பட்ட விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் அதிர்ச்சிகளை ஏற்படுத்துகிறது.

 விசாரணை ஆணையங்களின் அறிக்கைகளுக்கு வலிமை உண்டா? சட்ட அதிகாரம்  இருக்கிறதா? அந்த அறிக்கைகளை வைத்து அரசு என்ன நடவடிக்கை எடுத்திட முடியும்? குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தண்டித்து விடமுடியுமா? என்றெல்லாம் பல கேள்விகள் இதில் அடங்கியுள்ளன. விசாரணை ஆணையங்கள் குறித்து சில விபரங்கள்.

விசாரணை ஆணையங்கள் என்ற சட்டத்தை 1952-ஆம் ஆண்டில் உருவாக்கிய மத்திய அரசு. அதற்கான ஆய்வு வரம்புகளையும், அந்த சட்டத்தில் வரையறை செய்திருக்கிறது. ஆக, அந்த சட்டத்தின் படியே மத்திய-மாநில அரசுகள் விசாரணை ஆணையங்களை அமைக்கின்றன. நாட்டில் ஒரு சம்பவம் நடக்கும் போது அது தேசிய அளவிலோ அல்லது மாநில அளவிலோ பெரும் தாக்கத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தால், குறிப்பிட்ட பிரச்சனைகள் அல்லது சம்பவம் குறித்து அரசாங்கத்துக்கு சில தெளிவுகளும் உண்மைகளும் தேவைப்படுவதனை அறிந்து கொள்வதன் மூலம் எதிர்காலங்களில் அப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கப்பட அல்லது ஒரு நல்ல முடிவினை எடுக்க அரசுக்குத் தேவை. அதற்காக, ஒரு விரிவான சுய அதிகார விசாரணையின் அடிப்படையில் ஒரு அறிக்கை தேவைப்படுகிறது. இது ஒரு முன்னெச்சரிக்கை என வைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் தான் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படுகின்றன.    அது பணியிலுள்ள நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று 1952-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.                நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷனின் பரிந்துரையின் பேரில் மூன்று  வட்டாட்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதோடு, தூத்துக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளராக இருந்த லிங்கத் திருமாறன் மற்றும் நான்கு  காவலர்கள்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, இந்த விஷயத்தை எவ்வளவு சீரியசாக எடுத்துள்ளது என்பதைத் தான் இது பிரதிபலிக்கிறது. ஆணையங்களின் மீதான நம்பிக்கை சற்று துளிர் விடத்துவங்கியுள்ளது. இது தொடருமா என்ற கேள்வியை விட இந்த அதிரடி தொடர வேண்டும்.. என்பதே சாமானிய மக்களின் கோரிக்கை மற்றும் அவா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,