முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோயமுத்தூர் கார்வெடிப்பு உபா சட்டத்தில் ஐவர் கைது மாநகர காவல் ஆணையர் தகவல்

கோயமுத்தூர் கார்வெடிப்பு உபா சட்டத்தில் ஐவர் கைது. 


 காரில் வெடித்து உயிரிழந்த கோயமுத்தூர்  உக்கடம் பகுதி ஜமேசா முபீனிடம் ஏற்கனவே தேசியப் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் விசாரணை செய்ததுள்ள நிலையில், அவரது வீட்டைக் காவல்துறையினர் சோதனையிட்டதில் சில இரசாயன வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சார்கோல், சல்பர் போன்ற நாட்டு வெடிகுண்டு தயார் செய்யக்கூடிய சில பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவ தினமான அக்டோபர் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்கு முன்தினம் சனிக்கிழமை அக்டோபர் 22 ஆம் தேதி நள்ளிரவில் ஜமேசா முபீன் தன் வீட்டிலிருந்து ஒரு மர்மப் பொருளை ஐந்து பேருடன் அவர் எடுத்துச் சென்றது அவர் வீட்டுப் பகுதியில் அமைந்துள்ள சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகிய நிலையில் அந்த சி.சி.டி.வியில் பதிவான  காட்சிகளின் படி காவல்துறையினர் ஜமேசா முபீனுடனிருந்த ஐந்து நபர்களைக் கைது செய்து விசாரணை செய்ததன் அடிப்படையில் உபா சட்டத்தில் ஐவரும் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து கோயம்புத்தூர் மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது பேசியவர், "வெடித்த மாருதி 800 கார் இதுவரை 10 கைகள் மாறியிருக்கிறது. அவர்கள் அனைவரையும் அன்றைய தினம் மாலைக்குள் பிடித்து விசாரித்தோம் இந்த வழக்கில் ஐந்து பேரைக் கைது செய்து புலன் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையின் அடிப்படையில், வழக்கின் பிரிவுகளை மாற்றியிருக்கிறோம். அதன்படி கைதானவர்கள் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA) வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. 20 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.

காவல் அதிகாரிகள் அருகிலேயே ரோந்துப் பணியில் இருந்தனர். அதன் காரணமாகத்தான் வாகனம் மேற்கொண்டு செல்லாமல் அங்கேயே வெடித்ததாகத் தகவலுள்ளது. உயிரிழந்த  ஜமேசா முபின் வீட்டிலிருந்து பொட்டாசியம் நைட்ரேட், சார்கோல்,அலுமினியம் பவுடர், சல்பர் என 75 கிலோ வெடி மருந்துக்கான வேதிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது, அவர்களின் பின்னணி என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. யூகங்கள் அடிப்படையில் நிறைய தகவல்கள் வெளியாகி வருகின்றன. சம்பவம் நடப்பதற்கு முன்பு இரண்டு  சிலிண்டர், மூன்று  டிரம்களை தூக்கிச் சென்ற சி.சி.டி.வி தான் வெளியானது. தடயவியல் அறிக்கை கிடைத்தால் தான் உறுதியாகச் சொல்ல முடியும். இப்போது கைதுசெய்யப்பட்டவர்களை, 2019 ஆம் ஆண்டு என்.ஐ.ஏ விசாரித்திருக்கிறது.  அது குறித்தும் விசாரிக்கிறோம். ரியாஸ், நவாஸ், பெரோஸ் ஆகிய மூன்று பேர் உண்மையைத் தெரிந்து கொண்டுதான் முபினுக்கு உதவி செய்திருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.             கோயமுத்தூர் கார்  சிலிண்டர் வெடிப்பு  ஜமேஷா முபின்  உயிரிழந்த விவகாரத்தில் அடுக்கடுக்கான அதிர்ச்சித் தகவல்களை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை  சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், "ஜமேஷா முபினின் உயிரிழப்பு தீவிரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பு என உளவுத்துறை கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால் மாநில அரசு அனைத்தையும் மறைக்கிறது, உண்மையை வெளிப்படுத்த வேண்டிய கடமை பாஜகவுக்கு உண்டு என குறிப்பிட்டார். மேலும் 

உயிரிழந்த ஜமேஷா முபின், கடந்த 21ஆம் தேதி அவருடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டசில்,

என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரிய வந்தால், நான் செய்த தவறை மன்னித்து விடுங்கள், எனது குற்றங்களை மறந்துவிடுங்கள், என்னுடைய இறுதி சடங்கில் பங்கேறுங்க, எனக்காக பிரார்த்தனை பண்ணுங்க என குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்  மேலும், ஜமேஷா முபீனின் வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் தகவல் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்-ஐ வைத்துப் பார்க்கும் போது, இது தற்கொலைப் படை தாக்குதலாக இருக்கும் என தெரிவித்தவர், இது உண்மை என்றால் கோவை மக்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.  தமிழக அரசு நிறைய விஷயங்களை மறைப்பதாக தெரிவித்தவர் 8 பேரை சட்டத்துக்கு புறம்பான கஸ்டடியில் காவல்துறை  வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். இத குறித்து டிஜிபி சைலேந்திர பாபு கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும் என கூறியவர், 5 பேரை எந்த பிரிவுகளில் கைது செய்தார்கள் என்ற தகவலை வெளியிடாதது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் தான் கோயமுத்தூர் மாநகரக் காவல்துறை ஆணையர் செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்ட தகவல் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...