முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வட இந்திய மக்கள் தலைவர் முலாயம் சிங் யாதவ் மறைவு தலைவர்கள் இரங்கல்

சுதந்திரத்துக்கு பிறகு  காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் ஜெயப்பிரகாஷ் நாராயண். அவரது பாதையில்  ராம் மனோகர் லோகியாவும் ஒருவர். இவரது செயல்பாடுகள் மற்றும் சமூகநீதிக் கருத்துகளால் கவரப்பட்டு அரசியலில் வந்தவர் தான் முலாயம் சிங் யாதவ்.

உத்திரப்பிரதேசத்தில் எட்டாவா மாவட்டத்தின் சைஃபை  கிராமத்தில் சுதார்சிங், மூர்த்தி தேவி ஆகியவர் மகனாக  விவசாயக் குடும்பத்தில்  இரண்டாவதாக 1939-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதியில் பிறந்தார் நான்கு  சகோதரர்கள், ஒரு சகோதரி என ஐவர் உடன் பிறந்தவர்கள். மெயின்புரியின் ஜெயின் கல்லூரியில் எம்.ஏ., பி.டி. வரை படித்த பிறகு அதே கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.


ராம் மனோகர் லோகியா நடத்தி வந்த ‘சவுகம்பா’ (நான்கு தூண்கள்) எனும் ஹிந்தி வார இதழ் மற்றும் ‘மேன்கைண்ட்’ எனும் ஆங்கில மாத இதழை  தொடர்ந்து படித்து வந்தார். இதில் லோகியாவின் கருத்துகளால் கவரப்பட்டு இந்திய சோஷலிச கட்சியின் கோட்டையாக இருந்த ஏட்டா பகுதியின், ஜஸ்வந்த் நகர் பேரவை தொகுதியில் போட்டியிட முலாயம் சிங் யாதவிற்கு வாய்ப்புகள் கிடைத்தது. அக்கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த சுதந்திரப் போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலியின் சிபாரிசில். முலாயம் சிங் யாதவ் இத்தொகுதியில் வென்று இந்தியாவின் இளம் எம்எல்ஏக்களில் ஒருவரானார். அப்போது முதல் அவரை மக்கள், ‘நேதாஜி’ என  அழைக்கத் தொடங்கினர்.

1977-ஆம் ஆண்டில் உத்திரப்பிரதேச. பேரவைத் தேர்தலில் 3-வது முறையாக தேர்வானவர் கூட்டுறவுத் துறை அமைச்சரானார்.பிறகு, மிசா சட்டத்துக்கு எதிராக உருவான ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும் முலாயம் சிங் யாதவ் இருந்தார். ஜன சங்கம் இரண்டான பிறகு சரண்சிங் தலைமையில் உருவான லோக் தளத்தின் உத்திரப் பிரதாச. மாநிலத் தலைவராக சில மாதங்கள் இருந்தார். முன்னால் பிரதமர்  சரண்சிங் மறைவுக்கு பிறகு லோக் தளம் கட்சி, லோக்தளம்-ஏ (அஜீத் சிங்), லோக் தளம்-பி (பகுகுணா) என இரண்டானது. இதில் பகுகுணா கட்சியின் உ.பி. மாநிலத் தலைவரானார் முலாயம். பிறகு பகுகுணாவும் இறந்து போக, இந்த சமயத்தில் காங்கிரஸில் இருந்து வெளியேறிய முன்னால் பிரதமர் வி.பி.சிங், ஜனதா தளம் கட்சியை உருவாக்கி அதில் லோக்தளம் கட்சிகளையும் இணைந்தார்.



லக்னோவில் 1992,ஆம் ஆண்டு  அக்டோபர் 4-ஆம் தேதியில் ‘சமாஜ்வாதி’ என்ற  புதிய கட்சியை தொடங்கினார். அடுத்து வந்த தேர்தலில் அவருக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவளிக்க, இரண்டாவது முறையாக முதல்வரானார் முலாயம் சிங் யாதவ்  , இரண்டு வருடம் மட்டுமே நீடித்த இந்த ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பின. அப்போது முதல்வராகும் ஆசையில் முலாயமிற்கு அளித்த ஆதரவை மாயாவதி வாபஸ் பெற்றார். வெறும் இரண்டு வருடங்களில் முதல்வர் பதவியை இழந்த முலாயம், 1996- ஆம் ஆண்டில் தேசிய அரசியலில் அடுத்து வந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று, தேவகவுடா அமைச்சரவையில்  பாதுகாப்புத் துறை அமைச்சரானார்.

மாயாவதியும் முலாயம் சிங்கும் பிரதான தலைவர்களாகி அங்கு மாறி, மாறி ஆட்சி செய்தனர். இந்திய நாட்டில் தனித்தன்மை கொண்ட தலைவர் முலாயம் சிங் யாதவ்முலாயம் சிங் யாதவ் இரண்டு திருமணம் செய்தவர். இவரது முதல் மனைவி, மால்தி தேவியை, 1974. ஆம் ஆண்டு  திருமணம் செய்தவர் மே 2003-ஆம் ஆண்டில் இறந்தார் அகிலேஷ் யாதவ் முலாயம் சிங் யாதவின் முதல் மனைவி மால்தி தேவி மகன் அகிலேஷ் 2012 முதல் 2017 வரை உத்தரபிரதேச முதல்வராக இருந்தார். 1990 ஆம் ஆண்டில் மால்தி தேவியை திருமணம் செய்துகொண்டார் பிப்ரவரி 2007 வரை குப்தாவ்டன்  நன்கு அறியப்பட்டவர் இவர்களது உறவு இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.  சாதனா குப்தாவின் முதல் திருமணத்தின் மூலம் பிரதீக் யாதவ் (பிறப்பு 1988) என்ற மகன் உள்ளார். சந்திர பிரகாஷ் குப்தா மற்றும் சாதனா குப்தா (முலாயமின் 2-ஆவது மனைவி) ஆகியோரின் மகன் பிரதீக் யாதவ்  பிரதீக்கின் மனைவி அபர்ணா பிஷ்த் யாதவ் (பிறப்பு 1990) 2022-இல் பாஜகவில் சேர்ந்தார். சாதனா குப்தா 2022 சூலையில் இறந்தார் 

தற்போது உடல்நலக் குறைவால் முலாயம் சிங் யாதவ் தமது  82 அகவையில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு பிரதமர்

முதுபெரும் அரசியல்வாதி திரு.முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திரு.யாதவ் விடாமுயற்சியுடன் மக்களுக்கு தொடர்ந்து சேவை ஆற்றினார் என்றும், ஜேபி. லோக்நாயக் மற்றும் டாக்டர்.லோகியாவின் கொள்கைகளை பரப்புவதில் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். திரு.யாதவ் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது வலிமையான இந்தியாவுக்காக உழைத்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.  திரு.யாதவ்-வுடனான தனது நெருங்கிய தொடர்பை நினைவு கூர்ந்த பிரதமர், யாதவின் கருத்துகளை கேட்க தான் எப்போதும் தயாராக இருந்ததாக தெரிவித்துள்ளார். யாதவுடனான தனது சந்திப்புகளின் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பிரதமர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது:

“திரு.முலாயம் சிங் யாதவ் ஆளுமை மிகுந்த தலைவர். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உணர்ந்த ஒரு சிறந்த தலைவராகவும், பணிவுமிக்க தலைவராகவும் அவர் அறியப்பட்டார்.  யாதவ் விடாமுயற்சியுடன் மக்களுக்கு தொடர்ந்து சேவை ஆற்றினார். ஜேபி. லோக்நாயக் மற்றும் டாக்டர்.லோகியாவின் கொள்கைகளை பரப்புவதில் தனது வாழ்நாளை அர்ப்பணித்து கொண்டவர்”.

“திரு.முலாயம் சிங் யாதவ், உத்தரப்பிரதேச அரசியலிலும், தேசிய அரசியலிலும் தனித்துவமிக்கவராக திகழ்ந்தார். அவசரநிலை பிரகடன காலத்தில் ஜனநாயகத்தை காப்பதில் முக்கிய வீரராக திகழ்ந்தவர். பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த அவர் வலிமையான இந்தியாவுக்காக பாடுபட்டார். தேசிய நலன்களை மேம்படுத்துவது குறித்து அவர் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தினார்”.

“நான் முதலமைச்சராக இருந்தபோது பலமுறை திரு.முலாயம் சிங் யாதவை தொடர்பு கொண்டுள்ளேன். அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததுடன், அவரது கருத்துகளை கேட்க எப்போதும் ஆவலுடன் இருந்தேன். அவரது மறைவு எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கும், லட்சக்கணக்கான ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி”.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த