முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆலயத் திருப்பணி அனுமதிக்கு லஞ்சம் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர் கைது ஐந்து லட்சம் பணம் பறிமுதல்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி வட்டம் குணசீலத்தைச் சேர்ந்த அரங்கநாதன் ஐயங்கார் மகன் பிச்சுமணி ஐயங்கார்.


பிரசித்தி பெற்ற குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதிப் பெருமாள் திருக்கோவிலில் பரம்பரை அறங்காவலராக இருந்து வருகிறார்.


கோவில் திருப்பணி மற்றும் குடமுழுக்கு  வேலைகள் நடந்து பனிரெண்டு ஆண்டுகளைக் கடந்து போனதால் தற்போது உபயதாரர்கள் மூலமாக திருப்பணிகள் நடத்த உத்தேசித்துள்ளார்கள் அதனால் அது சம்பந்தமாக முறையான அனுமதியை இந்து சமய அறநிலையத்துறையில் பெற்றுள்ளார்கள்.

அதற்கு மேலும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மாநில அளவிலான நிபுணர்கள் கமிட்டியில் ஆய்வறிக்கை பெறவேண்டிய நிலையில் இருந்துள்ளது. அது சம்பந்தமாக மேற்படி கமிட்டியினர் கடந்த  ஜூன் மாதம் 2 ஆம் தேதியன்று  மேற்படி கோவிலில் ஆய்வு செய்துள்ளனர். அதற்குப் பிறகும் ஆய்வறிக்கை கோவில் நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெறாதால் நிர்வாகத்தினர் மேற்படி கமிட்டியினரை மீண்டும்‌ தொடர்பு கொண்டுள்ளனர்.

அதற்குப் பிறகு கமிட்டியின் உறுப்பினரான தொல்லியல் துறை வல்லுனரான  மூர்த்தீஸ்வரி கடந்த 12.10.2022 அன்று மீண்டும் திருக்கோவிலுக்கு வந்து மேற்படி அறங்காவலரைச் சந்தித்து பத்து லட்சம்  ரூபாய் பணம் கொடுத்தால் கமிட்டியிலிருந்துஆய்வறிக்கை வழங்க இயலும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு பிச்சுமணி ஐயங்கார் பத்து லட்சம் ரூபாய் அதிகமாக உள்ளதாகவும் இதனை உபயதாரர்களிடமிருந்து கேட்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.


அதற்கு மூர்த்தீஸ்வரி, லஞ்சத்தை ஐந்து லட்சம் ரூபாய்  குறைத்துக் கொண்டு மீதி லஞ்சம் அஞ்சு லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் ஆய்வறிக்கை வழங்க முடியும் என்றும், முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் கொடுக்குமாறும் பிச்சுமணி ஐயங்காரிடம் டிமாண்ட் செய்து கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத பிச்சுமணி ஐயங்கார் திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும்  லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டனிடம் அளித்த புகாரின் பேரில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு  மற்றும்  லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த ஆலோசனையின் பேரில் பினாப்தலின் இரசாயனம் தடவிய பணத்தை பிச்சுமணி ஐயங்கார் மூர்த்தீஸ்வரியிடம் ஒரு லட்சம் ரூபாய் முன்பணத்தைக் கொடுத்த போது வாங்கியவர்   கையுடன்  பிடிபட்டார்.


ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் மேல் விசாரணையில் தமிழகத்தில் இது போன்ற பல கோவில்களுக்கு இந்த கமிட்டியினரால் ஆய்வறிக்கை வழங்கப்படாமல் கோவில்களின் திருப்பணி வேலைகள் பல நடைபெறாமல் நிலுவையில் உள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

மேலும் மூர்த்தீஸ்வரியின்  காரைச்  சோதனை செய்த போது அவரது காரில் கணக்கில் வராத ஐந்து லட்சம் ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதுவும் கைப்பற்றப்பட்டது. இந்து சமய  அறநிலையத் துறையில் இவர் போல நூற்றுக்கணக்கான அலுவலர்கள் உள்ளனர் இவர் ஒருவர் சிக்கிய நிலையில் சிக்காத லஞ்ச ஊழல்  பெருச்சாளிகள் பலர் உள்ளனர்

இதில் பணி ஓய்வு பெற்ற பின்னர் பணியில் நீடிக்கும் சில ஆலய கிளார்க் பணியில் பலர் உள்ளனர் அதில் சில ஆலயங்களில் உண்டியல் பணம் திருடி தண்டனை பெற்ற சிலரும் உண்டு. அறநிலையத் துறையில் புகார் அளித்தாரல் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல உள்ள நிலை ஆகவே தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கை தக்க சமயத்தில் நடந்தது பாராட்டுப் பெறுகின்றது.  தற்போது விசாரணை முடிவில் லஞ்சம் பெற்ற மூர்த்தீஸ்வரி சிறையில் அடைக்கப்பட்டார்.புகழ்பெற்ற வைணவ திருத்தலங்களில்  ஒன்று குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில்.. இங்கு என்ன சிறப்பென்றால், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிலிலிருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தம் காலை, மாலை இரு வேளையிலும் மருந்தாக இங்கு மனநலம் பாதித்து சிகிச்சை  பெரும் நபர்களுக்குத் தரப்படும். சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் தெளித்து மருத்துவம்  வழங்கப்படுகிறது.  இது பக்தர்களின் பெருத்த நம்பிக்கையாகவும் உள்ளது. ஏராளமானோர், மிகுந்த நம்பிக்கையுடன் இக் கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் ஆலய குடமுழுக்கு மற்றும் திருப்பணி அனுமதிக்கு  லஞ்சம் பெற்ற நபர் திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜாநகர் லட்சுமிபுரம் பகுதியைச்  சேர்ந்தவர் தான் தற்போது லஞ்சம் வாங்கும்போது கைதான மூர்த்தீஸ்வரி.. தொல்லியல் துறை வல்லுனராம் . ஓய்வு பெற்ற அறநிலையத்துறை அலுவலராம்.  மூர்த்தீஸ்வரியிடம் நட்திய தொடர் விசாரணை நடத்தப்பட்டதில்,.. இந்து சமய  அறநிலையத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார் என்றாலும், இப்படி பல கோவில்களில் லஞ்சமாகப் பணம் பெற்றதும், லஞ்சம் கொடுக்காத கோவில்களில் அறிக்கை சமர்ப்பிக்காமல் இவர் உட்பட இவரது குழுவினர்களும் ஒன்று சேர்ந்து இழுத்தடித்து வந்துள்ளார்களாம்.எனவே, இதில் இனி மற்ற அதிகாரிகளுக்கு இதில் சம்பந்தம் இருப்பதாக இலஞ்ச ஒழிப்புத் துறையில்  சந்தேகிக்கின்றனர்..

அதுமட்டுமல்ல, சம்பந்தப்பட்ட கோவிலை ஆய்வு செய்து 4 மாதங்காளாகியும் எதனடிப்படையில் அறிக்கையை சமர்ப்பிக்காமல் நிபுணர் குழுவினர் காலம் தாழ்த்தி வந்தனர் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணையை கையில் எடுத்திருப்பதால், பல பேர் இதில் சிக்குவார்கள் என்கிறார்கள். சட்ட வல்லுநர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த